06.006 திருஅதிகை வீரட்டானம் | அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி | திருநாவுக்கரசர் தேவாரம்

06.006 திருஅதிகை வீரட்டானம் | திருவடித் திருத்தாண்டகம் | அரவணையான் சிந்தித்து அரற்றும் | திருநாவுக்கரசர் தேவாரம் | ‪@PanniruThirumurai‬ சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள் நீக்கியாரும் பிறந்தனர். மருள் நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் "கூற்றாயின வாறு விலக்ககிலீர்" என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அதிகை வீரட்டேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி திருமுறை : ஆறாம் திருமுறை 003 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் கொடிய சூலை நோயிலிருந்தும் சமணர்கள் அடுத்தடுத்து செய்த சூழ்ச்சிகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிய அதிகை வீரட்டத்து இறைவனைப் புகழ்ந்து, போற்றித் திருத்தாண்டகம் அருளிய அப்பர் பிரான், அதன் பின்னர் இறைவனின் திருவடிகளின் சிறப்பினை விவரித்து அருளிய பதிகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகம் திருவடி திருத்தாண்டகம் என்று அழைக்கப் படுகின்றது 00:14 அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணியாம் அடி சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி திரைவிரவு தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்செல்வன் அடி. ..... (01) 03:02 கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி படுமுழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி கடுமுரண் ஏறு ஊர்ந்தான் கழற்சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி நெடுமதியம் கண்ணி அணிந்தான் அடி நிறைகெடில வீரட்டம் நீங்கா அடி. ..... (02) 04:13 வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி கணக்கு வழக்கைக் கடந்த அடி நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடறுத்து நின்ற அடி தெய்வப்புனல் கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்செல்வன் அடி. ..... (03) 06:04 அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி பெரும் பித்தர் கூடிப் பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி திருந்து நீர்த் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்செல்வன் அடி. ..... (04) 07:37 ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழிதோறு ஊழி உயர்ந்த அடி பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ்தகைய வல்ல அடி இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்டபூ ஏறும் அடி திருஅதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்செல்வன் அடி. ..... (05) 09:09 திருமகட்குச் செந்தாமரையாம் அடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ்தகைய வல்ல அடி உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உருவென்று உணரப்படாத அடி திருஅதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்செல்வன் அடி. ..... (06) 10:46 உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி வரைமாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் அடி அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி கரைமாங் கலிக்கெடில நாடன் அடி கமழ் வீரட்டானக் காபாலி அடி. ..... (07) 12:40 நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி நடுவாய் உலகம் நாடாய அடி செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி தீத்திரரளாய் உள்ளே திகழ்ந்த அடி மறுமதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி செறிகெடில நாடர் பெருமான் அடி திருவீரட்டானத்து எம்செல்வன் அடி. ..... (08) 13:45 அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி பற்று அற்றார் பற்றும் பவள அடி மணியடி பொன்னடி மாண்பாம் அடி மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி தணிபாடு தண்கெடில நாடன் அடி தகைசார் வீரட்டத் தலைவன் அடி. ..... (09) 15:02 அந்தாமரைப்போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி முந்தாகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி பந்தாடு மெல்விரலாள் பாகன் அடி பவளத் தடவரையே போல்வான் அடி வெந்தார் சுடலை நீறாடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி. ..... (10) ஆலய முகவரி : அருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை, பண்ருட்டி அஞ்சல், கடலூர் மாவட்டம், PIN - 607 106. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

05.068 திருநள்ளாறு | உள் ஆறாததோர் புண்டரிகத்திரள் | திருநாவுக்கரசர் தேவாரம்
▶︎

05.068 திருநள்ளாறு | உள் ஆறாததோர் புண்டரிகத்திரள் | திருநாவுக்கரசர் தேவாரம்

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai
▶︎

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

K. B. Sundarambal Hits | வாழ்க்கை என்னும் | காலத்தால் அழியாத | பழம் நீயப்பா ஞானப்பழம்
▶︎

K. B. Sundarambal Hits | வாழ்க்கை என்னும் | காலத்தால் அழியாத | பழம் நீயப்பா ஞானப்பழம்

Lessons from Mahabharata Day 1/3 | New Jersey | Dr Venkatesh Upanyasam
▶︎

Lessons from Mahabharata Day 1/3 | New Jersey | Dr Venkatesh Upanyasam

இன்றைய இளைஞர்கள் .சிவாக்கர தேசிக சுவாமிகளின் அருளாசியுரை
▶︎

இன்றைய இளைஞர்கள் .சிவாக்கர தேசிக சுவாமிகளின் அருளாசியுரை

There is no mantra equal to this mantra, the great mantra taught by Periyava, which is immediatel...
▶︎

There is no mantra equal to this mantra, the great mantra taught by Periyava, which is immediatel...

latha kathirvel speech | வாரியார் சுவாமிகள் சொன்ன மாறித்தான் சொல்லணும் | Iriz Vision
▶︎

latha kathirvel speech | வாரியார் சுவாமிகள் சொன்ன மாறித்தான் சொல்லணும் | Iriz Vision

Margazhi Vaibhavam 2025-Day1-                                       💐 Sangitamum Samskrithiyum 💐
▶︎

Margazhi Vaibhavam 2025-Day1- 💐 Sangitamum Samskrithiyum 💐

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2
▶︎

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

Murugan Padalgal | T.M. Soundararajan | Azhagendra Sollukku | Muruganai Koopittu | Carnatic Music
▶︎

Murugan Padalgal | T.M. Soundararajan | Azhagendra Sollukku | Muruganai Koopittu | Carnatic Music

நாமதேவர் சரித்திரம் எதற்காக கேட்கனும்? | சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் | உபன்யாசம்
▶︎

நாமதேவர் சரித்திரம் எதற்காக கேட்கனும்? | சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் | உபன்யாசம்

05.046 திருப்புகலூர் | துன்னக் கோவண சுண்ண வெண்ணீறு | திருநாவுக்கரசர் தேவாரம்
▶︎

05.046 திருப்புகலூர் | துன்னக் கோவண சுண்ண வெண்ணீறு | திருநாவுக்கரசர் தேவாரம்

திருமூலர் திருமந்திரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Thirumoolar Thirumantiram
▶︎

திருமூலர் திருமந்திரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Thirumoolar Thirumantiram

05.088 திருமருகல் | பெருகலாம் தவம் பேதமை தீரலாம் | திருநாவுக்கரசர் தேவாரம்
▶︎

05.088 திருமருகல் | பெருகலாம் தவம் பேதமை தீரலாம் | திருநாவுக்கரசர் தேவாரம்

Tiruvarur Panchalinga Kritis of Muthuswamy Dikshitar
▶︎

Tiruvarur Panchalinga Kritis of Muthuswamy Dikshitar

திருவாசகம் I சில சிந்தனைகள் I சிவபுராணம்I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்
▶︎

திருவாசகம் I சில சிந்தனைகள் I சிவபுராணம்I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்
▶︎

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

வினாவெண்பா 8
▶︎

வினாவெண்பா 8

திருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் பாடல்கள் | தமிழ் பக்திப் பாடல்கள் | JUKEBOX
▶︎

திருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் பாடல்கள் | தமிழ் பக்திப் பாடல்கள் | JUKEBOX

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்
▶︎

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்