லலிதாவின் ஆயிரம் நாமங்கள்-Devotional songs on- Lalitha Sahasranamam, tamizh version- Dr R Aruna Sri

ஆங்கில வருடம் 2020 மகாமாரி என்கிற பாண்டமிக் நடந்து கொண்டிருந்த சமயம். அந்த நேரத்தில் யாரும் வெளியில் போகக்கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக ஏதோ ஒரு இசை நிகழ்ச்சி இல்லை டிவியில் ஒரு பதிவு என்று அலைந்து திரிந்து கொண்டிருந்த எனக்கு மிகவும் வெறுமையான ஒரு மனநிலை உண்டானது. வாழ்க்கையில் நமக்கு அடுத்தது என்ன செய்வது என்று தெரியாத ஒரு வெறுமையான மனநிலையை விவரிப்பது கடினம். அது அனுபவித்தால் தான் புரியும். எதை தொட்டாலும் அதனால் நோய் வந்துவிடும் என்கிற ஒரு மனப் பிராந்தி என்னை ஆட்கொண்டது. சதா அம்பாளுடைய நாமத்தை ஜபித்துக்கொண்டு என் மனக்கண் முன்னால் ஏற்படக்கூடிய அந்த வெறுமை நிலையுடன் நான் போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு பெண்மணி எனக்கு போன் செய்கிறார். லலிதா ஸஹஸ்ரநாமத்தினை தமிழில் எழுதி உள்ளதாகவும் அதை இசை அமைத்துக் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றார். எனக்கும் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத வெறுமை நிலையை கடப்பதற்கு இது ஒரு நல்ல உபாயம் என்று தோன்றியது. இதற்கு முன்னோடியாக அந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தினை நான் நன்றாகப் படித்து அதனுடைய பொருளை உணர்ந்து கொண்டு அதற்கு இசை அமைக்க வேண்டி இருந்தது. அப்படி நான் பெரியவர்களுடைய புத்தகங்களை படித்து அந்த ஒவ்வொரு நாமத்திற்கும் உள்ள பொருளினை அறிய முற்படும் பொழுது, அந்தப் பெண்மணி எழுதிய பல நாமங்களில் பிழைகள் இருப்பது எனக்கு புரிந்தது. இது பற்றி நான் அவரிடம் கேட்ட பொழுது அவர் வலைதளங்களில் உள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக் கூறினார். அதிகப்படியான திருத்தம் செய்யக்குடிய நிலையிருந்ததால் அதில் என் சொந்த படைப்பாற்றல் வெளிப்படுவது சரியில்லை என்பதால் அந்த வேலையை நிறுத்திவிட்டேன். அந்த பெண்மணியுடைய படைப்பினை நான் திருத்த முடியாது இனிமேல் என்று திருப்பி அளித்து விட்டாலும் நான் படித்த பெரியவர்கள் எழுதிய பாஷ்யங்களின் தாக்கத்தால், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் என் மனதில் பிரவாகமாக பாடல் வரிகள் இசையுடன் பொங்கி வர ஆரம்பித்தன. லலிதா ஸஹஸ்ரநாமம் என்பது ஷாஃத்தம் என்ற வழியில் அம்பாளை வழிபடும் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் மிகுந்த உயர்ந்த ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள மந்திர மாலை ஆகும். இந்த மந்திர மாலையை பல வருடங்களாக ரகசியமாகவே வைத்திருந்தார்கள். பின்னர் ஒரு காலத்தில் அம்பாளுடைய சங்கல்பத்தினால் சில பெரியவர்கள் மூலமாகவே அது வெளிப்பட்டு சாதாரண ஜனங்களுக்கும் கிடைக்குமாறு ஆனது. ஆனாலும் எல்லோருக்கும் புரியும் வகையில் இதற்கு பொருள் எழுத வேண்டும் என்று ஆதி சங்கராச்சாரியார் முயற்சி செய்தும் கூட அம்பாளின் உத்தரவு கிடைக்காததின் பேரில் அறிஞர்களே சர்ச்சை செய்யக்கூடிய சில நாமங்களின் பொருளை ஆதாரமாக வைத்து அவற்றை விளக்கும் வகையில் சௌந்தர்யலஹரி எழுதினார். பின்வரும் காலத்தில் பாஸ்கர ராயர் எழுதியது ஸௌந்தர்யலஹரியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட