திருத்தென்குடித்திட்டை | முன்னை நான் மறையவை முறை முறை குறையொடும் | திருஞானசம்பந்தர் தேவாரம்
03.035 திருத்தென்குடித்திட்டை | முன்னை நான் மறையவை முறை முறை குறையொடும் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @ShaivamumThamizhum காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்களாம்பிகை திருமுறை : மூன்றாம் திருமுறை 035 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று சம்பந்தர் பாடியுள்ளார். 00:12 முன்னை நான் மறையவை முறை முறை குறையொடும் தன்னதாள் தொழுது எழ நின்றவன் தன்னிடம் மன்னுமா காவிரி வந்து அடி வருடநல் செந்நெலார் வளவயல் தென்குடித்திட்டையே. ..... (01) 02:03 மகரம் ஆடும் கொடி மன்மத வேள்தனை நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் பகர வாள் நித்திலம் பன்மகரத்தோடும் சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே. ..... (02) 03:41 கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவு செய்தான் இடம் பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினால் மிகுபுகழ்த் தென்குடித்திட்டையே. ..... (03) 04:33 உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை விண்ணிலார் அறிகிலா வேத வேதாந்தன் ஊர் எண்ணிலார் எழில்மணிக் கனக மாளிகை இளந் தெண்ணிலா விரிதரும் தென்குடித்திட்டையே. ..... (04) 05:28 வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் அருந்தி ஆரமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர் செருந்தி பூமாதவிப் பந்தர் வண் செண்பகம் திருந்து நீள் வளர்பொழில் தென்குடித்திட்டையே. ..... (05) 06:08 ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் கூறினார் அமர்தரும் குமரவேள் தாதையூர் ஆறினார் பொய்யகத்து ஐ உணர்வு எய்தி மெய் தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே. ..... (06) 06:52 கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள் வான் அலைக்கும் தவத் தேவு வைத்தான் இடம் தான் அலைத் தெள்ளமூர் தாமரைத் தண்துறை தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே. ..... (07) 07:53 மாலொடும் பொருதிறல் வாள் அரக்கன் நெரிந்து தோலிடும் படி விரல் ஒன்று வைத்தான் இடம் காலொடும் கனக மூக்கு உடன் வர கயல் வரால் சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே. ..... (08) 08:48 நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க் காரணன் அடிமுடி காண ஒண்ணான் இடம் ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடிதொழச் சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே. ..... (09) 10:01 குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும் பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் வண்டு இரைக்கும் பொழில் தண்டலைக் கொண்டலார் தெண்திரைத் தண்புனல் தென்குடித்திட்டையே. ..... (10) 10:58 தேனலார் சோலைசூழ் தென்குடித்திட்டையைக் கானலார் கடிபொழில் சூழ்தரும் காழியுள் ஞானமார் ஞானசம்பந்தன செந்தமிழ் பானலார் மொழி வலார்க்கு இல்லையாம் பாவமே. ..... (11) பதிகப் பலன் : தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித் திட்டையைப் போற்றி, கடற்கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த, சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை. ஆலய முகவரி : அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை, பசுபதிகோயில் அஞ்சல், தஞ்சை மாவட்டம், PIN - 614 206. எப்படிப் போவது : தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள திட்டை என்ற ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

திருச்சாய்க்காடு(சாயாவனம்) | மண்புகார் வான்புகுவர் மனம் இளையார் | திருஞானசம்பந்தர் தேவாரம்

வியக்கவிடும் திருப்பதி கோவிலின் வியாபார பின்னணி..! | 15 நிமிட அலங்காரத்திற்கு பல கோடியை! | Devapriya

ஆடி பிரதோஷம் சிறப்பு பாடல் | சிவபெருமானை மனம் உருக வைக்கும் பக்தி பாடல் | Aadi Pradosham Song 2026

திருவேட்களம் | அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @ShaivamumThamizhum

🙏🔥 என் அப்பன் ஈசன் தன் பக்தனுக்கா காத்துகிட்டு உட்காந்து இருந்த தலம் திருபெருந்துறை ஆவுடையார் கோயில்

Shaivism and Vaishnavism, Murugan, Shiva, and Panduranga | Religious Unity | Spiritual Secret | #...

புராணங்களும் சித்தர்களும் கூறுவது அனைத்தும் உண்மை | Don't take Life Playfully | Nithilan Dhandapani

Chuyện Tuổi Già Đau Lòng:Cái Dại Tuổi 72,Vừa Sang Tên Sổ Đỏ Tôi Liền Bị Con Trai Đuổi Thẳng Ra Đường

சகுனியின் சதி திட்டம் | மஹாபாரதக் கதையாடல் | சேலம் ருக்மணி அம்மாள் கதையாடல் #salemrukmaniammal

Tibetan Healing Sounds for Mind, Body & Soul | Relaxation, Sleep & Inner Peace

Poovar Malar Kondu

பரபரப்பான ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழா! Part 1! மக்கள் வெள்ளத்தில் தேர் பவனி விழா!

திருநாரையூர் | காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் | திருஞானசம்பந்தர் தேவாரம்

ஓங்காரத்து உட்பொருள் சிவபெருமான் - அரிய தகவல்களுடன் - Omkarathu Utporul Sivaperuman - Best Speech

Murugan Debate - Full Video Uncut | Paari Saalan VS Politalks

INSANE! Top 5 Primitive Recycling & Most Amazing Manufacturing Factory Processes in the World!

திருக்கயிலாயப் பதிகங்கள் | திருப்பாட்டு | தானெனை முன் படைத்தான் #omnamahshivaya #shivaratri2025

🔥7 இடங்களில் கஞ்சனாக இரு! வாழ்க்கையில் பணக்காரன் ஆகு | Warren Buffett Money Habits

பித்ரு சாபம் போக்க என்ன செய்ய வேண்டும்? Dr. U Ve Venkatesh Upanyasam

