#திருப்பாண்டிக்கொடுமுடி / பெண்ணமர் மேனியினாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் / திருஞானசம்பந்தர் தேவாரம்
02.069 திருப்பாண்டிக்கொடுமுடி | பெண்ணமர் மேனியினாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @NalamTharumThirumuraiPathigam MagudeswararTemple | #ThiruppandiKodumudi | #NalamTharumThirumuraiPathigam ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கொடுமுடிநாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வடிவுடைநாயகி சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார். 00:14 பெண்ணமர் மேனியினாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் கண்ணமர் நெற்றியினாரும் காதமரும் குழையாரும் எண்ணமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் பண்ணமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (01) 01:57 தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழுவார் அவர் தங்கள் வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடு முடியாரே. ..... (02) 02:46 சடையமர் கொன்றையினாரும் சாந்த வெண்ணீறு அணிந்தாரும் புடையமர் பூதத்தினாரும் பொறிகிளர் பாம்பு அசைத்தாரும் விடையமரும் கொடியாரும் வெண்மழு மூவிலைச் சூலப் படையமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (03) 03:32 நறைவளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த கறைவளர் மாமிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி மறைவளர் பாடலினோடு மண்முழவம் குழல் மொந்தை பறைவளர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (04) 04:26 போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பார் அவர் தங்கள் ஆகம் உறைவிடமாக அமர்ந்தவர் கொன்றையினோடும் நாகமும் திங்களும் சூடி நன்நுதல் மங்கைதன் மேனிப் பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (05) 05:25 கடிபடு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும் பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும் வடிவுடை மங்கை தன்னோடு மணம்படு கொள்கையினாரும் படிபடு கோலத்தினாரும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (06) 06:11 ஊனமர் வெண்தலை ஏந்தி உண்பலிக்கு என்று உழல்வாரும் தேனமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும் கானமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரைமேல் பானல நீறு அணிவாரும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (07) 06:56 புரந்தரன் தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் பெருந்திறல் வாள் அரக்கன்னைப் பேரிடர் செய்து உகந்தாரும் கருந்திரை மாமிடற்றாரும் கார் அகில் பன்மணி உந்திப் பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடு முடியாரே. ..... (08) 07:51 திருமகள் காதலினானும் திகழ்தரு மாமலர் மேலைப் பெருமகனும் அவர் காணாப் பேரழல் ஆகிய பெம்மான் மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே பருமணி நீர்த்துறையாரும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (09) 08:40 புத்தரும் புந்தியிலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால் மெய்த்தவம் பேசிடமாட்டார் வேடம் பல பலவற்றால் சித்தரும் தேவரும் கூடி செழுமலர் நல்லன கொண்டு பத்தர்கள் தாம் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடு முடியாரே. ..... (10) 09:28 கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் பலமல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி தன்னைச் சொலமல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து நலமல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர் தாமே. ..... (11) பதிகப் பலன் : மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர். ஆலய முகவரி: அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி, ஈரோடு வட்டம், ஈரோடு மாவட்டம், PIN - 638 151. எப்படிப் போவது : ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து வடமேற்கே சுமார் 26 கி.மீ. தொலைவிலும் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. ரயில் நிலயம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 முதல் 10 நிமிட நடை தொலைவில் ஆலயம் உள்ளது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Thiruvasagam Music Launch | Pa. Sarkurunathan Oduvar | 34th Annual Thiruvasagam Conference | Bakt...

திருவாசகம்-சிவபுராணம் | #sivapuranam #thiruvasagam #namasivaya #manikkavasagar #sambandamgurukkal

Alexander Babu speech | Karu Palaniappan's Cooker | 'Kudhupi' Book Launch event

திருக்கொள்ளம்பூதூர் | கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் | திருஞானசம்பந்தர் தேவாரம்

மந்திரமாவது நீறு| திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகம் பாடல்

வாழ்க்கையை மாற்றும் தமிழ் பாடல் 🔥 Yugabharathi motivational speech in Tamil

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

#திருஅதிகை வீரட்டானம் / கோணல் மாமதி சூடி ஓர் கோவணம் / திருநாவுக்கரசர் தேவாரம்

கனடா மொன்றியால் வல்மொறின் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர் திருவிழா

திருத்துறையூர் / மலையார் அருவித்திரள் மாமணி உந்தி / சுந்தரர் தேவாரம்

18 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த நபர் 😱 அதிர்ச்சியில் உறைந்துபோன கோபி | Neeya Naana Latest

திருவாசகம் விளக்கம்-18 கீர்த்தித் திரு அகவல் நிறைவு திரு. மீ. சிவசண்முகம் அய்யா

27 நட்சத்திரங்களின் ரகசியம்! | அஸ்வினி முதல் ரேவதி வரை | உங்கள் STAR-ன் மெகா மர்மம் | Jeevitha

Gangai Amaran Reveals Secret! | கங்கை அமரன் SPB பற்றி சொன்ன இதுவரை வெளிவராத விஷயம்!

லண்டனில் பேசப்பட்ட திருவாசகம்! கண்கலங்கிய விக்டோரியா மகாராணி | Thiruvasagam | Manikkamvasagar

Mahaperiyava’s Divine Message | Life-Changing Secret of Annadhanam @mahaperiyavamahimai

வெடித்த மிகப்பெரிய சண்டை 😱 திடீரென கத்திய செங்கோட்டையன்

உஷாரு மக்களே! ATM கார்டு பத்திரமா வச்சுக்கோங்க! Funny Tamil Talk wt Fake Bank Person| Bank Fake Call

மஹாபெரியவாளின் அற்புதங்கள் 19

