பரிபாடல்-திருமால் -மாஅயோயே! மாஅயோயே!/paripadal thirumal tamil
சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் திருமால் பற்றி அமைந்த மாயோயே... என்கிற பாடலின் பொருள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது #sangam #sangamliterature #tamil #tamilliterature #tamilstatus #paripadal #filmora #filmoramobile திருமால் திருமாலிடமிருந்து தோன்றிப் பரந்த பொருள்கள் மாஅயோயே! மாஅயோயே! மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணி திகழ் உருபின் மாஅயோயே! தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், 5 ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், திதியின் சிறாரும், விதியின் மக்களும், மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும், தா மா இருவரும், தருமனும், மடங்கலும், மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும், 10 மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து: 'வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை. முனிவரும் தேவரும் பாடும் வகை 15 'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை; பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின் சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள் 20 கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும், மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம் ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும், 25 'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும், ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர் பாடும் வகையே: எம் பாடல்தாம் அப் 30 பாடுவார் பாடும் வகை. வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும் கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை; நகை அச்சாக நல் அமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை. 35 இரு கை மாஅல்! முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! எழு கையாள! எண் கை ஏந்தல்! ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! 40 பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் 45 இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, முன்னை மரபின் முதுமொழி முதல்வ? வனப்பும் வலியும் நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம் 50 வனப்பு வரம்பு அறியா மரபினோயே! அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர், பிறை வளர், நிறை மதி உண்டி, அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ; திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி, 55 நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும் வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே? ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட 60 சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! ஓ! 'எனக் கிளக்கும் கால முதல்வனை; ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்: சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள் தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; 65 அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ; அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், உறைவும் உறைவதும் இலையே; உண்மையும் 70 மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே: நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு பறவாப் பூவைப் பூவினோயே! அருள் குடையாக, அறம் கோலாக, 75 இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும் ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ; பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, 80 நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை: நால் வகை வியூகம் செங் கட் காரி! கருங் கண் வெள்ளை! பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்! பல திறப் பெயரியல்புகள் இட வல! குட வல! கோவல! காவல! காணா மரப! நீயா நினைவ! 85 மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண! மாலைச் செல்வ! தோலாக் கோட்ட! பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண! பருதி வலவ! பொரு திறல் மல்ல! 90 திருவின் கணவ! பெரு விறல் மள்ள! மா நிலம் இயலா முதல்முறை அமையத்து, நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! --- கடவுள் வாழ்த்து கடுவன் இளவெயினனார் பாட்டு பெட்டனாகனார் இசை பண்ணுப் பாலையாழ

கண்ணதாசன் வரிகளும் டால்ஸ்டாய் கதையும் பாடலாசிரியரின் மிரட்டலான உரை | @idharmapuri

Thyagaraja Bhagavathar's story of the lost tears! | Kantharaj | MK Thiyagaraja Bhagavathar | Kaantha

AROMA THERAPY FOR JOINT PAINS | மூட்டு வலிகளைப் போக்கும் அரோமா சிகிச்சை | Dr. John B. Nayagam

இந்த காமெடி சீன் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும்!| Tamil Comedy | Shobhana | Idhu Namma Aalu

சிரித்து மகிழ ஆழ்ந்து உறங்க இதமான கதைகள் | தென்கச்சி கோ சுவாமிநாதன்

சரணாகதி கேள்வியும் பதிலும் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்

60 வயதிலும் பலமாக இருக்க ஒரு Secret | Senior citizens Health Tips Tamil

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu

பரிபாடல்/ திருமால் 1/ திருமறு மார்ப நீ அருளல் வேண்டும்/Paripadal/thirumal 1@தமிழ்கணேஷ்

நாற்பது வேலி நிலத்தை விளைய வச்சிட்டு சிதம்பரம் போ!

Alexander Babu speech | Karu Palaniappan's Cooker | 'Kudhupi' Book Launch event

Maduraikanchi/Explanation/Onguthirai Viyan/Maduraikanchi/Mangudi Marudhanar/tamilganesh@tamilganesh

சொந்த ஆத்தையும் ,ஊரையும் விட்டுட்டு வந்தா ,எல்லா பிரம்மச்சாரிகளும் பரதேசிகள் தான்- கே . பாக்யராஜ்

தவறாமல் கேட்க வேண்டிய உரை🔥 திருக்குறள் யாருக்கு சொந்தம்? | பாரதி கிருஷ்ணகுமாரின் அசத்தலான பேச்சு

கண்ணதாசன் வந்த பிறகு பாடல்கள் ஒரு இலக்கியமாக மாறியது 🔥 | Ullathil Nalla Ullam Song | Kannadasan

பரிபாடல்-திருமால் -தொல்முறை இயற்கையின்

Avvai Shanmugi Back 2 Back Scenes |ஐயோ..எனக்கு ருக்கு ருக்கு பாட்டு தான் வேணும்!! | Kamal Haasan

பாண்டிய மன்னா! உன் காவலர் வழிமறித்தார், அமைச்சர் கதவடைத்தார்!

இரவில் தூங்க இதமான கதைகள் | Thenkachi ko swaminathan கதைகள் | Indru oru thagaval | புத்திக் கூர்மை |

