காசி வீரர்கள் | சிறுகதை | வசுதேந்த்ரா | மோகனசாமி சிறுகதைத் தொகுப்பு
மோகனசாமி சிறுகதைத் தொகுப்பிலிருக்கும் 10 சிறுகதைகளுமே ஒருபாலினச் சேர்க்கையைப் பற்றி அந்தரங்கமாகப் பேசுகின்றன. ‘ இது என் சுயசரிதை’, என்று அறிவித்த எழுத்தாளர் வசுதேந்த்ராவின் தைரியம், அவரை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. பல இடங்களில் வாசகரைக் கசியவைக்கும், தொந்திரவு செய்யும் இந்த நூல் இதுவரை ஆங்கிலம், ஸ்வெடிஷ் உள்ளிட்ட 10 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டத்தில் வியப்பேதுமில்லை. வாசுதேந்த்ரா சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.’மோகனசாமி’, பெங்களூரு சென்ட்ரல் யூனிவர்சிட்டியின் ப்ளஸ் ஒன்றுக்குத் துணைப் பாடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்டிருக்கிறது! நமது மதிப்பீடுகளைப் புரட்டிப் போடும் இந்த அரிய நூலை மொழிபெயர்ப்பு என உணராதவண்ணம் சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார் நல்லதம்பி. ஏற்கெனவே விவேக் ஷான்பக்கின் ‘காச்சர் கோச்சரி’ல் நாம் உணர்ந்ததுதான். காமம் சார்ந்த விவரணைகளை விரசமில்லாத மொழி வழுக்கலாக உறுத்தலின்றி சொல்கிறது. அதேநேரம், தேவையான இடங்களில் தகுந்த சொற்களைப் பயன்படுத்தத் தவறவில்லை. ‘கம்ஸூ’, ‘கண்டுஸூளே’ போன்ற சொற்களைப் புழங்கி விளக்குவதன் மூலம் கன்னட மணத்தையும் ஆங்காங்கு சாமர்த்தியமாக தக்கவைத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். மோகனசாமி-மயக்கந்தரும் இந்தப் பெயரைத் தவிர வேறெந்த பெயரும் கதைக் களத்தோடு இவ்வளவு இயைந்திருக்காது. நண்பர்களால் அன்போடு ‘மோகனா’ என்றழைக்கப்படும் மோகனசாமி என்னும் கதாபாத்திரத்தின் வழியே சமபாலின சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்களின் மனக்கொதிப்பு, அவர்களுக்கு எதிர்கொள்ள நேரும் அவமானங்கள், புறக்கணிப்புகள், தனிமை…..யாவற்றையும் மனதைத் தொடும் விதத்தில், மிகையில்லாது எளிய சொற்களில் விரித்து வைக்கின்றன கதைகள். நேர்மையும் பண்பும் உடைய மோகனசாமி, வாழ்க்கையில் போராடி கௌரவ நிலையை அடைகிறான். அவன், தான் விரும்பும் ஆண்களோடு ரகசியமான காதல், காம வாழ்க்கையைத் துய்ப்பதிலும் வெற்றியடைவது ஆறுதளிக்கிறது. இதிலுள்ள நோய்த்தொற்று குறித்த அபாயங்களையும் பொறுப்பாகக் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். தத்ரூபமான பாத்திரங்கள் உயிரோடு நடமாடுகின்றன. ஏறக்குறைய 15 வருடங்களில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என்பதால் சில கதைகள் தேவையற்று நீளமாக இருக்கின்றன. முதல் கதையான ‘சிக்கலான முடிச்சி’ல், அலுவலகப் பயணம் நிமித்தமாக விமான நிலையம் செல்லுமுன் காதலன் கார்த்திக் இரவு சாப்பிடுவதற்காக சாம்பார் சமைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டுச் செல்பவன் மோகனா எனும் மோகனசாமி. அந்த நண்பன் கார்த்திக்கிற்கு பெண்ணோடு திருமணம் நிச்சயமானதும் அதிர்ச்சியடைகிறான் மோகனசாமி. பின்னர் நடைமுறையை உணர்ந்து கூடவே தங்கி உறவாடி வாழ்ந்த கார்த்திக்கை, அவனது உதாசீனத்தைக் கண்ணீரோடு பிரிகிறான். ‘சைக்கிள் சவாரி’யில் தன் உடல்மொழியைக் கேலி செய்யும் பள்ளித் தோழர்கள் மற்றும் சகோதரியிடமிருந்து