OWN HOUSE 🏠, சொந்த வீடு அமைய உதவும் சிறுவாபுரி பதிகம்,SIRUVAPURI PATHIGAM,@srnvideo3172
சிறுவாபுரி பதிகம் காப்பு சொந்த வீடு அமைய பாட வேண்டிய பாடல் சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது புவியளாக் குன்றம் தனிலாடும் வேலன் புகழ் பாட நல்ல தமிழை சுவையோடு தந்து நிறைவாகச் செய்ய துணையாக வேண்டும் எனவே கவிபாடி வேண்டி கசிந்தேதுகின்றேன் கணநாதன் எந்தன் துணையே கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான் வெல்லாத கோழை வெகுவீரனாக விதிமாற்றி வைத்து விடுவான் நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதங்கூட வைத்துவிடுவான் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில்வீடு ஐயன் தருவான் பணக்கரான் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி அறியான் தனைக்காண வந்து தமிழ் பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான் தினை காட்டு வள்ளி தனை நாடும் வள்ளல் சிறுவாபுரி குமரனே நெல்லோடு வாழை நிறைவாக சூடும் நிலமோங்கு நல்ல பதியாம் வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர் வென்றடி நின்ற இடமாம் பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே தவமோங்கு தந்தை செவியோடி பேசிக் சதுர்வேதம் சொல்லி விடவே சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ள விலையோ புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே சிவபால தேவன் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காள மிட்டுப்புகுந்து கொட்டாடும் சூரன் குலநாசமாகக் கூர்வேலைத் தொட்ட குமரன் தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குமரன் செட்டாய் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து காராருங் கூந்தல் தெய்வானை தன்னைக் கல்யாணம் செய்து தருவார் ஏராரும் வேலன் இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம் சீராய் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே குருயானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ குறமாது தன்னை மணமாலை சூடிக்கொண்டாடும் இன்ப நினைவில் தருமேவு நல்ல தணிகா சலத்தில் தனிவீடு கொண்ட குகனாம் சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக்குமரனே சிற காட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும் குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும் உறவோரும் என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக்குமரனே ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்ப திலையே பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாராங்கும் உண்மை நிலையே ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே மெய் பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே பொய்பேசிச் செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்த தென்றும் இலையே கையாற வேலன் கால்த்தேடி பற்றக் கவினாடும் இன்ப நிலையே தெய்வானை நாதன் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாற கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனமாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே ! சொந்த வீடு அமைய பாடவேண்டிய,கேட்க வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகம் VIDEO LINK 👇👇👇👇👇 • OWNHOUSE,LAND,THIRUPUGAL சொந்த வீடு அமைய ப... #OWNHOUSE #SIRUVAPURI #PATHIGAM 🏠, #சொந்த #வீடு அமைய உதவும் சிறுவாபுரி பதிகம். செவ்வாய்க்கிழமைத்தோறும் இப்பாடலை கேட்டு வந்தால்,இப்பதிகத்தை (சிறுவாபுரி பதிகம்)பாடி வந்தால் சொந்த வீடு கண்டிப்பாக கிடைக்கும். ஓம் நற்பவி. DEVOTIONAL SONGS , இறை பாடல்கள் video link 👇👇👇👇👇 • DEVOTIONAL SONGS , இறை பாடல்கள்

அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham Music

🔴சனிக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

1 முறை இன்று கேட்டால் கடும் கஷ்டம், பண தடை, மன பயம், தீராத பிரச்சனை தீருவது உறுதி

KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

🦚 Kandha Sashti Kavasam | கந்த சஷ்டி கவசம் | Powerful Murugan Devotional Song |Muruga | Tamil Bhakti

சொந்த வீடு அமைய வீடு வாங்க வீடு கட்ட | OWN HOUSE REMEDIES | Rekha tarot card Reader | Cosmo view

அதர்வ ரகசியத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண ஹ்ருதய ஸ்துதி, கடும் கடனும் நீங்கும், பண கஷ்டம் நீங்கும்

சிறுவாபுரி பதிகம் சும்மா படித்தேன், வீடு வாங்கிட்டேன் 🙏#@AkilayogieA #youtube

Siruvapuri Murugan Padhigam || சிறுவாபுரி முருகன் பதிகம் - Saradha Raaghav

சொந்த வீடு (வாங்க / கட்ட ) அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் Own house Siruvapuri MURUGAN PATHIGAM

ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

🔴சனிக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

சொந்த வீடு வாங்க அருள் புரியும் முருகன் பாடல் || சிறுவாபுரி முருகன் கவசம்

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

🔴 சனிக்கிழமை அன்று அள்ள அள்ள குறையாத செல்வம் தரும் பெருமாள் செல்வ கவசம் | Perumal Selva Kavasam

வீடு கட்டும் யோகம் உண்டாக செய்யும் சிறுவாபுரி பாடல் 🙏🔯🔯#@AkilayogieA #youtube

🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன் பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM

சொந்த வீடு அமைய வீடு வாங்க வீடு கட்ட | OWN HOUSE REMEDIES | Parikaram | Magesh Iyer | Cosmo View

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

