kaaman koothu - glenugie estate upcot maskeliya காமன் கூத்து - மல்லியப்பு தோட்டம் சாமிமலை 2022/03/19
காமன் கூத்து மலையகத்தை பொருத்தமட்டில் பிரதானமாக ஐந்து கூத்துக்கள் நடைமுறையில் உள்ளன. காமன் கூத்து,பொன்னர் சங்கர் கூத்து,அர்ச்சுனன் தபசு,வீரபத்திரன் ஆட்டம், நல்லத்தங்காள் கதை இவற்றில் முதன்மையானது காமன் கூத்து ஆகும். காமன் கூத்தானது மலையகத்தின் தேசிய கூத்து என இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. காமனை சிவன் எரித்த வரலாற்றைக் கூறுவது காமன் கூத்து என ஒற்றை வரியில் கூறிவிடலாம். மாசி பிறந்து விட்டால் கூத்துக்கள் குதூகலிக்கும் என்பர்.மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தில் காமன் கூத்து /காமன் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கந்தபுராணத்தில் இருந்தே இதற்கான மூலக்கதை எடுக்கப்பட்டுள்ளது. தென்மாங்கு பானியில் லாவணி பாடல்கள் பாடப்படும். மாசி மாதம் அரங்கேற்றம் என்றால் தை மாதமே தயாராகிவிடுவார்கள். காமன் கூத்து நடைபெறும் அந்த வாரமே திருவிழாதான் மக்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. வருடத்திற்கு ஒருமுறை நிகழ்த்தப்படுவதால் எண்ணற்ற மக்கள் அங்கு ஒன்றுகூடுவர். இக்கூத்தின் அரங்கவெளி காமன் பொட்டல் எனப்படும். காமன் கூத்தை பயிற்றுவிக்கும் ஆசான் காமன் மாஸ்டர் என்று அழைக்கப்படுவார். இக்கூத்துககான இசைகருவியாக பிரதானமாக தப்பு பயன்படுத்துகின்றது. மேலும் ஒப்பனைக்காக கிரீடம், புஜம், சலங்கை, பட்டாடை, வில் அம்பு , அரிதாரம் என்பன பயன்படுகின்றன. ரதியும் மன்மதனும் இரு கைகளிலும் சிறிய துண்டு ஒன்றை வைத்திருப்பார்கள். ரதிக்கும் மன்மதனுக்கும் காப்பு கட்டுவதோடு ஆரம்பிக்கும் காமன் கூத்தின் கதை கரு ஒன்றுதான். இருந்தாலும் பிரதேசத்திற்கு பிரதேசம் கதையின்அமைப்பிலும் உள்ளடக்கங்களிலும் வேறுபட்டு காணப்படுகின்றது. எனினும் எல்லா ஊர்களிலும் பொதுவான படிமுறை ஒன்று காணப்படுகின்றது. அவையாவன, • காப்பு கட்டுதல் • கம்பம் நடுதல் • விரதமிருத்தல் • ரதிக்கும் மன்மதன் திருமணம் • தூதன் ஓலை கொண்டு வருதல் • வீரபத்திரன் வருகை • மோகினி வரவு • கணபதி பூஜை • தேர்வசந்தன் அழைப்பு • எமன் வருகை • வெட்டியான்,வெட்டிச்சி ஆட்டம் • மதன் ஈசனின் தவத்தை கலைத்தல் • சிவன் மதனை எறித்தல் • ரதிதேவியின் ஒப்பாரி • சிவன் மதனை உயிர்ப்பித்தல் • சிவனிடம் ஆசி பெறல் என்ற ஒழுங்கமைப்பில் காமன் கூத்து நடைபெறுகிறது. காமன் கூத்து கதை சுருக்கம். பரம்பொருளான சிவபெருமான் திருக்கைலாயா மலையில் ஆழ்ந்த தவத்துக்குள் மூழ்கியதால் பிரபஞ்சமே ஆட்டம்காண தொடங்கியதாம். இதனால், பாரிய அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. இனியும் மௌனம் காத்தால் பேரழிவு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இந்திரலோகம் சென்ற