தப்புவதற்காக தன்னை, தன் பேச்சை, விளையாட்டை-எல்லாம் சுருக்கிக் கொள்கிறான் மோகனசாமி. எந்நேரமும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதால் முதல் மதிப்பெண் பெறுகிறான். சைக்கிள் கற்றுக்கொண்டால் தன் உடலின் நளினம் விலகக் கூடும் என்றெண்ணி ஹம்பியில் சைக்கிள் கற்றுக் கொள்கிறான் மோகனசாமி. இருள் கவியும் நேரம் கோயில் பிரகாரத்தில் 2 வெள்ளைக் காரன்கள் புணர்ந்து கிடந்ததைக் கண்டதும், தனக்கு மனப் பிறழ்வல்ல என அமைதியடைகிறான்- புகைகூடப் பிடிக்காத மோகனசாமி. மோகனா சுத்தமானவன்; நாசூக்கானவன். ‘பேசக்கூடாத பேச்சுகள் வதைக்கும்போது ‘ கதையில், மோகனசாமியைப் புரிந்துகொண்ட அவனது பிராமண அப்பா, உள்ளுக்குள் உடைந்து போனாலும் அவன் மனதை நோகடிக்கவில்லை. ஆனால் மோகனசாமியைத் தன் ஆண்மையின் தோல்வியாக அவர் கருதுகிறார். அதிக மதிப்பெண் வாங்கிய அவனுக்கு அரசாங்கப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், வரதட்சிணை வாங்கமுடியாத, வம்சத்தை வளர்க்கமுடியாத மோகனசாமிக்கு எதற்கு சக்தியைமீறி செலவழிக்க வேண்டுமென்று கை கழுகிறார். அதனால் பெங்களூரில் சிறு வேலைகள் செய்தும் வங்கிக் கடனிலும் படித்து முடித்த மோகனசாமி கொடுக்கும் பணத்தைக் கைநீட்டி வாங்கக் கூசுகிறார். ‘நான்முகன்’ கதையில் 40 வயதான மோகனசாமிக்குப் பணப் பஞ்சமில்லை. ‘முதல் வணக்கம் மற்றும் கடைசி வணக்கத்திற்கு நடுவில் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வதே நம் புத்திசாலித்தனம்’ என்ற கொள்கையுடைய அவன், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் 30 வயதுபோலத் தன்னுடலை வைத்திருக்கிறான். பெருத்துப்போன தன் பழைய கார்த்திக்கை இப்போது அவன் மனம் நாடுவதில்லை. இந்தக் கதையானது ‘கேய்’ வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றம். மோகனசாமி துய்த்துக் கடந்துபோகும் பல்வேறு ஆண்களையும் அவர்களோடான உறவுகளையும் ரசனை கலந்த நகைச்சுவையோடு படம் பிடிக்கிறது கதை. அவனோடு தங்கியிருக்கும் யோகாசன குருவான ராம்தர் திரிவேதி, ‘’யோகாவைப் போலவே இணைவதும் ஒரு சாதனை. நிம்மதியாக இணைய வேண்டும். சூரியன் மேற்கில் இறங்கும் மாலை வேளையில் கங்கையில் ஓசையில்லாமல் மீனுடன் நீந்தும் சுகம் இந்த சேர்க்கையில் நமக்குக் கிடைக்கவேண்டும். சுகம் என்பது ஒரு தியான நிலை.’’ ஆனால் பிறிதொருவனைத் தேடக் கூடாதென்ற ராம்தரின் நிபந்தனையால் ‘கட்டாயத்திற்காக பத்திய உணவைச் சாப்பிடும் நோயாளியைப் போல அவன் தவித்தான்’. வாசிப்பின் முடிவில் அலைக்கழிப்பைத் தாண்டி, ஓரினச் சேர்க்கை என்பது வாழ்க்கை முறையின் ஓர் வகைமையே என்கிற எண்ணம் வருகிறது. இதுவே வாசுதேந்த்ராவின் நோக்கம். அதில் அவர் வெற்றியடைந்துவிட்டார். போலியற்ற தன்மை வாசுதேந்த்ரா எழுத்தின் பலம். ஒரு கதையைத் தவிர எல்லா கதைகளிலும் மோகனசாமி இருக்கிறான். கதைகளை அதே வரிசையில் படிக்க, வித்தியாசமான அந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி படிப்படியாகத் தெரிகிறது. ஒரு நாவலைப் படித்த முழுமையான உணர்வு கிடைக்கிறது. சிக்கலில்லாத மொழியின் வழியாக தமிழ் வாசகர்களைப் புதிய தளத்திற்கு அழைத்துப் போகும் நல்லதம்பி அவர்களுக்கு நன்றி. படிக்கவேண்டிய புத்தகம்.

