திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு - திருநாவுக்கரசர் தேவாரம்

05.050 திருவாய்மூர் | எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு | திருநாவுக்கரசர் தேவாரம் | ‪@ThiruneriyaThamizhosai‬ திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்த விடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீல விடங்கர் என்று பெயர். நடனம் கமல நடனம். ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும். இத்தலத்தில் எட்டு பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால் இப்போது நான்கு தான் இருக்கின்றன. பைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன் இத்தல இறைவனிடம் "யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும்" என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள்புரிந்தார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வாய்மூர் நாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பாலினும் நன்மொழியம்மை திருமுறை : ஏழாம் திருமுறை 050 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் திருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது தான் பத்து பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும் ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். திருமறைக்காட்டில் அப்பரைக் காணாத சம்பந்தர் அவரைத் தேடிக் கொண்டு திருவாய்மூர் வந்து சேர்ந்தார். அப்பர் கவலையுடன் திருவருளை அறியாமல் திருக்கதவு திறக்கப் பத்து பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய எனக்கு காட்சி தராவிட்டாலும் ஒரு பாட்டிலேயே கதவு அடைக்கச் செய்த சம்பந்தருக்காவது தங்கள் திருக்கோலத்தை காட்டியருள வேண்டாமோ என்று கூறினார். இறைவனும் சம்பந்தருக்கு மட்டும் திருக்கோலம் காட்டி அருளினார். சம்பந்தர் தான் கண்டு களித்த இறைவன் திருக்கோலத்தை அப்பருக்கும் காட்டினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. அப்பரும் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் "பாட வடியார் பரவக் கண்டேன்" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி வாய்மூர்நாதரை வணங்கினார். அப்பர் திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் இறைவன் அம்மையப்பனாக காட்சி அளித்த ஒரே திருத்தலம் திருவாய்மூர். 00:20 எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு அங்கே வந்து அடையாளம் அருளினார் தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வா என்று போனார் அது என்கொலோ. ..... (01) 02:03 மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்கு தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி என்னை வா என்று போனார் அது என்கொலோ. ..... (02) 03:43 தஞ்சே கண்டேன் தரிக்காலாதார் என்றேன் அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே. ..... (03) 04:31 கழியக் கண்டிலேன் கண் எதிரே கண்டேன் ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன் வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள் தம் சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ. ..... (04) 05:59 ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று உள்கி உள்கி உகந்து இருந்தேனுக்குத் தெள்ளியார் இவர் போல்த் திருவாய்மூர் கள்ளியார் அவர் போலக் கரந்ததே. ..... (05) 06:53 யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னின் ஆதேயேயும் அளவில் பெருமையான் மாதேவு ஆகிய வாய்மூர் மருவினார் போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ. ..... (06) 07:51 பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல் தேடிக் கொண்டு திருவாய்மூர்க்கே எனா ஓடிப் போந்து இங்கு ஒளித்தவாறு என்கொலோ. ..... (07) 08:54 திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே. ..... (08) 10:03 தனக்கு ஏறாமை தவிர்க்கென்று வேண்டினும் நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடு நின்மலன் எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனாப் புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ. ..... (09) 11:10 தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும் மிதித்தார் அரக்கன் தனை வேண்டிக் கொண்டேன் திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன் நான் என்றலும் தோன்றுமே. ..... (10) பொருளுரை : பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன்; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான். ஆலய முகவரி : அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில், திருவாய்மூர், திருவாய்மூர் அஞ்சல், வழி திருக்குவளை S.O. நாகப்பட்டினம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN 610 204. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

திருமழபாடி - நீறேறு திருமேனி உடையான் கண்டாய் - திருநாவுக்கரசர் தேவாரம் @ThiruneriyaThamizhosai
▶︎

திருமழபாடி - நீறேறு திருமேனி உடையான் கண்டாய் - திருநாவுக்கரசர் தேவாரம் @ThiruneriyaThamizhosai

பகவன் நாமா சொல்றவாளுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவும் கிடையாது! | சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத் | உபன்யாசம்
▶︎

பகவன் நாமா சொல்றவாளுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவும் கிடையாது! | சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத் | உபன்யாசம்

திருச்சோற்றுத்துறை - கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் - திருநாவுக்கரசர் தேவாரம்
▶︎

திருச்சோற்றுத்துறை - கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் - திருநாவுக்கரசர் தேவாரம்

இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - ஒளியெறி நுதலாய் இறைவா - Oliyeri Nuthalai Iraiva - Best Tamil Speech
▶︎

இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - ஒளியெறி நுதலாய் இறைவா - Oliyeri Nuthalai Iraiva - Best Tamil Speech

நாள் என் செயும் | நீயல்லால் தெய்வம் இல்லை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |Live Recording
▶︎

நாள் என் செயும் | நீயல்லால் தெய்வம் இல்லை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |Live Recording

ஒத்தடம் கொடுக்கும் முறை! | FASTER Results! | How to apply Warm Compress! | Technique | healer baskar
▶︎

ஒத்தடம் கொடுக்கும் முறை! | FASTER Results! | How to apply Warm Compress! | Technique | healer baskar

17 வயதில் பையன் இருந்தும், அம்மா செய்யும் காரியமா இது? கணவரின் ஆதங்கம் | Unmai Vellum Ep - 48
▶︎

17 வயதில் பையன் இருந்தும், அம்மா செய்யும் காரியமா இது? கணவரின் ஆதங்கம் | Unmai Vellum Ep - 48

Wife went to the restroom on a train journey and didn't return, what happened?
▶︎

Wife went to the restroom on a train journey and didn't return, what happened?

ஆத்மாவை அழிக்கும் காமத்தின் வலை! திருவாசகம் மறைத்த ரகசியம் | Thiruvasagam Tamil
▶︎

ஆத்மாவை அழிக்கும் காமத்தின் வலை! திருவாசகம் மறைத்த ரகசியம் | Thiruvasagam Tamil

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra Thaai Thanai Maga Maranthalum | நடராஜர் அபிஷேகம் | Shiva Song
▶︎

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra Thaai Thanai Maga Maranthalum | நடராஜர் அபிஷேகம் | Shiva Song

திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) - காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் - திருநாவுக்கரசர் தேவாரம்
▶︎

திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) - காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் - திருநாவுக்கரசர் தேவாரம்

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத உண்மை | Ilangai Jeyaraj about Arunagirinathar | Ilangai Jayaraj Speech
▶︎

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத உண்மை | Ilangai Jeyaraj about Arunagirinathar | Ilangai Jayaraj Speech

Endaro Mahanubhavulu | Ranjani-Gayatri | Tyagaraja's Path to Liberation Through Music
▶︎

Endaro Mahanubhavulu | Ranjani-Gayatri | Tyagaraja's Path to Liberation Through Music

SHRI PERIYAVALUM PERUMALUM BY GOVINDAPURAM SHRI BALAJI BHAGAVATHAR
▶︎

SHRI PERIYAVALUM PERUMALUM BY GOVINDAPURAM SHRI BALAJI BHAGAVATHAR

உணவும் உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டிய தம்மையே புகழ்ந்து திருப்புகலூர்த் திருப்பதிகம்
▶︎

உணவும் உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டிய தம்மையே புகழ்ந்து திருப்புகலூர்த் திருப்பதிகம்

சனாதன தர்மம் | The Complete History of Sanatana Dharma Full Explanation! Krishnavel ts Tamil Podcast
▶︎

சனாதன தர்மம் | The Complete History of Sanatana Dharma Full Explanation! Krishnavel ts Tamil Podcast

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2
▶︎

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

😨 ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை? கிருஷ்ணரை அதிரவைத்த அஸ்வத்தாமனின் கேள்வி! கிருஷ்ணர் பதில் என்ன? 😱
▶︎

😨 ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை? கிருஷ்ணரை அதிரவைத்த அஸ்வத்தாமனின் கேள்வி! கிருஷ்ணர் பதில் என்ன? 😱

திருவாசகம் - திருப்பொற்சுண்ணம்  | Thiruvasagam - Thiruporchunnam | சிவதாமோதரன் ஐயா
▶︎

திருவாசகம் - திருப்பொற்சுண்ணம் | Thiruvasagam - Thiruporchunnam | சிவதாமோதரன் ஐயா

திருவெண்ணியூர்(கோயில் வெண்ணி) - முத்தினை பவளத்தை முளைத்த எம் தொத்தினை - திருநாவுக்கரசர் தேவாரம்
▶︎

திருவெண்ணியூர்(கோயில் வெண்ணி) - முத்தினை பவளத்தை முளைத்த எம் தொத்தினை - திருநாவுக்கரசர் தேவாரம்