திருவாரூர் தியாகராஜர் கோயில் வரலாறு | ஒரே நேர்கோட்டில் நவகிரகங்கள் | Thiruvarur Thiyagarajar Temple
திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும்.இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். மூலவர்: வன்மீகநாதர், தியாகராஜர், தாயார்: அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள் தல விருட்சம்: பாதிரி. தீர்த்தம்: கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம் தல வரலாறு திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி. எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். தல சிறப்புக்கள் பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் . சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் . பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும். இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டி எனப் பெயர். தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். கோயில் அமைப்பு 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும் அன்னை கமலாம்மாள் சந்நிதி திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார். ஆடிப் பூரம்,ஆடி வெள்ளி,தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள் பெறலாம். அமைவிடம் திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 121 கி.மீ தொலைவில் திருவாரூர் அமைந்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, திருச்சி, சென்னை, பழனி, நாகப்பட்டினம், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை மற்றும் சேலம் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது. If you want to Support our channel via UPI ID nava2904@kvb Join our channel Whats app Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRAGAJPN... Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்

திருவாரூர் தியாகராஜர் பிரம்மோற்சவ சிறப்புகள் | Tiruvarur Thiyagarajar | Madhusudhanan Kalaichelvan

திருவாரூர் தேரின் ரகசியங்கள் | Secrets of Thiruvarur Thyagaraja Temple |தியாகராஜர் கோயில் ரகசியங்கள்

விஜய் ஆட்சியில் மிரட்டும் IAS...உஷார் இல்லனா....😳 - பாண்டியன் புதிய தகவல் | Aadhan Tamil

திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில் மாங்கல்ய பிரசாதம் தந்து மாங்கல்ய தோஷம் நீக்கும் மங்களாம்பிகை

திருவாரூர் தியாகராஜர் அஜபா நடணம் Thiruvarur Thiyagarajar Ajaba Nadanam

திருவாரூர் மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வரலாறு | The Shocking Secrets of Siddhar's Revealed

ஸ்ரீ தியாகேச ஆனந்த களிப்பு #Nirmalharish Sri Tyagesa Anandhakkalippu #Thyagaraja #thiruvarur

கோனேரிராஜபுரம் / திருநல்லம் உமா மகேஸ்வர்ர் / நடராஜர் கோயில் Kumbakonam/ Konerirajapuram

வழிபடும் முறை! இங்கிருந்தபடியே திருவாரூர் கோவிலுக்கு செல்லலாம்! Thiruvarur temple tour #thiruvarur

திருவாரூர் தியாகராஜர் பற்றி தெரியாத ரகசியங்கள் | Dr மதுசூதனன் கலைச்செல்வன் | Aadhan Aanmeegam

விஜயின் பேச்சால் கண்கலங்கிய மோடி! | டெல்லியில் அரங்கத்தை அதிர விட்ட விஜய்! | CM Vijay delhi meeting

இன்றும் சிவபெருமான் வாழும் திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ரகசியங்கள் | thiruvarur thiyagarajar kovil

Kamalalaya Mahtmiyam Part-1, திருவாரூர் சிறப்புகள், கமலாலய மஹாத்மியம், Madhusudhanan Kalaiselvan

விஜய் ஆட்சியில் பாலியல் குற்றமா?அண்ணாமலைக்கு பதில் R.Varadharajan Ex-Police / Advocate

Thiruvarur Ther Festival - The Engineering Marvel I Documentary Film with subtitles I 4k

திருவாரூருக்கு தியாகராஜர் வந்த ரகசியம் | Dr மதுசூதனன் கலைச்செல்வன் #shivan #temple

எதிரியின் பலத்தை தூள் தூளாக்கும் வாலி வழிபட்ட வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் | தமிழகம் மறந்த அற்புத கோயில்

திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய வரலாறு|thirumeeyachur lalithambigai temple history in tamil|meganathar

செடிகளுக்குள் உறங்கும் சோழ தேசத்து ரகசியம்: கல்வெட்டுகள் சொல்லும் உண்மை! | Tiruvarur | Manoj Murugan

