காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி | Kadhalagi Kasindhu with lyrics | தேவாரம் | Thevaram
A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram: / __keerthana_vengatesan Follow us on Facebook Page: / keerthanavengatesan1 #thevaram #devaram #tamil காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி | Kadhalagi Kasindhu with lyrics | தேவாரம் | Thevaram காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. 1 நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே. 2 நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே. 3 இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே. 4 கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே. 5 மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே. 6 நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே. 7 இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. 8 போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சி வாயவே. 9 கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. 10 நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே. 11

மாதர்ப் பிறைக்கண்ணி யானை | Madar Pirai Kanni Yanai | தேவாரம் -9| Thevaram song in Tamil

கூற்றாயினவாறு | தேவாரம் -2 | Kootrayinavaru | Thevaram | Thirunavukkarasar | திருநாவுக்கரசர்

Kadhalaagi Song Thiruvarutchelvar

16 - காதலாகி கசிந்து பொருள் விளக்கம் - STAP - AGATHIAR KADHALAGI EXPLANATION Part1

4.1 - கூற்றாயினவாறு - திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra Thaai Thanai Maga Maranthalum | நடராஜர் அபிஷேகம் | Shiva Song

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

சொற்றுணை வேதியன் சோதி வானவன் | தேவாரம்

அவ்வினைக்கு | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku

மீளா அடிமை | Meela Adimai | சுந்தரர் தேவாரம் | Sundarar Thevaram | Cures Eye Problems.

Krupananda Variyar | அப்பர் 'எந்நாளும் இன்பமே' என்று பாடியதன் பொருள் இதுதான் | Vaadhavooran Ayya

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் | தேவாரம் -18 | Thiruvum Meiporulum | சுந்தரர் | Thevaram

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

Meela Adimai - மீளா அடிமை | Thevaram Vol II

மனம் அமைதி பெற சித்தர் சிவவாக்கியர் பாடல் - ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை... பாடல்// Odi odi song

துன்பம் தீர்க்கும் தேவாரம் | அப்பர் பெருமான் அருளிய சிவன் பதிகங்கள்

முன்னவன் எங்கள்பிரான் | சுந்தரமூர்த்தி தேவாரம் | Munnavan Engal Piran | Thevaram | Sundarar

Maraiyudaiyai Tholudaiyai

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி...’ - நெஞ்சை உருக்கும் திருநல்லூர் திருக்கல்யாண வைபவம்

