ஒப்பில் தொல்காப்பியம்: பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் சிறப்புரை
பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் அண்மையில் கலைஞர் மு. கருணாநிநி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பெருந்தகை ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பேரறிவு பெற்ற இவர் திருச்சிராப்பள்ளி உறையூரில் பிறந்தவர். திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் பயின்றவர்; பணியாற்றியவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் சிறப்புரையாற்றியவர். மொரீசியசு நாட்டில் கல்விப்பணிபுரிந்தவர். பேராசிரியர் ப. மருதநாயகம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் தகைமையாளராக இருந்து, அரும்பெரும் பணிகளைச் செய்தவர். தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் நீக்ககப்பெற்ற பதிப்பொன்றை வெளியிட்டவர். இவர் தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்து ஒப்பில் தொல்காப்பியம் என்னும் தலைப்பில் ஆற்றிய உரையினை எம் உலகத் தொல்காப்பிய மன்றம் வழியாக வெளியிடுகின்றோம். உலக மொழியியல் வல்லுநர்கள் தொல்காப்பிய நூலினை முழு முதல் இலக்கண நூலாக உணர்ந்து வருவதைப் பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் தம் உரையில் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். பிறமொழி வல்லுநர்களின் கருத்துகள் பலவற்றைச் சான்றுகாட்டி இவ்வுரையில் விளக்கியுள்ளார். உரையாசிரியர் இளம்பூரணர், அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு.அருணாசலம், ஏ.கே.இராமானுசன், ஏ.சி.பர்னல், டேனியல் சோன்சு, ஏ. எல். பெக்கர், கீத்து டைலர், சுனிதி குமார் சட்டர்சி, சுந்தரராசு, சட்டம்பி அடிகளார், கால்டுவெல், அசுகோ பர்ப்போலா, ஈராசு அடிகளார் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகளைப் பேராசிரியர் ப. மருதநாயகம் இவ்வுரையில் சிறப்பாக எடுத்துக்காட்டித் தம் உரையை அமைத்துள்ளார். வடமொழி இலக்கண நூல்கள் குறித்த அறிஞர்களின் கருத்துகளும் தக்கவாறு மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. தமிழில் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஆழமாகப் பயில விரும்புவார்க்கும் ஆராய்ச்சி செய்ய விழைவார்க்கும் இவ்வுரை பேருதவிபுரியும். இவ்வுரையைப் பதிவுசெய்து உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைப்பதற்குப் பெருந்துணைசெய்த பேராசிரியர் ப. மருதநாயகம் ஐயா அவர்களின் அன்பினைத் தலைவணங்கிப் போற்றுகின்றோம். எம் முயற்சிகளுக்குத் துணைநிற்கும் உலகத் தமிழர்கள் இம்முயற்சியையும் வரவேற்றுப் போற்றுவார்கள் என்று பெரிதும் நம்புகின்றோம். அனைவரும் இணைந்து தொல்காப்பியம் பரப்புவோம்! வாரீர்!!

வடமொழி ஒரு செம்மொழியா? - பேராசிரியர் ப. மருதநாயகம் சிறப்புரை

கிளிநொச்சி DCC கூட்டத்தில் வெளிவராத ரகளைகள்! | சிங்கப்பூர் பறந்த நாமல்..

வள்ளுவரும் வடநூலாரும் - பேராசிரியர் ப. மருதநாயகம் ஆய்வுரை

CHOSEN ONE! U HAVE UNKNOWN FRIENDS IN HIGH PLACES & WHAT THEY WILL DO TO PROTECT U IS UNBELIEVABLE

23 இட்லிகள் சாப்பிட்டார் தமிழரசன்;திருஞானசம்பந்தம் நேர்காணல்-1#tamil #tamilarasan #shivamedia #tnla

Gangai Amaran Reveals Secret! | கங்கை அமரன் SPB பற்றி சொன்ன இதுவரை வெளிவராத விஷயம்!

உங்க உறுப்புகளை பாதுகாக்க Best idea இதுதான்🔥 | 60 வயதிலும் 20 வயதாய் வாழ| Positivitea| Blood Vessell

தமிழின் பெருமை & தமிழரின் தொன்மை | கவிஞர் யுகபாரதி அசத்தல் பேச்சு | Tamil History Speech

The Truth About Millets, Rice & Modern Nutrition - Millet Man of India Explains | Dr. Khader Valli

S. Janaki அம்மா கடைசியா சொன்ன வார்த்தை.. | Playback Singer Mano Emotional Interview | Sun News

முருகன் தமிழ் கடவுளா

பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் வாழ்வும் பணிகளும் – நேர்காணல்

காலத்தின் ரகசியம் | Kadhai Payani Episode 3 | S Ramakrishnan

இந்தியாவின் எதிர்ப்பாளர் Lindsey graham மர்ம மரணம் - தூக்கியதா ரஷ்யா? | Major Madhan Kumar

There is no better weapon than Thiruppugazh: The truth revealed by Arunagirinathar.

KO 2 Super Scenes | A Common Man Kidnaps the Chief Minister.!!🔥 | Bobby Simha | Prakash Raj

அருண் ஐபிஎஸ் அதிரடி மாற்றம் | Badri Seshadri | Arun IPS Transferred | DVAC | CM Vijay | TVK Govt

வெற்றி பெறும் ரகசியம் | Parveen Sultana Speech | Bharathi Baskar Speech | Vetriyin Vazhi

நாகூர் தர்கா Miracles, KUN FAYA KUN & Rumi| The Sufi Path