பாஷ்யம் என்று கூறக்கூடிய வகையில் அமைந்த முதல் நூல். இதனை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் சக்தி உபாசனை செய்யக்கூடிய அன்பர்கள் பலர் சேர்ந்து உருவாக்கிய நூற் களஞ்சியங்கள் பலவும் உண்டு. ஆனால் எப்படி மந்திரமாலையாக எல்லோரும் சொல்லும் வண்ணம் உள்ளதோ அதே முறையில் சந்த முறையில் அமைந்த மந்திரமாலையாக ஸம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் எழுதப்படவில்லை. முதன்முதலாக தமிழில், இந்த நூலில் தான் அவ்வாறு மந்திர மாலையாக சந்த அமைப்பில் எழுதப்பட்டுள்ளது. ஸமஸ்கிருதம் சரியாக உச்சரிக்க முடியாதவர்களும் அம்பாளுடைய ஆயிரம் நாமங்களைக் கூறும் அந்த அனுபவத்தினை பெற வேண்டும் என்பது அன்னையின் சித்தம். இந்த வேலையை நான் மார்ச் 2020ல் தொடங்கி 2023 செப்டம்பர் மாதம் முடித்தேன். அம்பாளுடைய இந்த ஆயிரம் நாமங்கள் தேவர்களெல்லாம் குழுமிய சபையில் முதலில் வாக் தேவதைகளால் உரைக்கப்பட்டவை. அதை உள்வாங்கிய ஹயக்ரீவர் அம்பாளுடைய உபாசனையில் லயித்து, லலிதா ஸஹஸ்ர நாமத்தினை தன்னிடம் வந்து வேண்டி கேட்பவருக்கு மட்டும் கொடுப்பவர் ஆனார். அகத்திய முனி அவருடைய மனைவியான லோப முத்திரையுடன் அம்பாளின் வழிபாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் வந்து ஹயக்ரீவரிடம் அம்பாளை பற்றிக் கூறுமாறு கேட்டு, அறிந்து லலிதா ஸஹஸ்ரநாமத்தையும் கற்றுக் கொண்டார். அகத்தியர் யாரெல்லாம் இந்த உபாசனை மார்க்கத்தை விரும்பி கேட்டார்களோ அவர்களுக்கு லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாடம் செய்து வைத்தார். பல காலங்களாக எழுதப்படாமலேயே நூல் வடிவம் ஏற்படாமலேயே குரு சிஷ்ய பரம்பரையில் மந்திரமாலையாக உபதேசம் செய்யப்பட்ட இந்த அரிய பொக்கிஷம் ஆன லலிதா ஸஹஸ்ரநாமம் ஹயக்ரீவர், அகத்தியர், ஆதிசங்கரர், பாஸ்கர ராயர் இவர்களை தொடர்ந்து பின்னும் எண்ணற்ற உபாசகர்கள் மூலம் இன்று நமக்கு கிட்டியுள்ளது. லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பலரும் சொல்வதற்கு ஆவலாக இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில் சிறு வயது முதலே ஸம்ஸ்க்ருத மொழியின் பரிச்சயம் இல்லாத காரணத்தால் , சில பேர் தான் பிழையாக உச்சரிக்கின்றோம் என்பதை அறிந்து இந்த மந்திரங்களை நம்மால் கூற முடியவில்லை என்றும் வருந்துகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை தீர்ப்பது தான் அம்பாளின் சங்கல்பம் போலும், நான் இந்தப் பணியினை செய்வதற்கு கருவியானேன். இந்த நூலினை மீண்டும் பிரசுரிக்க வேண்டுமாகிலும் என்னுடைய அனுமதியை பெற வேண்டுகிறேன். இந்த பிரசுரத்தினை நீங்கள் பெற அலைபேசி எண் காணொளிப் பதிவில் உள்ளது. இந்த நூலினை மொத்தமாக அச்சடித்து திருமணம், அறுபதாம் கல்யாணம் போன்ற விழாக்களில் அன்னையின் அன்பர்களுக்கும் சுற்றாருக்கும் அன்பளிப்பாக அளித்து அம்பாளுடைய நாமத்தை மேலும்-மேலும் நிறைய அன்பர்கள் கூறும் பாக்கியத்தினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி. மொத்தமாக வாங்க 9495208674 என்ற எண்ணில் whatsapp குறுந்செய்தி அனுப்பவும். Amazon link to buy book Musically interwoven chants of 1000 names of Lalitha thripura Sundari in Tamizh. For lyrics book place order at https://amzn.in/d/5lX4tSY

