கம்மகுல அதிதேவதா ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி பௌர்ணமி அழைப்பு பாடல்கள் By Gurubrahma Srinivas
அனைவர்க்கும் இனிய தெலுங்கு வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள் .கம்மகுல அதிதேவதா ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி பௌர்ணமி அழைப்பு பாடல் வரிகள் , இசை மற்றும் பாடிய குரல் குருப்ரம்மா ஸ்ரீநிவாஸ் . இனிய நண்பர்களும் , உறவுகளும் அன்போடு தயைகூர்ந்து பாடலை கேட்டு , ரசித்து SUBSCRIBE செய்து பாடலை பகிருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . ஜெய் ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி பாத சரணங்கள் . RESPECTED FRIENDS AND RELATIVES , PLEASE SHARE AND SUBSCRIBE THE SONGS. JAISHRI RENUGADEVI THALLI CHARANALU ஸ்ரீ ரேணுகாதேவி புராணம் : இறைவத வேந்தன் , விதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன். இவனது மகள் ரேணுகா, பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள். அங்கே இறைவனின் அருளைப் பெற கடுந்தவம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கண்டு, அவரையே கணவனாக அடைய வேண்டும் என முடிவு செய்தாள். ஜமதக்னி முனிவரிடம், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டவே, அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர். இவர்களின் மூத்த மகனான பரசுராமர், தவம் புரிவதற்காக மகேந்திர மலைக்குச் சென்றுவிட்டார். மற்ற மகன்களுடன் ஜமதக்னி முனிவரும், ரேணுகாவும் வசித்து வந்தனர். கற்புக்கரசியான ரேணுகா, ஆற்றங்கரைக்குச் சென்று அங்குள்ள மணலில் ஒரு குடம் செய்து, அதில் நீர் பிடித்து வருவாள். அதைக் கொண்டு ஜமதக்னி முனிவர் சிவபூஜை செய்வார். ஒரு முறை நீர் எடுக்கச் சென்ற ரேணுகா, நீரில் சற்று நிலைதடுமாறினர் . இதனால் அவள் செய்த மண் குடம் உடைந்தது. இதை தன் தவ வலிமையால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மூன்று மகன்களிடமும் தாயின் தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். உடனே பரசுராமரை, தன் தவ சக்தியால் அழைத்து, தாயின் தலையை துண்டிக்கச் சொன்னார். மறுபேச்சு பேசாது, தாயின் தலையை துண்டித்தார் பரசுராமர். இதனால் மகிழ்ந்த முனிவர், “உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார். உடனே பரசுராமன், “தாயை உயிரோடு திருப்பித் தாருங்கள்” என்றார். அதன்படியே ஸ்ரீ ரேணுகாதேவியை உயிரோடு கொண்டு வந்தார் ஜமதக்னி முனிவர். மேலும் “உன்னை நினைப்பவர்களை நீ காத்து அருள்புரிவாய்” என்ற வரத்தையும், ஸ்ரீ ரேணுகாதேவி தல்லிக்கு வழங்கினார். அன்று முதல் அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி , எல்லம்மா தல்லி என்றும் அழைக்கப்படுகிறார் . அன்றிலிருந்து இன்றுவரை தம்முடைய பக்தர்களையும் , குழந்தைகளையும் காக்க அன்னை ஒரு நிமிடம் கூட தவறியதில்லை இந்த சக்திவாய்ந்த அன்னை ஒவ்வொரு கம்ம குலத்திலும் ஒவ்வொரு பெயர்களில் திகழ்கிறார், அதாவது எல்லம்மா , பேரம்மா , லிங்கம்மா ரெங்கம்மா , சூரம்மா, என்று மேலும் பல பெயர்களுடன் வாழ்ந்துகொண்டு பக்தர்களை காத்துக்கொண்டிருக்கிறார் . இந்த பெயர்கள் அனைவரும் கம்மகுல அதிதேவதா அன்னை ஸ்ரீ ஸ்ரீ ரேணுகாதேவியின் ஸ்வரூபங்களே ஆகும் . மேலும் அன்னையை நம் முன்னோர்கள் முறையுடன் பௌர்ணமியின் போதும் , பொங்கல் மற்றும் கார்த்திகை தீபத்தின் போதும் மற்றும் பண்டிகை நாட்களிலும் பூஜை புனஸ்காரங்களுடன் பக்தியுடன் பாடி அழைத்து , காலம் காலமாய் தொன்று தொட்டு வழிபடுகின்றனர் . அவர்களை பின்பற்றி நாமும் வழிபடுகிறோம் , இதனையாய் நம்முடைய , அடுத்த சந்ததியினருக்கும் சொல்லிக்கொடுத்து , அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி அருளை முழுமையாக பெற அவர்களுக்கு முறையாக கற்றுக்கொடுப்போம் . மேலும் குல மகளிரும் , மற்றும் ஆண்களும் இந்த பாடல்களுக்கு , பண்டிகைகளின் போது , ஆடி பாடி மகிழும்போது , நம் அன்னை அருளையும் , ஐஸ்வரியங்களையும் , பேராசிகளையும் , அள்ளி வழங்குகிறார் . இந்த பாடல்களை கேட்டு ரசித்து , பகிர்ந்து அன்னையை அழைத்து , வழிபாட்டு அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி அருளை பெறுவோம் . ஜெய் ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி பாத சரணங்கள் . பாடல்கள் வரிகள், இசையமைப்பு மற்றும் பாடிய குரல் ., குருப்ரம்மா ஸ்ரீநிவாஸ் ...94879 54995

ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி ஆடி மாத சிறப்பு பாடல்கள் , பாடல் இசை , பாடும் குரல் குருப்ரம்மா ஸ்ரீநிவாஸ்

🔴சனிக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

ஆடி 1 வீட்டில் செல்வம் பெருக கேளுங்கள் லலிதாம்பிகை சிறப்பு பக்தி பாடல்கள் | Star Media

எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE II

IGPக்கு காலையில் நடந்த கதி! | முடிவை மாற்றுவாரா அநுர! | Naattu Nadappu

சரணாகதி கேள்வியும் பதிலும் பகுதி 4- ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்

கம்மகுல அதிதேவதை ஸ்ரீ ரேணுகாதேவி தல்லி பௌர்ணமி அழைப்பு பாடல்கள், குருப்ரம்மா ஸ்ரீநிவாஸ்

அபிராமி அந்தாதி || Abirami Andhadhi - Saradha Raaghav

Vaarahi Moola Manthra || வாராஹி மூல மந்திரம் ( 108 times ) - Saradha Raaghav

KAMMA KULA ADHI DEVATHA SRI RENUGADEVI THALLI SONGS, BY GURUBRAHMA SRINIVAS PLS SHARE AND SUBSCRIBE

கம்மகுல அதிதேவதா ஸ்ரீ ரேணுகாதேவி பௌர்ணமி அழைப்பு பாடல் ., குருப்ரம்மா ஸ்ரீநிவாஸ்

ஸ்ரீ ரேணுகாதேவி அன்னை பௌர்ணமி அழைப்பு பாடல்கள் , பாடல் இசை , பாடும் குரல் குருப்ரம்மா ஸ்ரீநிவாஸ்

🔴சனிக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

Trailer Of Sri Renuga Devi Songs ஸ்ரீ ரேணுகா தேவி பாடல்கள்

ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

ஸ்ரீ ரேணுகாதேவி அஷ்டோத்திரம் | Sri Renuka Devi Ashtothram - Gnanalayam Pondicherry

Tribute to S. Janaki | செந்தூரப் பூவே | இந்தப் பூவிலும் | மச்சானைப் பார்த்தீங்களா | சிங்கார வேலனே

Anjanaiyin Puthiran

🔴 LIVE | கந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | தைப்பூசம் | ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள்

