திருச்சாய்க்காடு(சாயாவனம்) | மண்புகார் வான்புகுவர் மனம் இளையார் | திருஞானசம்பந்தர் தேவாரம்

02.041 திருச்சாய்க்காடு(சாயாவனம்) | மண்புகார் வான்புகுவர் மனம் இளையார் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் #ChayavaneswararTemple | #Thiruchaaikaadu | #ShivamumThamizhum | #PanniruThirumurai | #Thevaaram | #Thirugnanasambanthar | #Thirunavukarasar | #Sundarar சாய் என்பதற்குத் தமிழில் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் தாவரம் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது. காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருசாய்க்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம் மற்றும் மயிலாடுதுறை ஆகும். இறைவர் : ஸ்ரீ சாயாவனேஸ்வரர் இறைவியார் : ஸ்ரீ குயிலினும் நன்மொழியம்மை தேவேந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்து இறைவனை பூஜித்தாள். தேவலோகத்தில் தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். தனது தாய் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். அப்போது அம்பாள் பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது. இறைவன் சாயாவனேஸ்வரர் தோன்றி இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை விட்டுவிடும் படியும், இங்கேயே தனது அன்னையுடம் இங்கே வந்து வழிபட்டு நலமடையும் படியும் கூறினார். ஐராவதம் கோவிலை இழுத்துச் செலவதற்காக பூமியை தன் கொம்புகளால் கீறியதால் உண்டான இடத்திலுள்ள தீர்த்தமே கோவிலுக்கு எதிரில் உள்ள ஐராவத தீர்த்தம். திருவலம்புரத்தை வழிபட்ட திருஞானசம்பந்தப் பெருமானார், நீர்வளம் நிறைந்த சீர்வளர் சாய்க்காட்டைத் தொழுதற்கு நினைந்து சென்று, திருப்பல்லவனீச்சரத்தைச் சொல்லழகும் பொருளழகும் பேரின் பூற்றும் அமையப் பாடிப் பரவி, பொன்னிசூழ் புகாரில் நீடிய புனிதரது திருசாய்க்காட்டை, திருத்தொண்டர் பலரும் எதிர்கொள்ளச் சென்று, வானளாவி உயர்ந்த திருவாயிலுள் வலங்கொண்டு, புகுந்து பணிந்து போற்றியது இத்திருப்பதிகம். 00:15 மண்புகார் வான்புகுவர் மனம் இளையார் பசியாலும் கண்புகார் பிணியறியார் கற்றாரும் கேட்டாரும் விண்புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே. ..... (01) 04:48 போய்க்காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும் வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே. ..... (02) 05:45 நீ நாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சா நாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே. ..... (03) 07:03 கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கு அமரும் தாழ்பொழில்வாய் மொட்டலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே. ..... (04) 07:41 கோங்கன்ன குவிமுலையாள் கொழும் பணைத்தோள் கொடியிடையைப் பாங்கென்ன வைத்து உகந்தான் படர்சடைமேல் பால்மதியம் தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள் நிழற்கீழ் ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே. ..... (05) 09:28 சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் தீந்தாகம் எரிகொளுவச் செற்று உகந்தான் திருமுடிமேல் ஓய்ந்தார மதிசூடி ஒளி திகழும் மலைமகள் தோள் தோய்ந்தாகம் பாகமா உடையானும் விடையானே. ..... (06) 10:55 மங்குல் தோய் மணிமாடம் மதி தவழும் நெடுவீதிச் சங்கெலாம் கரைபொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் கொங்குலா வரிவண்டு இன்னிசை பாடு மலர்கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள்லவே. ..... (07) 11:46 தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரியுண்ணப் பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான் சாய்க்காட்டை இடவகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே. ..... (08) 12:49 வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன் பெருமை தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே. ..... (09) 13:50 குறங்காட்டு நால்விரல் கோவணத்துக்கு உலோவிப் போய் அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின் புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே. ..... (10) 15:11 நொம்பைந்து புடைத்து ஒல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலும் அரவம் செய் பூங்காழிச் சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம்பந்தம் எனக் கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே. ..... (11) பதிகப் பலன் : பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக்கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்துவார்க்கு இடர்கள் கெடும். ஆலய முகவரி : அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில், சாயாவனம், காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN - 609 105. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

திருநாரையூர் | காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் | திருஞானசம்பந்தர் தேவாரம்
▶︎

திருநாரையூர் | காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் | திருஞானசம்பந்தர் தேவாரம்

திருவாசகம் I சில சிந்தனைகள்I பகுதி - 2 I நானேயோ தவம் செய்தேன்?
▶︎

திருவாசகம் I சில சிந்தனைகள்I பகுதி - 2 I நானேயோ தவம் செய்தேன்?

