Kollur Mookambika Temple | கொல்லூர் மூகாம்பிகை கோயில் தரிசனம் சகல நோயை குணமாக்கும் கசாய பிரசாதம்
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் கொல்லூர் கர்நாடகா சிவனும் சக்தியும் இணைந்த ஜோதிர் லிங்க ஸ்தலம் ஆதி சங்கரரால் அமைக்கப்பட்ட ஸ்ரீ சக்ரத்தின் மேல் பஞ்சலோக விக்கிரகத்தில் அம்மன் அருளும் சக்தி தலம். அம்மனின் சக்தி பீடம் சிவனில் அணைத்தும் அடக்கம் என்ற அற்புத தத்துவத்தை விளக்கும் பக்தி மணம்கமழும் சிவசக்தி ஷேத்திரம். மூலவர் மூகாம்பிகை தீர்த்தம்: அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு புராணப் பெயர்: கொல்லாபுரம் ஊர்: கொல்லூர் மாவட்டம்: உடுப்பி மாநிலம்: கர்நாடகா திருவிழா: பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி. கொல்லூர் அன்னை மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள். தலசிறப்பு: லக்ஷ்மி,பார்வதி மற்றும் சரஸ்வதி மூன்றும் சேர்ந்த ஒரு சக்தி தான் மூகாம்பிகை அம்மன். பரசுராமரால் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ஏழு முக்தி ஸ்தலங்களில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஓன்று. பிரார்த்தனை: மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள். சகலநோய் நிவாரணி ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்ற போது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் சவுந்தர்ய லஹரி எழுதியுள்ளார். தல வரலாறு இந்த கொல்லூரில் கோல மகரிஷி சிவனை நோக்கி தவம் செய்து வந்தார்.கோல மகரிஷியின் தவத்தை மெச்சிய பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி, ‘‘பக்தா, வேண்டும் வரம் கேள்!’’ என்றார். ஈசனே, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். உலகில் மாதம் மும்மாரி பொழிய வேண்டும். பயிர்களும் உயிர்களும் செழிக்க வேண்டும். எல்லோரும் நிறைந்த ஆயுளுடனும், தேக சுகத்துடனும் வாழ வேண்டும். இவற்றைத் தவிர, எனக்கு வேறு எதுவும் வேண்டாம்!’’ என்று பதிலளித்தார் மகரிஷி. ஈசன் மனம் மகிழ்ந்து, ‘‘கோல மகரிஷியே இதோ, இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா!’’ என்று அருளினார். ஈசன் அருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி இறைவனிடம், ‘‘ஈசனே! சக்தி தேவி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது?’’ என்று வருத்தத்துடன் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள ஸ்வர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதி, அறுபத்துநான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதி, செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப் பார்கள். வலப் புறம் பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன்!’’ என்று கூறி மறைந்தார். ஈசன் அருளியவாறு ஸ்வர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை, கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள். இந்த நிலையில் மூகாசுரன், கோல மகரிஷி வாழும் இந்தத் தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அசுரர் குழாமுடன் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு வசிக்கும் அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந் தான். பாதிக்கப்பட்டவர்கள், கோல மகரிஷியிடம் சென்று கண்ணீருடன் முறையிட்டனர். அனைவரையும் சாந்தப்படுத்திய அவர், மூகாசுரனை சம்ஹரிக்க வேண்டி அம்பாளை நோக்கிக் கடும் தவம் இருந்தார். அம்பாள், கோல மகரிஷியின் முன் தோன்றினாள். முனிவரின் முறையீட்டைத் தொடர்ந்து கோபக் கனலைக் கண்களில் தேக்கி, கையிலே திரிசூலம் ஏந்தி, தேவ கணங்களில் திறமை வாய்ந்த வீரபத்ரனைப் படைத் தளபதி யாக்கி மூகாசுரனோடு போர் புரிந்தாள் அம்பிகை. முடிவில் அசுரன் மடிந்தான். மூகாசுரன் மடிந்த பகுதி, கொல்லூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ‘மாரண ஹட்ட’ என்னும் இடமாகும். கொல்லூர் வந்து ஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அம்பாள் அவருக்குப் பிரத்தியட்சமானாள். பத்மாசனத்தில் வீற்று, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரண டையத் தூண்ட, மற்றது வரமருளி வாழ்த்தும் கோலத்தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை, தேர்ந்த ஸ்தபதியிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி, அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது. ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால், மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீமூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் பிரத்தியட்சமான பிறகு, அவர் இயற்றியது தான் ‘சௌந்தர்ய லஹரி. மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த பீடம், அம்பாள் படைத் தளபதியாக நியமித்த வீரபத்திரர் சந்நிதி ஆகியவற்றையும் காணலாம். அம்பாளுக்கு நடக்கும் எல்லா பூஜையும் வீரபத்திரருக்கும் உண்டு. அன்னை மூகாம்பிகைக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. ஆரத்தி, புஷ்பாஞ்சலி மட்டுமே உண்டு. ‘‘இது ஸித்தி க்ஷேத்திரம்" ஆகும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our Channel via UPI ID nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்

சக்திவாய்ந்த கொல்லூர் மூகாம்பிகை கோயில் உருவான வரலாறு | Kolluru Mookambika Temple | Vlog #3

Ilayaraja Interview Part 2 | அம்மன் மூகாம்பிகை உடனான ஆன்மீக பயணம் தொடங்கியது எப்போது? | N18V

How to Worship Mookambika at Home? The Secret "Pooja Vidhanam" Revealed by Shiva 🕉️

நினைத்ததை நடத்திக்காட்டும் தாய் மூகாம்பிகை...! |G Gnanasambandan |kollur mookambigai| Devotional

Vlog 1 - Kollur Mookambika Temple | Travel, Food & Divine Energy #mookambikatemple #travel

Ilayaraja's mesmerizing spiritual experience with the book he found upon entering the house #ilai...

அற்புத சக்தி கொண்ட தாய் மூகாம்பிகை வழிபாடு! ஆன்மீக தாவல்கள் | Magesh Iyer | Puthuyugam TV

Thai Moogambigai Devotional Movie | தாய் மூகாம்பிகை பக்தி திரைப்படம்

உன் உயிரைப் பறிக்க காத்திருக்கும் இந்த உறவு யார் என்று தெரிந்து கொள் காலம் கடத்தாதே /அம்மன்

காளையார்கோவில் சொர்ணகாளிஸ்வரர் | செல்வ வளம் பெருக வழிபட வேண்டிய தலம் | Kaalayarkoil Temple History

The One and Only Kollur Mookambika Devi Temple I Sreejith Krishnan

கொல்லூர் மூகாம்பிகை கோயில் உருவான வரலாறு... | History of Kollur mookambika | Mookambikai | Jothitv

8th Century Aadhi Sankarar Full History in Tamil | The Story of Adi Shankara |Advaitham

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தினமும் நடக்கும் சண்டி ஹோமம் | Covai Pandit Vijay | #Temple #vlog

karnataka Temple Tour In Tamil | Budget Trip karnataka important Places In karnataka Latest in Tamil

எல்லா பிரச்சனைக்கும் ஒரே அதிசய கோவில் இதுதான்! ALP Astrologer Sampath | Temple For Life Problems

அம்மா மூகாம்பிகை | தமிழ் மூகாம்பிகை பக்தி பாடல்கள் | Amma Moogambikai | Tamil Devotional Songs

Mookambika Temple History | The Secret Sri Chakra Drawn by Lord Shiva! 😱

அருள்மிகு உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணண் திருக்கோயில் | Dhinam Oru ThiruKovil | JayaTv

