ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் கோயில் | சிறுநீரக கோளாறு நிவர்த்தி தலம் | Kidney Problem curing Temple
சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரிய தலம் "பஞ்ச நதன நடராஜர்" ஸ்தலம்! அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்! ஊட்டத்தூர். மூலவர் : சுத்தரெத்தினேஸ்வரர் அம்பாள் : அகிலாண்டேஸ்வரி தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் ஊர்: ஊட்டத்தூர் மாவட்டம்: பெரம்பலூர் இத்திருத்தலத்தில் உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஒரே கல்லால் ஆன "பஞ்ச நதன நடராஜர்" அருள்புரிகிறார்.. இத்தல நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டால் சிறுநீரக நோய் குணமாகும்.... திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் பாடாலூர் அருகே 5km தொலைவில் உள்ளது. சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரிய தலம் ஊட்டத்தூர் சிவன் ஆலய சிறப்புகள். அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் பஞ்சநதன நடராஜர் ஸ்தலம்... ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநதன கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்கிற தகவல் கோயில் குருக்கள் மூலம் தெரியவந்தது. சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது. சிவகாமி அம்மையும் அழகோ அழகு. வெட்டிவேர் மாலையை நடராஜருக்கு சாற்றி பூஜை செய்து அந்த மாலை எடுத்து வந்து 48 நாட்கள் சாப்பிட சிறுநீரக நோய்கள் தீரும் அனுபவ உண்மை... இறைவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் இருந்தது வியப்பாக தோன்றுகிறது. ஸ்தல வரலாறு பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு. காயத்துடன் சிவலிங்கம் ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது. அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார். அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது. இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம் ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. கோயில் Google Map link https://maps.app.goo.gl/JsCzJ9eM8Zf1i... அமைவிடம் இந்த சக்தி வாய்ந்த திருத்தலம் திருச்சியிலிருந்து 30 கிமீ தூரத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடலூர் என்னும் ஊரில் அருகே உள்ளது இத்தலம் அனைவரும் தரிசித்து சிவனருள் பெறுவோம். காளையார் கோவில் தரிசனம் • காளையார்கோவில் சொர்ணகாளிஸ்வரர் | செல்வ வளம... குறுமாணக்குடி கோயில் தரிசனம் • மிக கடுமையான பாவங்களை போக்கும் குறுமாணக்கு... தமிழ்

முருகரின் எலும்புகள் உள்ள கோயில் | Kartik Swami Temple | Rudraprayag | Uttarakhand | IBC Bakthi

மெய் கண்டார் தீர்த்து வைப்பார் | விதியை மாற்றும் கோயில் ரகசியம் | aanmeega tips | Wellness Guruji

நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் | Thiruvasi Matruraivaradeeswarar Temple

இறந்த பின்னர் உயிர் எங்கே செல்கிறது? கோட்டு சூட்டு போட்ட சித்தர் அறிவியல் விளக்கம் Dr. Ramachandran

கிட்னியை Detox செய்யும் 7 ஜூஸ் | Kidney Health | 7 Juice for 7 Days

தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் - தஞ்சாவூர் ஓர் அருமையான குருபகவான் ஸ்தலம்! #temple #thanjavur

CKD - சிறுநீரகம் பலவீனமா ? 5 கட்டாயம் சாப்பிட கூடாத உணவுகள்.

இந்த கோவிலுக்கு வந்தாலே மாற்றம் நடக்கும் | Prachanai Theera parigaram | Wellness Guruji | Bakthi oli

முருகனே மருத்துவராய் இருந்து நோய்களைத் தீர்க்கும் அதிசயம்| Dr.Subam Marimuthu #murugan #medicine

பூவாளூர் திருமூலநாதர் கோவில் | தென் கயா | பித்ரு தோஷம் நிவர்த்தி தலம் | ரதி வழிபட்ட தலம்

Ootathur Sivan Temple/ஊட்டத்தூர் சிவன் கோவில்/பஞ்ச நதன நடராஜர் கோவில் பாடாலூர் அருகில் ஊட்டத்தூர்

ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் | சிறுநீரக கோளாறு நிவர்த்தி தலம் | Kidney Stones Problem curing Temple

தமிழக பாஜக செய்த துரோகம்? மோடியை எதிர்ப்பாரா அண்ணாமலை? சின்னப்ப கணேசன் அதிரடி | Annamalai | Modi |

5 WORST Foods to Avoid for a Healthy Kidney Life

ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் அற்புத கோயில் ஒருமுறை இந்த கோவிலுக்கு செல்லுங்கள்|Vellore Golden Temple|

வெளி மாநில மக்களும் தேடிவரும் அதிசயம் | Interview with Ramesh vaithiyar

செட்டிகுளம் ஏகாம்பரநாதர் கோயில்| 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய 12 குபேரர்கள் அருளும் ஒரே தலம்

9 கிரகங்களின் சூட்சம பலன்கள் | யாரும் சொல்லாத | அனுபவ ஜோதிட விதிகள் | Jaibaba Kalaipiriyar

No Shiva Lingam in This Temple! | Mysterious Temple The Secrets of Tamil Nadu's Ancient Temples