தேவர்கள், நிலைமையை இந்திரனிடம் எடுத்துரைத்துள்ளனர். சிவனின் தவத்தைக் கலைத்தால் மாத்திரமே பேரழிவிலிருந்து உலகைக் காக்கலாம் என்பதை அறிந்துக்கொண்ட இந்திரன், அதை செய்யக்கூடிய வல்லமை மன்தமனுக்கே இருக்கின்றது என்பதையும் உணர்ந்துக்கொண்டார். இப்படியொரு விடயம் இருக்கின்றது என்ற தூதை இந்திரன் மதனுக்கு அனுப்பினார். தூதுவன் அங்குசெல்லும்போது ரதிக்கும், மதனுக்குமிடையில் திருமணம் நடைபெற்றிருக்கும். மாவிளக்குப்பூஜை, பச்சைவில் போன்றனவும் இதற்கிடையில்தான் நடைபெறும். தூதுவனின் செய்தியை கேட்டதும், மலர்க் கணைகளைத் தொடுத்து தவத்தைக் கலைக்க தான் தயார் என்ற தகவலை மற்றுமொரு தூதுவன் ஊடாக இந்திரசபைக்கு மதன் அனுப்புவார். ஈசனின் பலம் அறிந்த ரதி, தவத்தைக் கலைக்க வேண்டாம் என மன்மதனிடம் எடுத்துக்கூற, அதை அவர் கணக்கில் எடுக்கவில்லை.இந்த சம்பவத்துக்கு நிகரான வகையில் வீரபுத்திரன், காளி, மோகினி போன்ற பாத்திரங்கள் வரும். அதன்பின்னர் ஈசனின் தவத்தை மதன் கலைப்பார். சிவனின் சீற்றம் கொண்ட பார்வையால் மதன் அழிந்துபோய்விடுவார்.இந்த தகவலை எரி தூதுவர் ஒருவரே ரதிக்கு எடுத்துச்செல்வார். அதன்பின்னர், தூதூவன், எமன் ஆகிய இருவர் மதனின் உயிரைக் காவிச்செல்ல வருவார்கள். அவர்கள் வந்தபின்னர், ரதியின் ஒப்பாரி புராணம் ஆரம்பமாகும். இதன் போது “ஐயய்யோ ஐயய்யோ” என்ற ஓலம் எழுப்பப்படும். தனது கணவரை உயிர்ப்பிக்குமாறு அவர் சிவனிடம் மன்றாடுவார். இரக்கம்கொண்ட ஈசன், மூன்று நாட்களுக்கு பிறகு மதனுக்கு உயிர் கொடுப்பார். இந்நிகழ்வு உயிர் எழுப்புதல் என அழைக்கப்படும். காமன் கூத்தின் ஆரம்ப காப்பு கட்டுதலிலிருந்து கடைசியில் மன்மதன் உயிர்பித்தல் வரை நம்பிக்கை என்ற அச்சாணி ஆழப் பொருந்திருப்பதை காணலாம். இறுதியில் ரதி வீட்டுக்கு வீடு புலம்பிக்கொண்டு துயரத்துடன் செல்வார். மன்மதன் வேடம் தரிப்பவர் 16 நாட்கள் கட்டுப்பாட்டோடு இருப்பார். மேலும் பாத்திரமேற்று நடிப்பவர்கள் தங்களை தமக்கு அளித்த பாத்திரமாகவே கருதி அருள் வந்து ஆடுவர். இதன் போது சுற்றியுள்ளவர்கள் பய பக்தியுடன் இவர்களை வணங்குவர். அதுமட்டுமல்லாது காப்பு கட்டப்பட்டதில் இருந்து இறுதிவரை ஊர் மக்களும் கட்டுப்பாட்டோடு இருப்பர். காமனை எரித்த சாம்பலை சக்தி வாய்ந்த பிரசாதமாக எண்ணி அள்ளியெடுத்து வீடுகளுக்கு கொண்டு செல்வர். மேலும் பக்திக்காகவும்,சில நேர்த்திக்காகவும், பிள்ளை பேறு வேண்டியும் ,ஊர் செழுமைக்காகவும் நோய் நொடிகள் வராது தவிர்க்கவும் காமன் கூத்து ஆடப்பட்டு வருகின்றது. நவீனம் நம்மை ஆட்டிப்படைத்த பின்னர் இவ்வாறான மலையக கூத்துக்கள் கவனிப்பாரின்றி இருப்பது வேதனைக்குறிய விடயமே.! எமது பாரம்பரிய கலைகளை பாதுகாப்பது எமது கடமை எனவே கலைகளை காக்க நல்லதோர் கலைஞனாய் முன்வரவேண்டும். “கலைஞர்களை பறைகொண்டெழுப்புவோம் தமிழர் கலாச்சார மரபை மீட்போம்!”

