திருக்கொள்ளம்பூதூர் | கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் | திருஞானசம்பந்தர் தேவாரம்
03.006 திருக்கொள்ளம்பூதூர் | கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் #VilvaaranyeswararTemple | #Thirukkollamputhur | #ShivamumThamizhum | #PanniruThirumurai | #Thevaaram | #Thirugnanasambanthar | #Thirunavukarasar | #Sundarar "இத்தல இறைவனை நாள்தோறும் வணங்கினால் பிறவிப் பெருங்கடல் நிந்தி இறைவனை அடையலாம்." சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும் போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி "கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞானசம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம் போக்கி ஆறு என்று வழங்குகின்றனர். இறைவர் : ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர், ஸ்ரீ வில்வவனநாதர் இறைவியார் : ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ அழகு நாச்சியார் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவார பாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். நேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். 00:32 கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய நம்பனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (01) 01:33 கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர் நாட்டு அகத்து உறை நம்பனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (02) 02:41 குலையினார் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (03) 04:10 குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த் தவள நீறணி தலைவனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (04) 04:37 கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர் நின்ற புன்சடை நிமலனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (05) 05:31 ஓடம் வந்தணையும் கொள்ளம்பூதூர் ஆடல் பேணிய அடிகளை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (06) 05:59 ஆறு வந்தணையும் கொள்ளம்பூதூர் ஏறு தாங்கிய இறைவனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (07) 06:46 குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் அரக்கனைச் செற்ற ஆதியை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (08) 07:15 பருவரால் உகளும் கொள்ளம்பூதூர் இருவர் காண்பரியான் கழல் உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (09) 07:55 நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த் தேரமண் செற்ற செல்வனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. ..... (10) 08:24 கொன்றை சேர்சடையான் கொள்ளம்பூதூர் நன்று காழியுள் ஞானசம்பந்தன் இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார் போய் என்றும் வானவரோடு இருப்பாரே. ..... (11) பதிகப் பலன் : கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புக ழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர். ஆலய முகவரி : அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் திருக்களம்பூர், திருக்களம்பூர் அஞ்சல், திருவாரூர் மாவட்டம், PIN - 622 414. கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

திருச்சாய்க்காடு(சாயாவனம்) | மண்புகார் வான்புகுவர் மனம் இளையார் | திருஞானசம்பந்தர் தேவாரம்

திருத்தென்குடித்திட்டை | முன்னை நான் மறையவை முறை முறை குறையொடும் | திருஞானசம்பந்தர் தேவாரம்

மன அழுத்தங்களை பஞ்சாக பறக்க வைக்க | Suki Sivam Latest Speech

திருவாசகத்தின் சாறுதான் திருஅருட்பா.பெற்ற தாய் தனை மக மறந்தாலும்பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

Shaivism and Vaishnavism, Murugan, Shiva, and Panduranga | Religious Unity | Spiritual Secret | #...

சிவாஜி இத்தனை பேரை படிக்க வைத்தாரா? அன்னை இல்லம்! அறியாத செய்திகள்! – Life of Sivaji Ganesan – 2

வேதாத்திரி மகரிஷி செய்து காட்டும் எளியமுறை உடற்பயிற்சி. Irai Thedal.

ஒரு பாடல்... ஒரு பிரார்த்தனை... ஒரு அதிசயம்! - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Best Tamil Speech

Reset Your Brain Naturally 🧠 | Indian Classical Raga Music for Deep Focus & Inner Calm

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

Read this to Rule the World ⚱️ A Shaking Truth | I CHING FUTURE PREDICTION

திருவேட்களம் | அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @ShaivamumThamizhum

சகுனியின் சதி திட்டம் | மஹாபாரதக் கதையாடல் | சேலம் ருக்மணி அம்மாள் கதையாடல் #salemrukmaniammal

திருவாசகம்-சிவபுராணம் | #sivapuranam #thiruvasagam #namasivaya #manikkavasagar #sambandamgurukkal

கிருஷ்ணரை நினைத்து உருகிய பர்வீன் சுல்தானா"கிருஷ்ண லீலா - இதுதான் அர்த்தம்!"|Sadhguru| ParvenSultana

Battle for Padmanabha Swamy Temple | FT.Aswathi Thirunal Gowri Lakshmi Bayi

Massive Net Fishing! Smoking & Marinating Fresh Fish - صيد ضخم بالشباك! تدخين وتتبيل الأسماك الطازجة

Germany ஜனாதிபதி வியந்து பார்த்த ஹம் காமாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழா 🔥 | Kamakshi Amman Ther 🇩🇪

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

