மறை உடையாய்; தோல் உடையாய் - 1.052 திருஞானசம்பந்தர் : முதல்-திருமுறை - திருநெடுங்களம்
Download this track : https://open.spotify.com/track/0RQSNv... Buy Album: http://www.layamusic.in/store/index.p... / layamusicindia / agklayamusic / layamusicindia www.layamusic.in 1.052 மறை உடையாய்; தோல் உடையாய் திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு 1.052 திருஞானசம்பந்தர் : முதல்-திருமுறை தலம் : திருநெடுங்களம் சிறப்பு: — திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு நித்தியசுந்தரர் - ஒப்பிலாநாயகியம்மை மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.1 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும் நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.2 நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மே யவனே. 1.52.3 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ் நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.4 பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ் நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.5 விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும் நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.6 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.7 குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும் நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.8 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும் சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின் நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.9 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.10 நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச் சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால் நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன 1.52.11 பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. திருச்சிற்றம்பலம். 1. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள்வாயாக. கு-ரை: மறையுடையாய் என்பது முதலிய சொல்லித் தோத்திரித்தால் அல்லது குறையுடையார் குற்றத்தை ஆராயாத தேவரீர், நிறையுடையார் துன்பத்தையும் களையவேண்டும் என்கின்றது Contact Us : [email protected] Phone: 044-24990245 / 9884080789

Maraiyudaiyai

சம்பந்தர் தேவாரம் திருவண்ணாமலை பதிகம் " உன்னாமுலை உண்மையாலோடும் " பாடல்.

உணர்வுதான் மனிதன் .....II இலங்கை ஜெயராஜ் II

திருவாரூர் தியாகராஜர் பற்றி தெரியாத ரகசியங்கள் | Dr மதுசூதனன் கலைச்செல்வன் | Aadhan Aanmeegam

மாணிக்கவாசகர் வரலாறு பகுதி| 1|

Books that feed my divine thirst | ஆன்மீக அறிவூட்டும் புத்தகங்கள் #aanmeegam #panniruthirumuraigal

🔴 CM விஜய் சொன்ன ஒரு வார்த்தை..😱 கடுப்பாகி கத்திய உதயநிதி ஸ்டாலின்

"மௌனம்" எவ்வளவு பெரிய தண்டனையாக மாறும் என்பதை அவன் முதல் முறையாக உணர்ந்தான்!! உணச்சிகரமான கதை

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

DK Pattammal | AIR Relay from Thiruvaiyyaru, 1959 | #TyagarajaAradhana

வாழ்க்கையை மாற்றும் தமிழ் பாடல் 🔥 Yugabharathi motivational speech in Tamil

திருக்கயிலாயப் பதிகங்கள் | திருப்பாட்டு | தானெனை முன் படைத்தான் #omnamahshivaya #shivaratri2025

மன வறுமை வந்து விட்டதே ?! II இலங்கை ஜெயராஜ் II தமிழ் சொற்பொழிவு II

Songs of Sadashiva Brahmendral

சூரியனைப் பற்றி யக்ஷன் கேட்ட 4 கேள்விகள்! | Mahabharatham | Yaksha Prashnam 03 | Tamil

முருகன் துணை நிற்பான் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Murugan Thunai Nirpan - Best Tamil Speech

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

"சிந்தனையில் தீர்வு உள்ளது" இது சிந்தனை வழி செம்மையாதல் உரையின் தொடர்ச்சி - ஆசான் ம.செந்தமிழன்

Top 10 Golden Hits Jebathotta Jeyageethangal | Father S J Berchmans

