திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) - கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலத்தான் - திருநாவுக்கரசர் தேவாரம்
05.034 திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) | கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலத்தான் | திருநாவுக்கரசர் தேவாரம் | @ThiruneriyaThamizhosai திருநெய்த்தானம் திருவையாற்று சப்தஸ்தான தலங்களில் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். இறைவர் : ஸ்ரீ நெய்யாடியப்பர் இறைவியார் : ஸ்ரீ பாலாம்பிகை தனது உள்ளத்தில் பெருமானை நிலைநிறுத்தி மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், உலகத்தவர் அனைவரும் இந்த பேற்றினை பெறவேண்டும் என்று விரும்புகின்றார். அந்த விருப்பத்தின் அடிப்படையில் எழுந்தது தான் இந்த திருத்தாண்டகப் பதிகம். பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் உலகத்தவர் எத்தகைய தவறுகள் செய்து, இறை சிந்தனையில் ஈடுபடாமல் இருக்கின்றனர் என்பதை உணர்த்தும் அருமையான பதிகம். மேலும் அத்தகைய தவறுகளால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துச் சொல்லி அனைவர்க்கும் அறிவுரை கூறும் பதிகமாகவும் திகழ்கின்றது. ஒரு செயலைச் செய்ய நினைத்தல் முதற்படி. நினைதல் ஏற்படின் செயல் செய்வது உறுதி. இது கருதியே நினைந்தக்கால் உய்யலாம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நெய்த்தானம் தலத்திற்கு பெருமை சேர்ப்பது இறைவன் என்பதால், நெய்த்தானம் என்று நினைத்தாலே உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார். நெய்த்தானம் தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்து உழவாரப் பணிகள் செய்தவாறும் பதிகங்கள் பாடியவாறும் காலத்தை கழித்த அப்பர் பிரான், அந்த தலத்து இறைவனைத் தொழுத அடியார்களையும் கூர்ந்து நோக்கினார் போலும். அப்போது தான் கண்ட அடியார்களின் தன்மையை உணர்ந்த அப்பர் பிரான், அந்த தன்மைகளை பதிகமாக பாடி அருளிய பதிகமாக இந்த குறுந்தொகைப் பதிகம் அமைந்துள்ளது. 00:14 கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலத்தான் புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன் நெல்லியான் நிலையான நெய்த்தானனைச் சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே. ..... (01) 02:21 இரவனை இடுவெண்தலை ஏந்தியை பரவனை படையார் மதில் மூன்றையும் நிரவனை நிலையான நெய்த்தானனை குரவனை தொழுவார் கொடிவாணரே. ..... (02) 03:38 ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆர் இருள் கானிடை நடம் ஆடுவர் காண்மினோ தேனிடை மலர் பாயும் நெய்த்தானனை வானிடைத் தொழுவார் வலிவாணரே. ..... (03) 05:46 விண்டவர் புரம் மூன்றும் வெண்ணீறு எழக் கண்டவன் கடிதாகிய நஞ்சினை உண்டவன் ஒளியான நெய்த்தானனைத் தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே. ..... (04) 06:57 முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத் தம்கையால் தொழுவார் தலைவாணரே. ..... (05) 08:04 சுட்ட நீறு மெய் பூசிச் சுடலையுள் நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை இட்டமாய்த் தொழுவார் இன்பவாணரே. ..... (06) 09:24 கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர் கள்ளிக் காட்டிடை ஆடுவர் காண்மினோ தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே. ..... (07) 10:23 உச்சிமேல் விளங்கும் இளவெண்பிறை பற்றி ஆடு அரவோடும் சடைப்பெய்தான் நெற்றியார் அழல் கண்ட நெய்த்தானனைச் சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே. ..... (08) 11:40 மாலொடும் மறை ஓதிய நான்முகன் காலொடும் முடி காண்பு அரிது ஆயினான் சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை மாலொடும் தொழுவார் வினை வாடுமே. ..... (09) 13:20 வலிந்த தோள்வலி வாள் அரக்கன்தனை நெருங்க நீள்வரை ஊன்று நெய்த்தானனார் புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும் பரிந்தனை பணிவார் வினை பாறுமே. ..... (10) பொருளுரை : வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும். ஆலய முகவரி : அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில், தில்லைஸ்தானம் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 613 203. எப்படிப் போவது : திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவையாற்றில் இருந்து மேற்கே சுமார் 1.5 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. 01.015 திருநெய்த்தானம் | மையாடிய கண்டன்மலை மலைமகள் | திருஞானசம்பந்தர் தேவாரம் | • திருநெய்த்தானம் - மையாடிய கண்டன்மலை மலைமகள... 04.037 திருநெய்த்தானம் | காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் | திருநாவுக்கரசர் தேவாரம் | • திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) - காலனை வீழ... குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

திருமழபாடி - நீறேறு திருமேனி உடையான் கண்டாய் - திருநாவுக்கரசர் தேவாரம் @ThiruneriyaThamizhosai

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

TV139 04.06.2026 உயிருண்ணிப்பத்து

Vyasa Narada Samvadam | Srimad Bhagavatam | His Voice #147 | Sri Guruji Lecture Series

பாட்டெல்லாம் வேணாம் பேங்க் வேலைக்குப் போங்கன்னு பாட்டி திட்டுவாங்க | இசைக்கலைஞர்கள் ரஞ்சனி-காயத்ரி

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை - 🌸இடரினும் தளரினும்...🌸

திருச்சோற்றுத்துறை - கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் - திருநாவுக்கரசர் தேவாரம்

Maha Periyava's Secret Struggle to Rebuild Sanatana Dharma!@bharathsubramanian5460

சனிக்கிழமை காலை இந்தப் பாடலைக் கேட்டால், தடைகள் அனைத்தும் விலகும் | Perumal & Anjaneyar Bhakti Songs

திருத்துருத்தி(குத்தாலம்) - பொருத்திய குரம்பை தன்னை பொருளெனக் கருத வேண்டா - திருநாவுக்கரசர் தேவாரம்

Vittal Vaibhavam | விட்டல் வைபவம் | Coimbatore | Dr Venkatesh Upanyasam

அடுத்தடுத்து நடக்க போவதை பாருங்க ! | Vijay | Annamalai | Politics | Jothidar Shelvi | IBC Bakthi

திருநெய்த்தானம்(தில்லைஸ்தானம்) - காலனை வீழச்செற்ற கழலடி இரண்டும் - திருநாவுக்கரசர் தேவாரம்

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

The 2500-Year-Old Secret of Kanchi Kamakoti Peetham!@bharathsubramanian5460

#போற்றி_திரு_அகவல் | Thiruvasagam | Potri thiru agaval | சிவ. தாமோதரன் அய்யா | தமிழர்சமயம்

SHRI PERIYAVALUM PERUMALUM BY GOVINDAPURAM SHRI BALAJI BHAGAVATHAR

😨 ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை? கிருஷ்ணரை அதிரவைத்த அஸ்வத்தாமனின் கேள்வி! கிருஷ்ணர் பதில் என்ன? 😱

Thiruvasagam | A Classical Cross-Over | Isaignani Ilaiyaraaja | Manikkavacakar

