05.088 திருமருகல் | பெருகலாம் தவம் பேதமை தீரலாம் | திருநாவுக்கரசர் தேவாரம்
05.088 திருமருகல் | பெருகலாம் தவம் பேதமை தீரலாம் | திருநாவுக்கரசர் தேவாரம் #RathnagireeswararTemple | #Thirumarugal | #PanniruThirumurai | #ThirunavukarasarPathigam கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் "திருமருகல்" என்று பெயர் பெற்றது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வண்டுவார் குழலி திருமுறை : ஐந்தாம் திருமுறை 088 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் பதிக குரலிசை : திரு மயிலை சற்குருநாத ஓதுவார் திருப்புகலூரில் ஞான சம்பந்தரை சந்தித்து, அவருக்கு திருவாரூர் மார்கழி ஆதிரைத் திருநாளின் சிறப்பினை, முத்து விதானம் என்று தொடங்கும் பதிகத்தின் மூலம், விளக்கிய அப்பர் பிரான், அந்த தலத்தில் பல நாட்கள் தங்கி உழவாரப் பணிகள் செய்தார். பின்னர் அருகில் உள்ள பல தலங்களுக்கும் சென்று பதிகங்கள் அருளியவர், திருமருகல் தலத்திற்கு வந்து அங்கே பெருகலாம் தவம் என்று தொடங்கும் குறுந்தொகை பதிகம் அருளினார். இந்த தலத்திற்கு வந்ததைக் குறிப்பிடும் சேக்கிழார், சிறப்பான அன்புடன் இந்த தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கி அப்பர் பிரான் இன்புற்றார் என்று கூறுகின்றார். இறைவனிடத்தில் எந்த வேண்டுகோளும் விடுக்காமல், அவனை வழிபட்டால், நமது நியாயமான தேவைகளை உணர்ந்து சிவபிரானே நமக்கு அருள் செய்வான் என்பது அருளாளர்களின் கருத்து. அதனால் தான் அவர்கள் வேண்டுகோள் ஏதும் விடுக்காமல், இறைவனை வழிபடுவதில் இன்பம் அடைந்தார்கள். பெருகலாம் தவம் பேதமை தீரலாம் திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம் பருகலாம் பரமாயதோர் ஆனந்தம் மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே. ..... (01) பாடங்கொள் பனுவல் திறம் கற்றுப் போய் நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் மாடம் சூழ் மருகல் பெருமான் திரு வேடம் கைதொழ வீடு எளிதாகுமே. ..... (02) சினத்தினால் வரும் செய் தொழிலாம் அவை அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக மனத்தினால் மருகல் பெருமான் திறம் நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே. ..... (03) ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி பாதுகாத்துப் பலபல கற்பித்து மாதுதான் மருகல் பெருமானுக்குத் தூது சொல்ல விடத்தான் தொடங்குமே. ..... (04) இன்னவாறு என்பது உண்டு அறியேன் இன்று துன்னு கைவளை சோர கண் நீர் மல்கும் மன்னு தென் மருகல் பெருமான் திறம் உன்னி ஒண்கொடி உள்ளம் உருகுமே. ..... (05) சங்கு சோரக் கலையும் சரியவே மங்கை தான் மருகல் பெருமான் வரும் அங்க வீதி அருகு அணையா நிற்கும் நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே. ..... (06) காட்சி பெற்றிலள் ஆகிலும் காதலே மீட்சி ஒன்று அறியாது மிகுவதே மாட்சியார் மருகல் பெருமானுக்குத் தாழ்ச்சி சால உண்டாகும் என் தையலே. ..... (07) நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் ஓடும் மாலினோடு ஒண்கொடி மாதராள் மாடம் நீள் மருகல் பெருமான் வரில் கூடு நீ என்று கூடல் இழைக்குமே. ..... (08) கந்தவார் குழல் கட்டிலள் காரிகை அந்தி மால் விடையோடும் அன்பு அன்பாய் மிக வந்திடாய் மருகல் பெருமான் என்று சிந்தை செய்து திகைத்திடும் காண்மினே. ..... (09) ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் ஆதியான் மருகல் பெருமான் திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே. ..... (10) பொருளுரை : முதன்மையானதும் பெருமை மிக்க உடையதுமாகிய கயிலைத் திருமலையை, அன்று எடுத்தவனாகிய இராவணனது தலைகள் மலையின் கீழ் அமுக்குண்டு வேதனைப் பட்ட நேரத்தில், இராவணன் சோதியே என்று சிவபெருமானைத் தொழலும், அவனுக்கு பல விதத்திலும் அருள் புரிந்திட்ட, மருகல் பெருமானின் திறத்தை எப்போதும் ஓதி வாழ்பவர், தேவர்களுக்கும் தேவராகத் திகழ்வார்கள். ஆலய முகவரி : அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருமருகல், திருமருகல் அஞ்சல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN - 609 702. எப்படிப் போவது : நன்னிலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம். திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

கண்டேன் அவர் திருப்பாதம் | கயிலைக் காட்சி கண்டபதிகம் | அப்பர் | தேவாரம் | திருநாவுக்கரசர் |

05.068 திருநள்ளாறு | உள் ஆறாததோர் புண்டரிகத்திரள் | திருநாவுக்கரசர் தேவாரம்

தேவாரம் - காதலாகி கசிந்து -திருமணத் தடை நீங்கவும்,கடன் தீரவும்,நல்வழி காட்டவும் வேண்டி பாடும் பதிகம்

திருவேட்களம் திருப்பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம்

05.046 திருப்புகலூர் | துன்னக் கோவண சுண்ண வெண்ணீறு | திருநாவுக்கரசர் தேவாரம்

05.035 திருப்பழனம் | அருவனாய் அத்தி ஈருரி போர்த்து உமை உருவனாய் | திருநாவுக்கரசர் தேவாரம்

பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மாசில் வீணையும்

சென்னிப் பத்து - திருவாசகம் | சிவ தாமோதரன் ஐயா | பக்தி டிவி

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

06.006 திருஅதிகை வீரட்டானம் | அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி | திருநாவுக்கரசர் தேவாரம்

பச்சைப் பதிகம் #திருநள்ளாறு #திருமயிலை சற்குருநாத ஓதுவார் ஐயா |போகமார்த்த-திருஞானசம்பந்தப் பெருமான்

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் | Kandar Alangaram | Powerful Murugan Devotional | OM TV

"மீளா அடிமை"MEELA ADIMAIகண் பிரச்சனைக்கு தீர்வு சுந்தர் அருளியது நன்றிBy குரலிசை P.சம்பந்த குருக்கள்

பஞ்சபுராணம் பாடல்களை தினமும் பாடி வழிபடுங்கள்.

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

173.இடரினும் தளரினும் |திருவாவடுதுறை | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

மிக மிக சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

