திருச்சோற்றுத்துறை - கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் - திருநாவுக்கரசர் தேவாரம்
05.033 திருச்சோற்றுத்துறை | கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் | திருநாவுக்கரசர் தேவாரம் | திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் | @ThiruneriyaThamizhosai Odhanavaneswarar Temple | Thiruchotruthurai | Thiruneriya Thamizhosai | Thevaaram | Thirugnanasambanthar | Thirunavukarasar | Sundarar | Thevara Paadal Petra Thiruthalangal இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என்று அழைக்கப்படும். அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அன்னபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத் தலமாக கருதப்படுகிறது. அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று. இறைவர் : ஸ்ரீ சோற்றுத்துறை நாதர் இறைவியார் : ஸ்ரீ அன்னபூரணி திருப்பழனத்து இறைவனை வணங்கி பல பதிகங்கள் பாடிய பின்னர், அப்பர் பெருமான் சோற்றுத்துறை முதலான தலங்கள் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் அருளினார். உடலினில் ஏற்படும் தழும்பு என்றும் மாறாது இருப்பது போல், சிவபிரான்பால் மாறாத அன்பு கொண்டு அப்பர் பிரான் சோற்றுத்துறை முதலான பல தலங்களில் தொண்டுகள் செய்தார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் தில்லைச் சிற்றம்பலத்துறை செல்வனார் தொல்லை ஊழியர் சோற்றுத் துறையர்க்கே வல்லையாய்ப் பணிசெய் மட நெஞ்சமே. ..... (01) முத்தியாக ஒரு தவம் செய்திலை அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை தொத்து நின்றலர் சோற்றுத் துறையர்க்கே பத்தியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே. ..... (02) ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை கட்டி நின்ற கழிந்தவை போயறத் தொட்டு நின்றும் அச்சோற்றுத் துறையர்க்கே பட்டியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே. ..... (03) ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதியான் என்றும் நின்மலனே என்றும் சோதியான் என்றும் சோற்றுத் துறையர்க்கே வாதியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே. ..... (04) ஆட்டினாய் அடியேன் வினையாயின ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண் தோட்டினாய் என்று சோற்றுத் துறையர்க்கே நீட்டி நீ பணிசெய் மட நெஞ்சமே. ..... (05) பொங்கி நின்று எழுந்தக் கடல் நஞ்சினைப் பங்கி உண்டதோர் தெய்வம் உண்டோ சொலாய் தொங்கி நீ என்றும் சோற்றுத் துறையர்க்குத் தங்கி நீ பணிசெய் மட நெஞ்சமே. ..... (06) ஆணி போல நீ ஆற்ற வலியைகாண் ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும் தோணி ஆகிய சோற்றுத் துறையர்க்கே பூணியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே. ..... (07) பெற்றம் ஏறில் என் பேய் படையாகில் என் புற்றில் ஆடரவே அது பூணில் என் சுற்றி நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே பற்றி நீ பணிசெய் மட நெஞ்சமே. ..... (08) அல்லியான் அரவு ஐந்தலை நாகணைப் பள்ளியான் அறியாத பரிசெலாம் சொல்லி நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே புல்லி நீ பணிசெய் மட நெஞ்சமே. ..... (09) மிண்டரோடு விரவியும் வீறிலாக் குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து நீ தொண்டு செய்து என்றும் சோற்றுத் துறையர்க்கே உண்டு நீ பணிசெய் மட நெஞ்சமே. ..... (10) வாழ்ந்த வன்வலி வாளரக்கன் தனை ஆழ்ந்து போய் அலறவ் விரல் ஊன்றினான் சூழ்ந்த பாரிடம் சோற்றுத் துறையர்க்குத் தாழ்ந்து நீ பணிசெய் மட நெஞ்சமே. ..... (11) பொருளுரை : அறியாமையை உடைய நெஞ்சமே! அமண் முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டு செய்து என்றும் உண்டு பணி செய்வாயாக. ஆலய முகவரி : அருள்மிகு ஓதவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, திருச்சோற்றுத்துறை அஞ்சல், (வழி) கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம், PIN - 613 202 எப்படிப் போவது : தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து திருக்கண்டியூர் வழியாக சுமார் 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மீ. லைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

திருமழபாடி - நீறேறு திருமேனி உடையான் கண்டாய் - திருநாவுக்கரசர் தேவாரம் @ThiruneriyaThamizhosai

திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு - திருநாவுக்கரசர் தேவாரம்

வினாவெண்பா 7

Just do this to get rid of all your karmic actions!

கர்ம வினையின் கண்ணிகளை விட இறை அருள் மேலானது அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

18 வருடம்,ரகசிய திருமணம் திவ்யா சத்யராஜின் மர்மங்கள் ! | Bayilvan Ranganathan about divya sathyaraj

ஆதாரம் இதோ! இந்தியாவுக்கு எதிரா செயல்பட்ட குள்ளநரி பிடிபட்டது! Education expo DRAMA அம்பலம்!

விதியை வெல்ல முடியுமா? | ரமணர் | பட்டினத்தார் | உமர்கய்யாம் | கவிமணி | விதியும் முயற்சியும்

The Origins of Indians Were Never as Simple as We Thought — Ancient DNA Reveals Why

Thaanenai Munpadaithaan - தானெனை முன்படைத்தான் | Thevaram Vol II

திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) - காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் - திருநாவுக்கரசர் தேவாரம்

திருக்காழி(சீர்காழி) - பூவார் கொன்றை புரிபுன் சடையீசா - திருஞானசம்பந்தர் தேவாரம்

பணத்தை சாப்பிட முடியுமா? - நீதிமன்றமே மௌனமான அந்த ஒரு பதில்!😱| Ramana Maharshi Tamil

"ஈழத்தில் என்ன நடக்குது ? நாளை என் உயிர் பிரியலாம்.." MP Archchuna Ramanathan கண்ணீர் மல்க பேட்டி

நீ நினைத்த நல்ல நல்ல காலம் நெருங்கும்போது 4 அறிகுறிகள் இதுவே!

அச்சோப்பதிகம் | Achopathigam | திருவாசகம் | Thiruvasagam | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

இந்திய யூதர்கள். யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? - BT Reports - Bharathi Thambi

She Flew to America on a Fiancée Visa — What She Found in His House Got Her Murdered

திருநாகைக்காரோணம்(நாகப்பட்டிணம்) - பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை - திருநாவுக்கரசர் தேவாரம்

