உண்ணாமுலை உமையாளொடும் | திருஞானசம்பந்தர் | தேவாரம் - 16 | திருஅண்ணாமலை | Unnamulai umayaludan

A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Kindly Excuse for Mistakes. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram:   / __keerthana_vengatesan   Follow us on Facebook Page:   / keerthanavengatesan1   #annamalaiyar pathigangal, #unnamulai umaiyalodum, #allal theerkum annamalayaarthirupathigangal, #annamalaiyaarsongs, #thiruvannamalaisongs, #annamalaiyarsong, #thiruvannamalai pathigam, #thiruvannamalai, இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அருணாசலேசுவரர். தேவியார் - உண்ணாமுலையம்மை. Meanings: 1.உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும். 2.கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக் கருதி மரநிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர். 3.தோகைகளோடு கூடிய ஆண்மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல்கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த்துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ். (தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்) 4. உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித் திருவடிகளில் அதிரும் வீரக் கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும். 5.வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ? 6.பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத் தோன்றிய நஞ்சை உட்கொள்ளும் அளவிற்குத் துணிபுடையவரும், அந் நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா. 7.கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசைபாடச் செவ்வரி பரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை. 8.ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை. 9.விள மரத்தின் கனியை உகுப்பது போல அம்மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும்குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு. 10.உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலானகுணம். 11.வெம்மை மிக்க கதிரவன் ஒளிபுகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர்  | Thevaram| Sundarar
▶︎

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர் | Thevaram| Sundarar

மந்திரமாவது நீறு | Manthiramavathu neeru | Thevaram | திருஞானசம்பந்தர்
▶︎

மந்திரமாவது நீறு | Manthiramavathu neeru | Thevaram | திருஞானசம்பந்தர்

🙏உன்னை நினைத்தாலே முக்தி தந்திடும் அண்ணாமலையானே/ unnai ninaithale muthi thanthidum annamalai yaane🙏
▶︎

🙏உன்னை நினைத்தாலே முக்தி தந்திடும் அண்ணாமலையானே/ unnai ninaithale muthi thanthidum annamalai yaane🙏

உண்ணாமுலை உமையாளொடும் | உண்ணாமுலை பக்தி பாடல் | SINGER: SIVALOGA SIVAM
▶︎

உண்ணாமுலை உமையாளொடும் | உண்ணாமுலை பக்தி பாடல் | SINGER: SIVALOGA SIVAM

மாதர்ப் பிறைக்கண்ணி யானை | Madar Pirai Kanni Yanai | தேவாரம் -9| Thevaram song in Tamil
▶︎

மாதர்ப் பிறைக்கண்ணி யானை | Madar Pirai Kanni Yanai | தேவாரம் -9| Thevaram song in Tamil

DevAram 1 தேவாரம் அங்கமும் வேதமும் Angamum VEdhamum திருஞானசம்பந்தர் Manipallavam K Sarangan
▶︎

DevAram 1 தேவாரம் அங்கமும் வேதமும் Angamum VEdhamum திருஞானசம்பந்தர் Manipallavam K Sarangan

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra Thaai Thanai Maga Maranthalum | நடராஜர் அபிஷேகம் | Shiva Song
▶︎

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra Thaai Thanai Maga Maranthalum | நடராஜர் அபிஷேகம் | Shiva Song

ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song
▶︎

ஈசனே சிவகாமி நேசனே | பிரதோஷ நாளில் கேட்க வேண்டிய நடராஜர் பத்து | natarajar Pathu | Siva bhakti Song

நீள நினைந்தடியேன் | Sundarar Thevaram - 12 | Neela Ninainthadiyean | 7th Thirumurai | சுந்தரர்
▶︎

நீள நினைந்தடியேன் | Sundarar Thevaram - 12 | Neela Ninainthadiyean | 7th Thirumurai | சுந்தரர்

மனவேதனை மனவலி போக்கும் திருப்புகழ் | murugan devotional songs #murugan #thiruppugazh
▶︎

மனவேதனை மனவலி போக்கும் திருப்புகழ் | murugan devotional songs #murugan #thiruppugazh

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai
▶︎

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

Vizhi Kidaikkuma Abhaya Karam Kidaikkuma | Soulful Devotional Song | Prayer for Divine Grace
▶︎

Vizhi Kidaikkuma Abhaya Karam Kidaikkuma | Soulful Devotional Song | Prayer for Divine Grace

கூற்றாயினவாறு | தேவாரம் -2 | Kootrayinavaru | Thevaram | Thirunavukkarasar | திருநாவுக்கரசர்
▶︎

கூற்றாயினவாறு | தேவாரம் -2 | Kootrayinavaru | Thevaram | Thirunavukkarasar | திருநாவுக்கரசர்

Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
▶︎

Natarajar Pathu | Siva Tamil Devotional Songs

Thiruvum Meiporulum- Sundarar Thevaram  | திருவும் மெய்ப்பொருளும் | Vadathirumullaivayil | Bakthi TV
▶︎

Thiruvum Meiporulum- Sundarar Thevaram | திருவும் மெய்ப்பொருளும் | Vadathirumullaivayil | Bakthi TV

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்
▶︎

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

🔴வியாழக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்
▶︎

🔴வியாழக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

திருவாசகம் | திருப்பொன்னூசல் | சீரார் பவளங்கால் | Thiruvasagam | Thiruponnusal | Seerar pavalankal
▶︎

திருவாசகம் | திருப்பொன்னூசல் | சீரார் பவளங்கால் | Thiruvasagam | Thiruponnusal | Seerar pavalankal

அம்பலத்தரசே  வள்ளலார் திருவருட்பா Ambalatharase Thiruvarutpa by Saint Vallalar
▶︎

அம்பலத்தரசே வள்ளலார் திருவருட்பா Ambalatharase Thiruvarutpa by Saint Vallalar

அவ்வினைக்கு  | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku
▶︎

அவ்வினைக்கு | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku