முற்பிறவி இப்பிறவி பாவம் போக்கும் சிவபுராணம் சகல நன்மைகளும் தரும் திருவாசகம் Sivapuranam

#மாணிக்கவாசகர்குருபூஜை #aanimasam #ஆனிமகம் #manickavasagar #gurupuja #aanimasam #magam #chidambaram #aavudaiyarkovil #sivapuranam #shivapuranam #thiruvasagam இன்று #மாணிக்கவாசகர் #குருபூஜை அனைவரும் 1முறை கேளுங்கள்! மாணிக்கவாசகர் அருளிய #சிவபுராணம் #திருவாசகம் துன்பங்கள் துரத்தும். சகல நன்மைகளும் தரும். Shivapuranam சிவபுராணம் ஓம் திருச்சிற்றம்பலம் தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே- எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன். – திருச்சிற்றம்பலம் திரு மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த சிவபுராணம் சிவனது அனாதி முறைமையான பழமை (திருப்பெருந்துறையில் அருளியது) கலிவெண்பா நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி! தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர்ஆர் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி! ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,no break அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,no break முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பான் யான் கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,no break எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி, விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்கா விளங்கு ஒளியாய் எண் ணிறந்து எல்லை இலாதானே! நின் பெருஞ்சீர், பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்று அறியேன்; புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பு ஆகி கல்லாய், மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய், செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்! மெய்யே! உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் no break ஐயா! என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று, நுண்ணியனே! வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா! பொய் ஆயின எல்லாம் போயகல, வந்து அருளி, மெய்ஞ்ஞானமாகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும், ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், split போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்! நாற்றத்தின் நேரியாய், சேயாய்! நணியானே! மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே! கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தாற் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த! மறைந்திருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை, அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலஞ் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன்மேல் வந்து அருளி, நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு, தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே! No break தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே! No break நேசம் அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிராய் நின்றானே! இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! அன்பருக்கு அன்பனே! யாவையுமாய், அல்லையும் ஆம் சோதியனே! துன் இருளே தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம் நடுவு ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்த மெஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே! ஆற்றின்ப வெள்ளமே! அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய். சொல்லாத நுண் உணர்வாய், மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப no break ஆற்றேன்! “எம் ஐயா”, “அரனே ஓ” என்று என்று போற்றிப் புகழ்ந்து இருந்து! பொய் கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து!, வினைப் பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அளிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று! சொல்லற்கு அரியானைச் சொல்லித், திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்! சிவபுரத்தின் உள்ளார்! சிவன் அடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. – #திருச்சிற்றம்பலம்

Shiva Kavacham Sani Pradosham
▶︎

Shiva Kavacham Sani Pradosham

01. திருவாசகம் -  சிவபுராணம் | Thiruvasagam - Sivapuranam | Tamil | #sambandamgurukkal #kaavaditv
▶︎

01. திருவாசகம் - சிவபுராணம் | Thiruvasagam - Sivapuranam | Tamil | #sambandamgurukkal #kaavaditv

புண்ணியம் இருந்தால்தான் இந்த வீடியோ உங்கள் கண்களில் படும்! | Miracles of Sivan Sar | TT Harish |
▶︎

புண்ணியம் இருந்தால்தான் இந்த வீடியோ உங்கள் கண்களில் படும்! | Miracles of Sivan Sar | TT Harish |

Variyar Swami | சிவாஜி மகராஜ் கொடுத்த செல்வத்தை துக்காராம் மறுத்தது ஏன்? | கர்மாவை மாற்ற முடியுமா?
▶︎

Variyar Swami | சிவாஜி மகராஜ் கொடுத்த செல்வத்தை துக்காராம் மறுத்தது ஏன்? | கர்மாவை மாற்ற முடியுமா?

மன அமைதி கொடுக்கும் ஸ்ரீபாத சப்ததி: வேண்டுதல் நிறைவேற்றும்  Sripada sapthathi
▶︎

மன அமைதி கொடுக்கும் ஸ்ரீபாத சப்ததி: வேண்டுதல் நிறைவேற்றும் Sripada sapthathi

🔱திருவாசகத்தின் ரகசிய உண்மைகள் என்ன? | Thiruvasagam benefits in Tamil | Vadhavoradigal |ஆன்மீக glitz
▶︎

🔱திருவாசகத்தின் ரகசிய உண்மைகள் என்ன? | Thiruvasagam benefits in Tamil | Vadhavoradigal |ஆன்மீக glitz

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது
▶︎

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

சர்வரோகநிவாரணி மஹான்கள் ஜபிக்கும் சக்திவாய்ந்த ஸ்தோத்ரம் வைத்தியநாத அஷ்டகம் vaidhyanatha ashtakam
▶︎

சர்வரோகநிவாரணி மஹான்கள் ஜபிக்கும் சக்திவாய்ந்த ஸ்தோத்ரம் வைத்தியநாத அஷ்டகம் vaidhyanatha ashtakam

1000 விதமான பிரச்சினையை, கஷ்டத்தை நீக்கும் நரசிம்ம மந்திர ஸ்துதி
▶︎

1000 விதமான பிரச்சினையை, கஷ்டத்தை நீக்கும் நரசிம்ம மந்திர ஸ்துதி

ASMR Addictive Fast Tapping Collection For Deep Sleep & Anxiety Relief (No Talking) — 2.5 Hours
▶︎

ASMR Addictive Fast Tapping Collection For Deep Sleep & Anxiety Relief (No Talking) — 2.5 Hours

வெள்ளிக்கிழமை-மஹாலக்ஷ்மி நிரந்தரவாசம் செய்ய இப்படி அழைத்து பாருங்கள்! Lakshmi Geetopacharam
▶︎

வெள்ளிக்கிழமை-மஹாலக்ஷ்மி நிரந்தரவாசம் செய்ய இப்படி அழைத்து பாருங்கள்! Lakshmi Geetopacharam

சத்ருபயம், எதிர்மறை எண்ணம், மனக்குழப்பம் விலக்கும் சத்ரு சம்ஹார வேல் பதிகம் Shatru samhara pathigam
▶︎

சத்ருபயம், எதிர்மறை எண்ணம், மனக்குழப்பம் விலக்கும் சத்ரு சம்ஹார வேல் பதிகம் Shatru samhara pathigam

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2
▶︎

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

Krupananda Variyar | அப்பர் 'எந்நாளும் இன்பமே' என்று பாடியதன் பொருள் இதுதான் | Vaadhavooran Ayya
▶︎

Krupananda Variyar | அப்பர் 'எந்நாளும் இன்பமே' என்று பாடியதன் பொருள் இதுதான் | Vaadhavooran Ayya

Sivapuranam Story (Tamil)
▶︎

Sivapuranam Story (Tamil)

திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் ஆதாரங்களை விஜய்க்கு தந்த அண்ணாமலை! சேகர்பாபு எப்படி ஜெயிச்சிங்க?
▶︎

திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் ஆதாரங்களை விஜய்க்கு தந்த அண்ணாமலை! சேகர்பாபு எப்படி ஜெயிச்சிங்க?

Poovaar Senni Mannan Song | Thiruvasagam | Ilaiyaraaja | Tamil | Lord Shiva | Manikkavacakar
▶︎

Poovaar Senni Mannan Song | Thiruvasagam | Ilaiyaraaja | Tamil | Lord Shiva | Manikkavacakar

ஆனிவெள்ளி-மந்த்ரஆற்றல் மிக்க தேவிகட்கமாலா துயர் துடைக்கும். சுபிக்ஷம் தரும். Devi Kadgamala Friday
▶︎

ஆனிவெள்ளி-மந்த்ரஆற்றல் மிக்க தேவிகட்கமாலா துயர் துடைக்கும். சுபிக்ஷம் தரும். Devi Kadgamala Friday

மரணத்திற்கு பிறகு நம்மோடு வருவது யார் ? நரகத்தில் எந்த பாவத்திற்கு என்ன தண்டனை ? Dr. U Ve Venkatesh
▶︎

மரணத்திற்கு பிறகு நம்மோடு வருவது யார் ? நரகத்தில் எந்த பாவத்திற்கு என்ன தண்டனை ? Dr. U Ve Venkatesh

சுதர்சனஜெயந்தி-தோஷங்கள் பிணிகள் போக்கும் மனவலிமை, காரியஜெயம் தரும் ஸுதர்சனாஷ்டகம் Sudarshan jayanthi
▶︎

சுதர்சனஜெயந்தி-தோஷங்கள் பிணிகள் போக்கும் மனவலிமை, காரியஜெயம் தரும் ஸுதர்சனாஷ்டகம் Sudarshan jayanthi