திருவாசகம் | கோயில் திருப்பதிகம்
#SriThiripuraBhairaviAmbikaSamed #SriBhairaveshwaraSwami #Thavathirubhairavaswamigal #Sribhairavanilayam #Bhairavartemple #kalabhairavatemple ------------------------------------------------------------------ திருவாசகம் | கோயில் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே. 388 அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம்மாறு முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந்துறையாய் சிவபெருமானே சீருடைச் சிவபுரத்தரைசே. 389 அரைசனே அன்பர்க் கடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே திருப்பெருந்துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390 உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந்துறையுறை சிவனே குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே. 391 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே. 392 இரந்திரந் துருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந்துறையுறை சிவனே நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 393 இன்றெனக் கருளி இருல்கடிந்துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற்பாரே. 394 பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறையுறை சிவனே ஆருறவு எனக்கிங் காரய லுள்ளார் ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395 சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட்குன்றே திருப்பெருந்துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் வந்துநின் இணையடி தந்தே. 396 தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397 திருச்சிற்றம்பலம் ------------------------------------------------------------------ 📍 Sri Bhairava Nilayam, kandhikuppam, Bargur (Taluk), krishnagiri (dt), Tamilnadu. 📲+919445291224 ------------------------------------------------------------------- Connect with us on social media🌐 📸Instagram : / bhairavayugam 💙Facebook : / bhairavayugam 📺Youtube : / @bhairavayugam 🧵Threads : https://www.threads.net/@bhairavayugam ---------------------------------------------------------------- #மாறிநின்றென்னை_மயக்கிடும்_வஞ்சப் #திருவாசகம் #கோயில்_திருப்பதிகம் #எட்டாம்_திருமுறை #மாணிக்கவாசகர் #Thirumurai #Thiruvasagam #KovilThirupathigam #ugrakalabhairavar #Bhairavayugam #sprituality #divine #devotional #devotionalchannel #devotionalvideo #kandhikuppam #krishnagiri #Bargur #Bhairavayugam #kandhikuppam_temple #kandhikuppam_kalabairavar_kovil #kandhikuppam_bhairava_temple #kandhikuppam_bhairava_kovil #kandhikuppam_kalabairavar #kandhikuppam_bairavar_temple

நீத்தல் விண்ணப்பம் - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

திருவாசகம் கோயில் திருப்பதிகம் - சொ.சொ.மீ சுந்தரம் - Thiruvasagam Koyil Thirupathigam - தென்னாடு

கருப்பசாமி கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்த பக்தர் புளியரை கருப்பசாமி அருள் வாக்கு

வாழாப்பத்து - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

Veyuru Tholipangan

திருவாசகம் (பதிகம்-1) - சிவபுராணம் | ThavathiruBhairavaSwamigal

சொற்றுணை வேதியன் சோதி வானவன் | தேவாரம்

இந்த உலகில் உள்ள அனைத்து உறவுகளும் மாயைதான்! | Siddhar Secrets | Pragathiswar |

திருவாசகம் முற்றோதல் 18 . கோயில் திருப்பதிகம் - பவானி தியாகராஜன் -Thiruvasagam murtrothal

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் | பெரிய புராணம் | நடராஜர் | Laya Music Tamil

Koil Mootha Thirupathikal

திருவாசகம்-குழைத்த பத்து | ThavathiruBhairavaSwamigal

Koil Thiruppathikam

இறந்தவரின் ஆத்மா 48 நாட்கள் உறவுகளோடுதான் இருக்கும்! | Life After Death | Spiritual Awakening|

திருவேசறவு - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

🔥அனல் பறக்கும் 》》》 அடைக்கலப்பத்து | சிவ மேஷபிரதிப்பா | இளைஞர்களால் அதிகம் ஈர்க்கப்படும் திருவாசகம்

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

திருவாசகம் கோயில் மூத்த திருப்பதிகம் - சொ.சொ.மீ சுந்தரம் - Thiruvasagam Koyil Muththa Thirupathigam

தவத்திரு பைரவ சுவாமிகளின் பாடல் ஸ்ரீ பைரவ நிலையம் கந்திகுப்பம்

