தில்லைவாழ் அந்தணர்|Thillaivazh Anthanar|திருஆரூர்@BhaktiAmuthaganam
திருச்சிற்றம்பலம் திருத்தொண்டர் தொகை புராணம் சுந்தரர் திருப்பாட்டு ஏழாம் திருமுறை. 7வது பதிகம் தலம் - திருவாரூர் பண் - கொல்லிக்கெளவாணம் திருச்சிற்றம்பலம் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 2 மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 3 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 4 வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 5 வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 6 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7 கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 8 கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 9 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 10 மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 11 திருச்சிற்றம்பலம் சுவாமி: புற்றிடங்கொண்டார் அம்பாள்: அல்லியம்பூங்கோதை #ThillaivaazhAndhanar #Sundarar #Devaram #Thirumurai #Thiruvarur #Thiyagarajar #TamilDevotional #ShivaBhakti #BhaktiAmuthaganam #OmNamashivaya

Pitha Pirai Soodi|Sundarar Thevaram| tamil lyrics in description#பித்தா பிறை சூடி#சுந்தரர் தேவாரம்

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

1000 விதமான பிரச்சினையை, கஷ்டத்தை நீக்கும் நரசிம்ம மந்திர ஸ்துதி

திருவாசகம் (வரலாற்று முறை 01) | கி. சிவகுமார் ஐயா | Thiruvasagam History Series | Bakthi TV

பெருந்தெய்வம் என்பவர் யார் ? அருமையான பதிவு | Ilangai Jeyaraj Speech | Ilangai Jayaraj Latest Speech

காந்தாரி - கிருஷ்ணர் உரையாடல் | மகாபாரதத்தின் மிக ஆழமான சம்பாஷணை | வாழ்க்கைக்கான தெய்வீக பாடங்கள்

திருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் பாடல்கள் | தமிழ் பக்திப் பாடல்கள் | JUKEBOX

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

Sri Venkateswara Suprabhatam | M.S. Subbulakshmi | Original Archival Remaster | Rigveda Media

திருமண தடை நீக்கும் திருமருகல் திருப்பதிகம்|Thirumana Thadai Neengum Thiruppathigam with lyrics🙏

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

கேட்டதை கொடுக்கும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | Tamil | Sri Vishnu Sahasranamam | Dushyanth Sridhar

Tuesday Special Kanda Sashti Kavasam Tamil | Murugan Kavasam 🙏 | Powerful Murugan Bhakti Songs Tamil

Thiruvasagam - (6/51) Neethal Vinnappam | SIVAYAM

latha kathirvel speech | கந்தர் அலங்காரம் | புன்னியம் இல்லனா இதை கேட்க முடியாது | Iriz Vision

வினை தீர்க்கும் பதிகம்|திருமாகறல்| Thirumagaral pathigam to cure bone illness|lyrics in description

Sulamangalam Sisters -Divine Voices | Kandar Anuboothi & Abirami Andhathi | முருகன் பக்திப் பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Thirumoolar Thirumantiram

திருக்கயிலாயப் பதிகங்கள் | திருப்பாட்டு | தானெனை முன் படைத்தான் #omnamahshivaya #shivaratri2025

