சம்பந்தர் தேவாரம் திருவண்ணாமலை பதிகம் " உன்னாமுலை உண்மையாலோடும் " பாடல்.
சம்பந்தர் தேவாரம் திருவண்ணாமலை பதிகம் " உன்னாமுலை உண்மையாலோடும் " பாடல். திருமுறை : முதல் திருமுறை அருளியவர் : திருஞானசம்பந்தர் பண் : நட்டபாடை நாடு : நடுநாடு தலம் : திருவண்ணாமலை இறைவன் : அருணாச்சலேஸ்வரர், அண்ணாமலையார் இறைவி : உன்னாமுலையாள், அபிதகுஞலாம்மாள் தலவிருச்சம் : மகிழ மரம் தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் பாடியவர் : மயிலை சற்குருநாத ஓதுவார் உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன், பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே. 98.தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி, தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற, ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே. 99.பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல், ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே. 100.உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம் எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால், முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல் அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே. 101.மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல் உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார், குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே? 102.பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப் பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக் கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே. 103.கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில் நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள, எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல, அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே. 104.ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால், பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து, வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே. 105.விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக் கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும், அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே! 106.வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும், மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும், ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல், கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே 107.வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல், அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை, கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே. #சம்பந்தர்_தேவாரம் #திருவண்ணாமலை_பதிகம் #உன்னாமுலை_உமையாளோடும் #திருக்கடைகாப்பு #சற்குருநாதஒதுவார்

ponnum meipoerulum | பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை | sundarar thiruvarur thevaram

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

Madharpirai Kanniyanai

மாதர்ப் பிறைக்கண்ணி யானை|திருவையாற்றில் அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகம்.

அண்ணாமலையப்பா நீ என் தந்தையல்லவா... #வாதவூரடிகள் #சோலார்சாயி #அன்பகம் #vadhavoradigal, #solarsai,

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

Pancha Puranam Padal Lyrics in Tamil

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி...’ - நெஞ்சை உருக்கும் திருநல்லூர் திருக்கல்யாண வைபவம்

🙏தினமும் கேளுங்கள் பஞ்சாட்சர மகிமை!5 Powerful ShivaPathigam#ShivaSongs#Namasivaya#NalvarSongs#bhakti

337.உண்ணாமுலை உமையாளொடும் |திருவண்ணாமலை | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

தானெனை முன்படைத்தான் / சுந்தரர் தேவாரம் / திருத்தணி சுவாமிநாதன் ஐயா

Thirumurai Isai 2nd Part by Sargurunathan Aiya at Sri Thandayuthapani Temple Singapore

Thiruvasagam - Thiruammanai | திருவாசகம் - திருஅம்மானை | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மட்டிட்ட புன்னையங் கானல்(திருமயிலை)

KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

🔴LIVE 02.04.2026 | திருமுறை அருளாசியுரை | அருள்மிகு அமரநந்தீஸ்வரர் திருக்கோயில் | நாகப்பட்டினம்.

உண்ணாமுலை உமையாளொடும் | திருஞானசம்பந்தர் | தேவாரம் - 16 | திருஅண்ணாமலை | Unnamulai umayaludan

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

திருவண்ணாமலை கிரிவல மகிமை | அஷ்டலிங்க வரலாறு | சுகி சிவம் சொற்பொழிவு | Suki Sivam Speech