திருநெடுங்களம் பதிகம் | மறை உடையாய் தோல் உடையாய் திருஞானசம்பந்தர் தேவாரம்
▶︎

திருநெடுங்களம் பதிகம் | மறை உடையாய் தோல் உடையாய் திருஞானசம்பந்தர் தேவாரம்

புராணங்களும் சித்தர்களும் கூறுவது அனைத்தும் உண்மை | Don't take Life Playfully | Nithilan Dhandapani
▶︎

புராணங்களும் சித்தர்களும் கூறுவது அனைத்தும் உண்மை | Don't take Life Playfully | Nithilan Dhandapani

பரபரப்பான ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழா! Part 1! மக்கள் வெள்ளத்தில் தேர் பவனி விழா!
▶︎

பரபரப்பான ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழா! Part 1! மக்கள் வெள்ளத்தில் தேர் பவனி விழா!

Shaivism and Vaishnavism, Murugan, Shiva, and Panduranga | Religious Unity | Spiritual Secret | #...
▶︎

Shaivism and Vaishnavism, Murugan, Shiva, and Panduranga | Religious Unity | Spiritual Secret | #...

🕉️ வீடியோவில் பதிவான KUNDALINI எழுச்சி! YOGI RAMSURATKUMAR MIRACLE 🙏🏻🪷 | Tiruvannamalai
▶︎

🕉️ வீடியோவில் பதிவான KUNDALINI எழுச்சி! YOGI RAMSURATKUMAR MIRACLE 🙏🏻🪷 | Tiruvannamalai

திருவேட்களம் | அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @ShaivamumThamizhum
▶︎

திருவேட்களம் | அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @ShaivamumThamizhum

மகரம்: ஜுலை 31 முடியும் வரை தயவுசெஞ்சு எல்லா கதவையும் மூடி வையுங்கள்
▶︎

மகரம்: ஜுலை 31 முடியும் வரை தயவுசெஞ்சு எல்லா கதவையும் மூடி வையுங்கள்

திருக்கரவீரம்(கரையபுரம்) | அரியும் நம்வினை உள்ளன ஆசற | திருஞானசம்பந்தர் தேவாரம்
▶︎

திருக்கரவீரம்(கரையபுரம்) | அரியும் நம்வினை உள்ளன ஆசற | திருஞானசம்பந்தர் தேவாரம்

சர்க்கரை குறைக்க புதிய டெக்னிக்? ! 5 low cost protein foods for diabetes
▶︎

சர்க்கரை குறைக்க புதிய டெக்னிக்? ! 5 low cost protein foods for diabetes

வியக்கவிடும் திருப்பதி கோவிலின் வியாபார பின்னணி..! | 15 நிமிட அலங்காரத்திற்கு பல கோடியை! | Devapriya
▶︎

வியக்கவிடும் திருப்பதி கோவிலின் வியாபார பின்னணி..! | 15 நிமிட அலங்காரத்திற்கு பல கோடியை! | Devapriya

திருஆலவாய்(மதுரை) | வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்று என்று | திருநாவுக்கரசர் தேவாரம்
▶︎

திருஆலவாய்(மதுரை) | வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்று என்று | திருநாவுக்கரசர் தேவாரம்

மரணத்தை எப்படி வென்றேன்.. வள்ளலாரின் வாக்குமூலம் | Thiruvarut Prakasa Vallalar | Jeevakarunyam
▶︎

மரணத்தை எப்படி வென்றேன்.. வள்ளலாரின் வாக்குமூலம் | Thiruvarut Prakasa Vallalar | Jeevakarunyam

சகுனியின் சதி திட்டம் | மஹாபாரதக் கதையாடல் | சேலம் ருக்மணி அம்மாள் கதையாடல் #salemrukmaniammal
▶︎

சகுனியின் சதி திட்டம் | மஹாபாரதக் கதையாடல் | சேலம் ருக்மணி அம்மாள் கதையாடல் #salemrukmaniammal

மனைவியே சிறந்த நண்பரா? தர்மன் சொன்ன உண்மை! | Mahabharatham | Yaksha Prashnam 11 | Tamil
▶︎

மனைவியே சிறந்த நண்பரா? தர்மன் சொன்ன உண்மை! | Mahabharatham | Yaksha Prashnam 11 | Tamil

Chuyện Tuổi Già Đau Lòng:Cái Dại Tuổi 72,Vừa Sang Tên Sổ Đỏ Tôi Liền Bị Con Trai Đuổi Thẳng Ra Đường
▶︎

Chuyện Tuổi Già Đau Lòng:Cái Dại Tuổi 72,Vừa Sang Tên Sổ Đỏ Tôi Liền Bị Con Trai Đuổi Thẳng Ra Đường

சிவபுராணம் - திருவாசகம் | அ.தியாகராசன் ஐயா | மார்கழி திங்கள்  மேன்மைகொள் சைவப் பெருவிழா |  Bakthi TV
▶︎

சிவபுராணம் - திருவாசகம் | அ.தியாகராசன் ஐயா | மார்கழி திங்கள் மேன்மைகொள் சைவப் பெருவிழா | Bakthi TV

Battle for Padmanabha Swamy Temple | FT.Aswathi Thirunal Gowri Lakshmi Bayi
▶︎

Battle for Padmanabha Swamy Temple | FT.Aswathi Thirunal Gowri Lakshmi Bayi

Tibetan Healing Sounds  for Mind, Body & Soul | Relaxation, Sleep & Inner Peace
▶︎

Tibetan Healing Sounds for Mind, Body & Soul | Relaxation, Sleep & Inner Peace