EIC - The Company That Ruled the World | Full Documentary

காலத்தின் ரகசியம் | Kadhai Payani Episode 3 | S Ramakrishnan

Disco With KS | Doctor V Chokkalingam Cardiologist Exclusive Interview | Karthigaichelvan S | N18P

பவா செல்லதுரை - பெருங்கதையாடல் | நாராயணி கண்ணகி எழுதிய "தப்பு" | Bava Chelladurai

பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்ட கமல்ஹாசன்... Manobala Interview Marathon | Chai with Chithra

திமுகவில் இருந்து விலக தயாரானாரா செந்தில்பாலாஜி? | உடைக்கும் திரிசக்தி சுந்தரராமன் | Aadhan News

Rangaraj Pandey Latest | பொறியில் சிக்கிய Thirumavalavan? | TVK Alliance | DMK | MK Stalin

கதவு ஏன் திறந்திருந்தது? Nurse-ன் Scooter கொடுத்த அந்த ஒரு லீடு! SIT Solved! Case Analysis in Tamil

Kadhai Payani Ep.1 | S. Ramakrishnan | Yasunari Kawabata

இருளும், இளமையும் | Kadhai Payani Episode 2 | S. Ramakrishnan

Usha Uthup | தமிழக புதல்வியின் உலகம் அறியாத அரிய உண்மைகள் | @News mix tv | #Biography

The World's Most Important Machine

டரம்புக்கு நாள் குறித்த ஈரான் 😳 வெளியான அதிர்ச்சி தகவல்! விமானம் மாற்றப்பட்ட மர்மம் என்ன?

Old Is Gold - Part 1 | பழமை என்றும் இனிமை | Paatu Cassette Tamil Audio Songs

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன நடக்கிறது? | Badri Seshadri | PoK | Pakistan Occupied Kashmir Protest

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் 2/Vikramathithan stories full compilation Tamil/ TrendyTamili

பாஜக கொண்டு வரும் சட்ட திருத்தும் | போலி NGO-வின் ஆட்டம் முடிந்தது | யாரும் இனி தப்பவே முடியாது

இடைத்தேர்தலுக்கு தடை? ராஜினாமா செய்தவர்கள் காலி. Tharasu shyam Interview

விஜய் ஆட்சி....டெல்லி அமைதியில் உள்ள ஆபத்து 😳 - SP லக்ஷ்மணன் பார்வை | Aadhan News

