21 தலைமுறை பாவங்களை போக்கும் திருச்சுழி பூமிநாதர் கோயில் | வாஸ்து தோஷம் & திருமண தடை நிவர்த்தி தலம்

திருச்சுழி-திருமேனிநாதர் கோயில் மூலவர் : திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர் அம்மன்: துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை தல விருட்சம் : அரசு, புன்னை தீர்த்தம் : பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) ஆகமம்/பூஜை : - பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : திருச்சுழியல் ஊர் : திருச்சுழி மாவட்டம் : விருதுநகர் பாடியவர்கள்: சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 12வது தலம். திருவிழா: நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷு, கார்த்திகை சோமவாரம், ஆடித்தபசு, தைப்பூசம், பங்குனி பிரமோற்ஸவ திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம். தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ரமண மகரிஷி பிறந்த தலம்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 202 வது தேவாரத்தலம் ஆகும். திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம். ஆலய தொடர்பு எண் +91 9080046933 04566282644 +91 9940831782 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 பொது தகவல்: திருச்சுழியல் பெரிய ஊர். தேரோடும் நான்கு வீதிகள் சூழத் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிள்ளையாரை வழிபட்டு ஆலயத் திருவாயிலுள் நுழைந்தால் எதிரே அம்பாள் சன்னதி. வலதுபுறம் சுவாமி சன்னதிக்கு எதிரே கவ்வைக்கடல் தீர்த்தம் உள்ளது. அருகே ஆஸ்தான மண்டபம் உள்ளது. முதலாவதாகக் காணப்படும் கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. திருவாயிலின் இருமருங்கிலும் விநாயகர், முருகன் உள்ளனர். சுவாமி சன்னதியிலுள்ள ராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் கூடியது. வாயிலில் உள்ள அதிகாரநந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் அறுகாற்பீடம் காணப்படுகிறது. இங்கு இத்தலத்திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது. அடுத்து சபாமண்டபம், அந்தாரளமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன. மூலலிங்கப் பெருமானாகிய திருமேனிநாதர் சுயம்புலிங்கமாகக் கருவறையில் காட்சி தருகிறார். வழிபட்டு வெளியில் சபாமண்டபத்தில் சிலை வடிவில் விளங்கும் நடராஜரைத் தரிசித்து வெளியே வந்து முதல் திருச்சுற்றை அடையலாம். கிழக்கே சூரியன் தெற்கே அறுபத்து மூவர், சப்தமாதர்கள் உள்ளனர். தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். வடக்கே சண்டேசர் கோயில் உள்ளது. வடகிழக்கே நடராசப் பெருமானும் கிழக்கே காலபைரவர், சந்திரன் ஆகியோரும் விளங்குகின்றனர். கருவறையைச் சார்ந்த சோஷ்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே துர்க்கை ஆகியோர் உள்ளனர். அடுத்து கோயிலின் தென்பால் இறைவனுக்கு வலது பாகத்தில் விளங்கும் அம்பாள் கோயிலை அடைவோம். நந்திபலிபீடங்களை வழிபட்டு உள்ளே சென்றால் திருப்பள்ளியறை மண்டபம் காணப்படும். அடுத்து அர்த்த மண்டபமும் கருவரையும் உள்ளன. இது ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஒன்று. பிரார்த்தனை திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை வணங்கி பலனடைகின்றனர். தலபெருமை: சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்தபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் கொண்டு காளைப் பருவத்தினராய்க் காட்சிதந்தார் என்பது தலவரலாறு திருமணக் கோலத்தில் இறைவன் விளங்குவதால் மக்கள் பலரும் கோயிலில் திருமணம் செய்து கொள்வதைச் சிறப்பாகக் கொண்டு திருமணம் புரிந்து கொள்கின்றனர். சிவராத்திரியன்று திருச்சுழியில் உள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும். திருச்சுழியல் நினைத்தாலும், பேசினாலும், கண்டாலும் சிவபதம் தரவல்ல தலம். அறிந்தோ, அறியாமலோ, மறந்தோ, மறவாமலோ செய்த பாவம் திருச்சுழியலை அடைந்தால் புயல் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் ஆகிவிடும். இத்தலத்தில் செய்யும் தானதருமங்கள், வேள்விகள் ஆகியவற்றின் பயன் ஏனைய தலங்களிற் செய்யும் பயனைவிட மிகுதியாகும். இத்தலத்தின் வேறு பெயர்கள்: வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி அம்பாள் துணைமாலை நாயகி மதுரை மீனாட்சி அம்மனை போலவே காட்சி தருகிறார். எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இத்தலத்தில் நீங்கும். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம் இங்குத்தீர்வதன்றி வேறெங்கும் தீராது. அமைவிடம் திருச்சுழி விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. விருதுநகர் - மானாமதுரை ரயில்பாதையில் திருச்சுழியல் உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு தெற்கே 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து பஸ்கள் இத்தலத்திற்கு வருகின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் கோயில் உள்ளது. கோயில் Google map link https://maps.app.goo.gl/RAqDfuLshwpkD... ரமண மகரிஷி பிறந்த வீடு Google map link https://maps.app.goo.gl/bCod3hszuQiuq... ஊட்டத்தூர் கோயில் தரிசனம்    • ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் கோயில் | சிறுநீ...   வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில்    • செய்வினையிலிருந்து நம்மை காக்கும் கஜசம்ஹார...   if you want to support us via UPI id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்

