வாழாப்பத்து - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்
திருச்சிற்றம்பலம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆதியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்ரறிவை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அரும்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பழுதில்சொல் புகழாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. திருச்சிற்றம்பலம் #SriThiripuraBhairaviAmbikaSamed #SriBhairaveshwaraSwami #Thavathirubhairavaswamigal #பைரவசுவாமிகள் #Bhairavaswamigal #Sribhairavanilayam #Bhairavartemple #kalabhairavatemple #ugrakalabhairavar #Bhairavayugam #kandhikuppam #krishnagiri #Bargur #Bhairavayugam #ஸ்ரீபைரவநிலையம் #கந்திகுப்பம் #kaalbhairav #kalabhairavatemple #kaalbhairava #bhairav #bairavar #bairavartemple #காலபைரவம் #kalabhairavam #பைரவம் #bhairavam #vala_pathu #வாழாப்பத்து #திருவாசகம் #Thiruvasagam #Manikkavasagar #thirumurai Sri Bhairava Nilayam, kandhikuppam, Bargur (Taluk), krishnagiri (dt), Tamilnadu. ------------------------------------------------------------------- Connect with us on social media🌐 📸Instagram : / bhairavayugam 💙Facebook : / bhairavayugam 📺Youtube : / @bhairavayugam 🧵Threads : https://www.threads.net/@bhairavayugam

திருப்படையாட்சி - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

திருக்கழுக்குன்றப் பதிகம் - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

🙏உருகும் அடியார் தம் சிந்தையில் உறைகின்ற உத்தமன்' என்பது (சிவபெருமான்) மட்டுமே!#trending#tamil#video

நாயன்மார்களே சிவனடியார்கள் | திருவாசகத்தினால் என் வாழ்கை இப்படி மாறியது | Tamil | Sivan Speech

திருவேசறவு - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

🙏இந்த symptoms இருந்தா ஈசன் உங்களுக்குள் வந்துவிட்டார் என்று அர்த்தம்#shiv#trending#viral#viralvideo

கருப்பசாமி கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்த பக்தர் புளியரை கருப்பசாமி அருள் வாக்கு

இந்த கலைக்கு ஜாதி மத பாகுபாடு கிடையாது.. சிலிர்க்க வைக்கும் சிவ வாத்தியம்! நந்தீசன் கலை குழு | N 360

🙏சிவாய நமவென்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூர்அரனே#tamil#shiv#trending#video

தாம்பரம் அருகில் ராணுவ மரியாதையுடன் ஜீவசமாதி அடைந்த சித்தர் | நிகழ்ந்த அற்புதங்கள்! | PART 1

ஜீவசமாதியில் என்ன நடக்கும் | Enlightenment process | samsheldons

திருவாசகம் | கோயில் திருப்பதிகம்

🙏🔥நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்தாயிற் சிறந்த தயாவான தத்துவனே"#trending#youtubevideo#shiv

திடீரென்று நயினாதீவில் வந்த வெள்ளை நாகம்🐍😱|பாலமுருகனின் நாதஸ்வரத்திற்கு இவ்வளவு சக்தியா?|Rj with Kj

சொற்றுணை வேதியன் சோதி வானவன் | தேவாரம்

சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒன்றா? | Pannisai Kalaingnan Deva | Devaram | Sivan | Murugan

திருவாசகம் - திருப்பொற்சுண்ணம் | Thiruvasagam - Thiruporchunnam | சிவதாமோதரன் ஐயா

புண்ணியம் இருந்தால்தான் இந்த வீடியோ உங்கள் கண்களில் படும்! | Miracles of Sivan Sar | TT Harish |

ராஜ கோபுரம் முன் நடந்த சிவனின் ருத்ர தாண்டவம்... காண கண் கோடி வேண்டும் #sivan #annamalaiyar

