வினை தீர்க்கும் பதிகம்|திருமாகறல்| Thirumagaral pathigam to cure bone illness|lyrics in description
#SriThiruMakaraleeswararTemple #Thirumakaral #ThirugnanasambantharPathigam #இறைவர்_திருப்பெயர் : #ஸ்ரீ_திருமாகறலீஸ்வரர் #இறைவியார்_திருப்பெயர் : #ஸ்ரீ_திரிபுவன_நாயகி #திருமுறை : #மூன்றாம்_திருமுறை_072வது_திருப்பதிகம் #பண் - சாதாரி #அருளிச்செய்தவர் : #திருஞானசம்பந்த_சுவாமிகள் "எலும்பு சம்பந்தமான நோய்கள் நீக்கும் திருப்பதிகம்." திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கிச் சிவத்திற்கூட்டியருளிய சண்பை வேந்தர், பல பதிகளைப் போற்றியபின், மங்கைபாகர் அமர்ந்தருளும் மாகறலை வணங்கிப் பாடியது இத்திருப்பதிகம். இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இத்தலம் எலும்பு தொடர்பான அத்தனை கோளாறையும், குளறுபடிகளையும் நீக்கும் பரிகராத் தலமாக விளங்குகிறது. இது தவிர பக்கவாதம், ரத்தம் தொடர்பான நோய்கள் போன்றவற்றிக்கும் பரிகாரத் தலமாக திகழ்கிறது. சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர். ஆலய முகவரி: அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில், மாகறல் கிராமம் அஞ்சல், உத்திரமேரூர் வட்டம், வழி காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம், PIN - 631603. இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்லும் பாதையில் 16 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம் திருச்சிற்றம்பலம்விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம் மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான் கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே. 1 கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார் மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான் இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள் அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே. 2 காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான் தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப் பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3 இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான் கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே. 4 துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய் மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான் வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன்வளரும் நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே. 5 மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான் மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே. 6 வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர் மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார் கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார் ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே. 7 தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான் பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார் பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே. 8 தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண் பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான் சாயவிர லூன்றியவிராவணன தன்மைகெட நின்றபெருமான் ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே. 9 காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார் மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான் நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய் ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே. 10 கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன் அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான் மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே. 11 திருச்சிற்றம்பலம் சுவாமி: திருமாகறலீஸ்வரர் அம்பாள்: திரிபுவனநாயகியம்மை #Devaram #Thevaram #Shiva #Sivan #Bhakti #TamilBhakti #Thirumurai #Devotional #Spiritual #LordShiva #Pathigam #Healing #TamilDevotional #SivaBhakti #Bone health #OmNamahShivay #BhaktiAmuthaganam #தேவாரம் #பதிகம் #சிவன் #சிவபெருமான் #சிவபக்தி #திருமுறை #ஆன்மீகம் #பக்தி #தமிழ்பக்தி #திருவாசகம் #திருப்புகழ் #முருகன் #ஓம்நமசிவாய #எழும்புநோய்

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

Kandha Sashti Kavasam 🙏 | Original Tamil Lyrics | Powerful Murugan Tamil Devotional Songs

1 கோடி கடனும் நீங்க 1 நிமிடம் கேட்டால் போதும், தலையெழுத்து மாறும், இன்றைய தினம் தவற விடாதீர்கள்

தில்லைவாழ் அந்தணர்|Thillaivazh Anthanar|திருஆரூர்@BhaktiAmuthaganam

Thiruneetrup Pathigam | திருநீற்றுப் பதிகம் | துன்பங்கள் நீங்கும் சிவன் பாடல் | Bhakti Tamil Isaii

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

1000 விதமான பிரச்சினையை, கஷ்டத்தை நீக்கும் நரசிம்ம மந்திர ஸ்துதி

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் | Kandar Alangaram | Powerful Murugan Devotional | OM TV

அபிராமி அந்தாதி | Abirami Andhadhi | தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் | with Lyrics & Meaning

இந்த திருப்புகழை மனமுருகி 21 முறை பாடினால் வெற்றி நிச்சயம் | திருப்புகழ் விளக்கம் |Thirupugazh

Kanda Guru Kavasam | கந்த குரு கவசம் Full Song with Lyrics | Original Version | Murugan Songs Tamil

மிக மிக சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

மஹா பெரியவா| இந்த ஒண்ணு பண்ணினா போதும் நம் குடும்பம் ஏழேழு தலைமுறை குறையே இல்லாம சௌக்யமா இருக்கும்!

திருமண தடை நீக்கும் திருமருகல் திருப்பதிகம்|Thirumana Thadai Neengum Thiruppathigam with lyrics🙏

🔴செவ்வாய்க்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

01. திருவாசகம் - சிவபுராணம் | Thiruvasagam - Sivapuranam | Tamil | #sambandamgurukkal #kaavaditv

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

Pitha Pirai Soodi|Sundarar Thevaram| tamil lyrics in description#பித்தா பிறை சூடி#சுந்தரர் தேவாரம்

