அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | Andarpathi Kudiyera - Siruvaapuri | Thiruppugazh | Amutham Music
Andarpathi Kudiyera - Siruvaapuri | Album : Thiruppugazh | Vocal : Smt. Sudha Ragunathan | Lyrics : Arunagiri Nathar | Music : Embar S Kannan | Amutham Music அண்டர்பதி குடியேற - சிறுவாபுரி | இசைத்தொகுப்பு : திருப்புகழ் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | அருளியவர் : அருணகிரி நாதர் | இசை : எம்பார் S கண்ணன் | அமுதம் மியூசிக் பாடல்வரிகள் : அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு பெருமாளே தண்சிறுவை தனில்மேவு பெருமாளே அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார். அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது. அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன. முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது. Song Download & Streaming Apple Music : / thirupugazh-panchabootha-sthala Amazon Music : https://music.amazon.in/albums/B005G6... Youtube Music : • Thirupugazh Spotify : https://open.spotify.com/album/5r2stC... Napster : https://us.napster.com/artist/sudha-r... Jio Saavan : : https://www.jiosaavn.com/album/thirup... Wynk : https://wynk.in/music/album/thirupuga... For More Videos: / @amuthammusicsanskritseries Facebook : / amuthammusicofficial For More Videos : / amuthammusicvideos : / amuthammusic : / amuthammusicsanskritseries Facebook : / amuthammusicofficial #Amuthammusic#Sudharagunathan#thiruppugazh #Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | Mahanadhi Shobana

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

🔴 LIVE | சனிக்கிழமை காலை கேட்க வேண்டிய விஷ்ணு சஹஸ்ரநாமம் | Vishnu Sahasranamam Tamil | Perumal Songs

விறல்மார னைந்து - திருச்செந்தூர் | Viralmaara Naindhu | Thiruppugazh | Amutham Music

ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா | 108 Times Powerful Chant

விஜய்.. சூப்பர் மாமே! பாட்டு பாடி கலாய்த்த கோட்டீஸ்வரன் | Journalist Koteeswaran Interview | Vijay

KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

இருவினை அஞ்ச | Iruvinai anja | திருப்புகழ் 401 | Thirupugal 401 #kaavaditv #திருப்புகழ்

சொந்த வீடு (வாங்க / கட்ட ) அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் Own house Siruvapuri MURUGAN PATHIGAM

ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL

Kanda Guru Kavasam | கந்த குரு கவசம் Full Song with Lyrics | Original Version | Murugan Songs Tamil

Vishnu Sahastrnaam Full

Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs

சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் /SIRUVAPURI MURUGAN PATHIGAM

இருமலு ரோக முயலகன் - திருத்தணி | Irumalu Roga - Thiruthani | Thiruppugazh | Amutham Music

கந்த சஷ்டி கவசம் - கந்த குரு கவசம் - சண்முக கவசம் | ஆடிக் கிருத்திகையில் கேளுங்கள் | Apoorva Videos

Vinayagar Agaval by T L Maharajan | விநாயகர் அகவல் | Full Video | Original Vinayagar Devotional song