மஹா பெரியவா சொன்ன கொடூரமான நோயையும் குணப்படுத்தும் ஸ்லோகம்
▶︎

மஹா பெரியவா சொன்ன கொடூரமான நோயையும் குணப்படுத்தும் ஸ்லோகம்

Vishnu Sahasranamam (with lyrics )
▶︎

Vishnu Sahasranamam (with lyrics )

Sri Lalitha Sahasranamam With Lyrics | Sri Lalitha Sahasranama Stotram
▶︎

Sri Lalitha Sahasranamam With Lyrics | Sri Lalitha Sahasranama Stotram

Sri Lalitha Sahasranama Stotram
▶︎

Sri Lalitha Sahasranama Stotram

லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல முடியவில்லை என்றால் இதை கண்டிப்பாக பாருங்கள் | Shakti Awakening With Vidhyaa
▶︎

லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல முடியவில்லை என்றால் இதை கண்டிப்பாக பாருங்கள் | Shakti Awakening With Vidhyaa

சனி மஹா பிரதோஷ  பாடல் || Pradosham Song ||கடன் தீர்ந்து வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாக கேளுங்கள்
▶︎

சனி மஹா பிரதோஷ பாடல் || Pradosham Song ||கடன் தீர்ந்து வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாக கேளுங்கள்

அபிராமி அந்தாதி | Abirami Andhadhi | தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் | with Lyrics & Meaning
▶︎

அபிராமி அந்தாதி | Abirami Andhadhi | தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் | with Lyrics & Meaning

"கிழவி! தரையில் விழுந்ததை நக்கி சாப்பிடு! மாமியாரை அவமதித்த மருமகளுக்கு கலெக்டர் கொடுத்த அதிர்ச்சி 😱
▶︎

"கிழவி! தரையில் விழுந்ததை நக்கி சாப்பிடு! மாமியாரை அவமதித்த மருமகளுக்கு கலெக்டர் கொடுத்த அதிர்ச்சி 😱

FULL VIDEO CONCERT BY SMT MS SUBBULAKSHMI | #MSSUBBULAKSHMI #CARNATICMUSIC |
▶︎

FULL VIDEO CONCERT BY SMT MS SUBBULAKSHMI | #MSSUBBULAKSHMI #CARNATICMUSIC |

🔴LIVE திருவண்ணாமலை பெரியநந்தி பகவான் சனி பிரதோஷம் அபிஷேகம் | NANDHI ABHISHEGAM #nandhiabhishekamlive
▶︎

🔴LIVE திருவண்ணாமலை பெரியநந்தி பகவான் சனி பிரதோஷம் அபிஷேகம் | NANDHI ABHISHEGAM #nandhiabhishekamlive

What Devi Gives You When You Chant Her 1000 Names (Phalashruthi Explained). #lalithasahasranamam
▶︎

What Devi Gives You When You Chant Her 1000 Names (Phalashruthi Explained). #lalithasahasranamam

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது
▶︎

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video |  Mahanadhi Shobana
▶︎

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | Mahanadhi Shobana

Shri Lalitha Sahasra Namam | | Bhakti Song | Lalita Stotram
▶︎

Shri Lalitha Sahasra Namam | | Bhakti Song | Lalita Stotram

சமைக்கும்பொழுது சொல்லவேண்டிய ஸ்லோகம் | PadmaPriya Prasad | Lalitha Sahasranamam
▶︎

சமைக்கும்பொழுது சொல்லவேண்டிய ஸ்லோகம் | PadmaPriya Prasad | Lalitha Sahasranamam

Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs
▶︎

Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs

அதர்வ ரகசியத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண ஹ்ருதய ஸ்துதி, கடும் கடனும் நீங்கும், பண கஷ்டம் நீங்கும்
▶︎

அதர்வ ரகசியத்தில் உள்ள லக்ஷ்மி நாராயண ஹ்ருதய ஸ்துதி, கடும் கடனும் நீங்கும், பண கஷ்டம் நீங்கும்

Devi Mahathmiyam & Durga Sapthastathi || J.Bhaktavatsalam & Ganesan
▶︎

Devi Mahathmiyam & Durga Sapthastathi || J.Bhaktavatsalam & Ganesan

🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன்  பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM
▶︎

🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன் பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM

கேட்டதை கொடுக்கும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | Tamil | Sri Vishnu Sahasranamam | Dushyanth Sridhar
▶︎

கேட்டதை கொடுக்கும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | Tamil | Sri Vishnu Sahasranamam | Dushyanth Sridhar