kaman koothu - gouravilla estate upcot 2022/03/12 காமன் கூத்து - கவிரவில தோட்டம் சாமிமலை

1960ல் நடைபெற்ற காமன் கூத்து அரிய ஆடியோ பதிவு. காமன் எரிந்த கட்சியா ஏரியாத கட்சியா கமுடு விவாதம்....

🛑சிவநாலையத்தின் வேட்டை திருவிழாக்கு காட்டில் இருந்து திடிரேன வந்த காட்டுவாசிகள்

சுப்ரமணியின் இரவு வாழ்க்கை | எப்படி இருக்கும் தெரியுமா | Linga Village view

அட பாவி ஆள பாத்தா டம்மி பீசா இருக்க நீ பயங்கரமான ஆளா இருக்கியடா?| #vadivelu | #comedy | #tamilcomedy

#காமன் கூத்து#Suriyakanda Bulutota#சூரியகந்த புளுத்தோட்ட #malayaham#upcountry#Tamil #traditional

நயினாதீவு தீர்த்த கேணியில் மிதந்த சிறுவன்? திடீரென வந்த கடற்படை- இறுதியில் நடந்த பார்க்காத காட்சிகள்

வெள்ளிக்கிழமை கேட்க வேண்டிய கைலை நாதனே ஈஸ்வரனே சிவன் பாடல் | Sivan Song Tamil | Arbudhaa Bakthi

15அடி உயரத்தில் இருந்து பாய்ந்த காளி|காமன் கூத்து பகுதி 6|lanka Estate kamankuthu part 6|

வல்வெட்டித்துறையில் சற்றுமுன் வானிலிருந்து வந்த மிகப்பெரிய பட்சி / சூரன்போர் 2025 | valvai sulax

Kataragama Foot Pilgrimage | மகிமை மிகு கதிர்காம பாதயாத்திரை | අසිරිමත් කතිර්ගම පාද වන්දනාව

யாழில் நாளை வெடிக்கவுள்ள போராட்டம்,அர்ச்சுணா தொடர்பில் அதிரடி அறிவிப்பு|@jaffnapodiyan|24.06.2026

கூத்து 33 / Koothu / காமன் கூத்து / கந்தகட்டிய / 🇱🇰 Kaman Koothu 12mar2023 ©Don Maya

இந்த காமெடியை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது | Tamil Comedy | Shobhana | Idhu Namma Aalu

Friday Powerful Karumari Amman Songs | Karumari Amman Potri & Tamil Devotional Songs

மட்டக்களப்பு மக்கள் ரொம்ப வித்தியாசனமாவர்கள்🥰| BATTICALOA TAMIL WEDDING | #jesivlogs

The great effort of the Tamil diaspora / The flying paw / The chariot

Paper band srilanka new

என்ன வேணும் என்னதான் வேணும் #Vadivelu Singamuthu Comedy Video காமெடி 100% சிரிப்பு Collection

