மத்த யானை யேறி மன்னர் | தேவாரம் | Matha Yanai Eri Mannar | Thevaram
A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram: / __keerthana_vengatesan Follow us on Facebook Page: / keerthanavengatesan1 #thevaram #devaram #tamil மதத்தையுடைய யானையின்மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே, நீவிர் இறந்தால், அதுபோது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர் ; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன் ; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்த மனத்தைப் பின் அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீள, இவ் வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும் ; அவர்களுடன், யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலை, ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம். மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள் செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 1 தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 2 செடிகொ ளாக்கை சென்று சென்று தேய்ந்தொல் லைவீழாமுன் வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் பட்டு மயங்காதே கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை அடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 3 வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே யாவ ராலும் இகழப் பட்டிங் கல்ல லில்வீழாதே மூவ ராயும் இருவ ராயும் முதல்வன் அவனேயாம் தேவர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 4 அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப் பான்பொருட்டாற் சிரித்த பல்வாய் வெண்ட லைபோய் ஊர்ப்பு றஞ்சேராமுன் வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர் வஞ்ச மதில்மூன்றும் எரித்த வில்லி எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 5 பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப் பான்பொருட்டால் மையல் கொண்டீர் எம்மோ டாடி நீரும் மனத்தீரே நைய வேண்டா இம்மை யேத்த அம்மை நமக்கருளும் ஐயர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 6 கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி வாசம் மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கை ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பணிந் தேறேறும் ஈசர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7 இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை முன்பு சொன்னால் மோழை மையாம் முட்டை மனத்தீரே அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை அடிக ளடிசேரார் என்பர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 8 தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார் வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டுஞ் சிந்தை யீரே நெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும் எந்தை கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 9 குருதி சோர ஆனையின் றோல் கொண்ட குழற்சடையன் மருது கீறி ஊடு போன மாலய னும்மறியாச் சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதியெம் ஆதியான் கருது கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 10 முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யான்உறையும் பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் பரமனை யேபணியச் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடைய னவன்சிறுவன் பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே. Read more at: https://shaivam.org/thirumurai/sevent...

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் | தேவாரம் -18 | Thiruvum Meiporulum | சுந்தரர் | Thevaram

முருகன் உங்களைத் தேடி வரும் நேரம் எது தெரியுமா? கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் -IlangaiJeyaraj

முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar

அதர்வ ரகசியத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண ஹ்ருதய ஸ்துதி, கடும் கடனும் நீங்கும், பண கஷ்டம் நீங்கும்

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

நடராஜர் பத்து | Natarajar Pathu | சிறுமணவை" முனுசாமி | Tamildevotional

தம்மையே புகழ்ந்து | Thammaiye Pugazhthu | சுந்தரர் தேவாரம் | Sundarar Thevaram

திருவாசகம் திருக்கோத்தும்பி - சொ.சொ.மீ சுந்தரம் - Thiruvasagam Thirukothumbi So So Me Sundaram

தானெனை முன்படைத்தான் | தேவாரம் -13 | THEVARAM | திருநொடித்தான்மலை | Thaan Enai Mun Padaithan

ஆலந்தான் உகந்து... - சுந்தரர் திருப்பாட்டு #Alandhan #sivalogam | Solarsai | sundarar thevaram

திருவாசகம் தொகுப்பு, பொன் சுந்தரலிங்கம், Thiruvasagam, pon Sundaralingam

பொடியார் மேனியனே | சுந்தரர் | தேவாரம் -14 | poḍiyār mēniyanē | கடவூர் வீரட்டம்

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் | Thevaram | தேவாரம் | Nambinarku Arul | Sundarar | சுந்தரர்

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

செடியேன் தீவினையில் | தேவாரம் - 15 | Sediyen Theevinaiyir | சுந்தரர் | Thevaram | Sundarar

திருப்பள்ளியெழுச்சி | திருவாசகம் | Thirupalliezhuchi மாணிக்கவாசகர் | Thiruvasagam

சம்பந்தர் தேவாரம் திருவண்ணாமலை பதிகம் " உன்னாமுலை உண்மையாலோடும் " பாடல்.

மலையார் அருவி | தேவாரம் | Malaiyar Aruvi | Thevaram | Sundarar

Simmanthu - Sundharar Thevaram | சிம்மாந்து - Sundarar Sortamil | Solar Sai | Bakthi TV | Tamil

