திருவேசறவு - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக் கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. பச்சைத்தா ளரவாட்டீ படர்சடையாய் பாதமலர் உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன் சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான் அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா வோத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத் தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. திருச்சிற்றம்பலம் #SriThiripuraBhairaviAmbikaSamed #SriBhairaveshwaraSwami #Thavathirubhairavaswamigal #பைரவசுவாமிகள் #Bhairavaswamigal #Sribhairavanilayam #Bhairavartemple #kalabhairavatemple #ugrakalabhairavar #Bhairavayugam #kandhikuppam #krishnagiri #Bargur #Bhairavayugam #ஸ்ரீபைரவநிலையம் #கந்திகுப்பம் #kaalbhairav #kalabhairavatemple #kaalbhairava #bhairav #bairavar #bairavartemple #காலபைரவம் #kalabhairavam #பைரவம் #bhairavam #thiruvesaravu #திருவேசறவு #திருவாசகம் #Thiruvasagam #Manikkavasagar #thirumurai Sri Bhairava Nilayam, kandhikuppam, Bargur (Taluk), krishnagiri (dt), Tamilnadu. ------------------------------------------------------------------- Connect with us on social media🌐 📸Instagram : / bhairavayugam 💙Facebook : / bhairavayugam 📺Youtube : / @bhairavayugam 🧵Threads : https://www.threads.net/@bhairavayugam

நீத்தல் விண்ணப்பம் - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

வாழாப்பத்து - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

🔱திருவாசகத்தின் ரகசிய உண்மைகள் என்ன? | Thiruvasagam benefits in Tamil | Vadhavoradigal |ஆன்மீக glitz

பழங்குடி மக்களிடம் திருடப்பட்ட அலோபதி! மன்னர் மன்னன் வரலாற்று பேச்சு! Mannar Mannan Speech Part 1

அச்சோப் பதிகம் - முத்திநெறி மாணிக்கவாசகர்திருமுறை : எட்டாம்-திருமுறை-திருவாசகம் நாடு :சோழநாடு

ஆத்மாவை அழிக்கும் காமத்தின் வலை! திருவாசகம் மறைத்த ரகசியம் | Thiruvasagam Tamil

பொதுமக்களே பூஜை செய்யும் காசி சிவலிங்கம் | Kala Bhairava Temple | Marmam | Vasanth TV

தவத்திரு பைரவ சுவாமிகளின் பாடல் ஸ்ரீ பைரவ நிலையம் கந்திகுப்பம்

🙏 சிதம்பம் நடராசர் சிலையை முதலில் யாரால்? உருவானது? தெரியுமா?#trending#tamil#video#shiv

கட்டிப்பிடித்து காப்பாற்றிய மகிந்த 😱 மதுவந்தியின் டீல் அம்பலம் 💥 Tamil News | SK Kiruththikan

சொற்றுணை வேதியன் சோதி வானவன் | தேவாரம்

#போற்றி_திரு_அகவல் | Thiruvasagam | Potri thiru agaval | சிவ. தாமோதரன் அய்யா | தமிழர்சமயம்

திருக்கோத்தும்பி - திருவாசகம் | தவத்திரு. பைரவ சுவாமிகள்

திருமுறை பற்றி சொல்லி பிரமிக்க வைத்த டீக்கடைக்காரர் | கண்டேன் கடவுளை | DinamalarAnmeegam

மாணிக்கவாசகர் கண்ட திருவாசகம் | ஆன்மீகத்தில் ஆனந்தம் 96 | Sankara Narayanan Inspiring Speech

ஈசனை மயக்கும் இசை 🔱 திருவிழாக்கால நடை 🔱 திருக்கைலாய வாத்திய இசை பாகம் 3 🔱 Temple TV

சூரியனைப் பற்றி யக்ஷன் கேட்ட 4 கேள்விகள்! | Mahabharatham | Yaksha Prashnam 03 | Tamil

பதினெண் சித்தர்கள் வரலாறு - அகத்தியர்-பகுதி-1

🔴 ஏய்..! கை நீட்டி பேசாத..😡 திடீரென கடுப்பாகி கத்திய உதயநிதி ஸ்டாலின்