Journalist Mani | திமுக பாஜக ரகசிய கூட்டணி அம்பலம்
▶︎

Journalist Mani | திமுக பாஜக ரகசிய கூட்டணி அம்பலம்

செல்வத்தை அள்ளித்தரும் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் |பூசம் நட்சத்திரம் தலம்|கடன் நிவர்த்தி தலம்
▶︎

செல்வத்தை அள்ளித்தரும் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் |பூசம் நட்சத்திரம் தலம்|கடன் நிவர்த்தி தலம்

செந்தில் பாலாஜி கைதா ?உளவு பார்த்த கருப்பு ஆடு யார்? R.Varadharajan Ex-Police / Advocate
▶︎

செந்தில் பாலாஜி கைதா ?உளவு பார்த்த கருப்பு ஆடு யார்? R.Varadharajan Ex-Police / Advocate

கொல்லப்பட்டனரா 8000 சமணர்கள்? | Madurai Samanar Kazhuvetram | Jain History vs Myth | Sharanya Turadi
▶︎

கொல்லப்பட்டனரா 8000 சமணர்கள்? | Madurai Samanar Kazhuvetram | Jain History vs Myth | Sharanya Turadi

மதுரை| திருவாதவூர் சென்றேன்| மாணிக்கவாசகர்|அவதரித்த மண்|திருமறை நாதர்|சிவன் கோயில் உள்ளது| வாருங்கள்
▶︎

மதுரை| திருவாதவூர் சென்றேன்| மாணிக்கவாசகர்|அவதரித்த மண்|திருமறை நாதர்|சிவன் கோயில் உள்ளது| வாருங்கள்

திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் | பூர்வ ஜென்ம பாவம் தோஷம் நிவர்த்தி தலம்
▶︎

திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் | பூர்வ ஜென்ம பாவம் தோஷம் நிவர்த்தி தலம்

நம் பாதம் ஒரு முறை இங்கு பட்டாலும் பாவங்களும் தோஷங்களும் விலகும் | திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில்
▶︎

நம் பாதம் ஒரு முறை இங்கு பட்டாலும் பாவங்களும் தோஷங்களும் விலகும் | திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில்

Variyar Swami | சிவாஜி மகராஜ் கொடுத்த செல்வத்தை துக்காராம் மறுத்தது ஏன்? | கர்மாவை மாற்ற முடியுமா?
▶︎

Variyar Swami | சிவாஜி மகராஜ் கொடுத்த செல்வத்தை துக்காராம் மறுத்தது ஏன்? | கர்மாவை மாற்ற முடியுமா?

வாய திறங்க CM சார்.. தவெக 12 MLA-கள் கட்சி தாவ முடிவு.. அதிர்ச்சியில் விஜய் தரப்பு
▶︎

வாய திறங்க CM சார்.. தவெக 12 MLA-கள் கட்சி தாவ முடிவு.. அதிர்ச்சியில் விஜய் தரப்பு

தஞ்சை பெரிய கோவில் அகழி சுத்த செய்யும் பணி🙏!! | மக்களின் நீண்ட நாள் ஆசை😍 | Thanjavur Heritage
▶︎

தஞ்சை பெரிய கோவில் அகழி சுத்த செய்யும் பணி🙏!! | மக்களின் நீண்ட நாள் ஆசை😍 | Thanjavur Heritage

TVK அரசியலை மக்கள் வெறுக்க தொடங்குகிறார்கள் l Kodeeswaran l Gabriel Devadoss l Tamil Thadam
▶︎

TVK அரசியலை மக்கள் வெறுக்க தொடங்குகிறார்கள் l Kodeeswaran l Gabriel Devadoss l Tamil Thadam

இத்தலத்தில் வில்வ இலையை வைத்து பூஜித்தால் கிடைக்கும் பலன்கள் | Jothitv
▶︎

இத்தலத்தில் வில்வ இலையை வைத்து பூஜித்தால் கிடைக்கும் பலன்கள் | Jothitv

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் | 21 தலைமுறை பித்ரு சாபம் நீக்கும் தலம்  | நவக்கிரக புதன் தலம்
▶︎

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் | 21 தலைமுறை பித்ரு சாபம் நீக்கும் தலம் | நவக்கிரக புதன் தலம்

செய்வினையிலிருந்து நம்மை காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி |வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் ஐயப்பன் பிறந்த தலம்
▶︎

செய்வினையிலிருந்து நம்மை காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி |வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் ஐயப்பன் பிறந்த தலம்

துப்பு கெட்ட அறநிலையத்துறையை கலச்சிட்டு போங்க! ஆவேசமாக பேசிய TR Ramesh | TVK | Minister Ramesh
▶︎

துப்பு கெட்ட அறநிலையத்துறையை கலச்சிட்டு போங்க! ஆவேசமாக பேசிய TR Ramesh | TVK | Minister Ramesh

நீர் அருந்தாமல் வாழும் அதிசய மனிதன் 150 ஆண்டுகள் வாழ இலக்கு வைத்துள்ளார்
▶︎

நீர் அருந்தாமல் வாழும் அதிசய மனிதன் 150 ஆண்டுகள் வாழ இலக்கு வைத்துள்ளார்

உலகின் ஒரே அஷ்டமா சனி பரிகார தலம் | எட்டியதளி அகத்தீஸ்வரர் | உலகின் ஒரே சந்திர ஆவுடை சிவலிங்கம்
▶︎

உலகின் ஒரே அஷ்டமா சனி பரிகார தலம் | எட்டியதளி அகத்தீஸ்வரர் | உலகின் ஒரே சந்திர ஆவுடை சிவலிங்கம்

அத்துமீறும் TVK தொண்டர்கள் | இது தான் Sofa Model | ADMK ,DMK கூட்டணிக்கு அடி போடும் திமுக | TPAS
▶︎

அத்துமீறும் TVK தொண்டர்கள் | இது தான் Sofa Model | ADMK ,DMK கூட்டணிக்கு அடி போடும் திமுக | TPAS

அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மை#படித்ததில்பிடித்தது #storiesintamil #sirukathaigal #tamilstories
▶︎

அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மை#படித்ததில்பிடித்தது #storiesintamil #sirukathaigal #tamilstories

அமைதியாக நடந்த ஆளுநர் உரைகள்! ஓடி போன தீய சக்திகள் R.Varadharajan Ex-Police / Advocate
▶︎

அமைதியாக நடந்த ஆளுநர் உரைகள்! ஓடி போன தீய சக்திகள் R.Varadharajan Ex-Police / Advocate