ரமழான் பிறை 25| ஐந்து நபிமார்கள் ஓதிய ஐந்து துஆ|25 நாள் தொழுதவரின் நன்மை|உஸ்தாத் ஹமீது மஹ்லரி |
USTAD HAMEED ONLINE ARABIC ACADEMY உஸ்தாத் ஹமீது ஆன்லைன் அரபிக் அகாடமி உஸ்தாத் ஹமீது மஹ்லரி ஐந்து நபிமார்கள் ஓதிய ஐந்து துவா 25 நாள் தாராவி தொழுதவரின் நன்மை 25 நாள் தராவீஹ் தொழுதவரின் நன்மை #ramadan #ramadan2025 #ramadanbayan #dua #உஸ்தாத்_ஹமீது #துஆ #duaislam #duaa #duatamil #tamildua #tamilduamuslim #tamilduastatus #துஆக்கள் #துஆதமிழ் #துஆக்களின்சிறப்புகள் #துவா நபிமார்கள் கேட்ட துஆ குர்ஆனில் இடம் பெற்றவை 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ ) “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 127-128) 02. ஈருலக நன்மை பெற நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ) “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2: 201) 03. கல்வி ஞானம் பெற நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ ( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي ) “அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” (அல்குர்ஆன் 2:67) 04. பாவமன்னிப்புப் பெற நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ) “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” (அல்குர்ஆன் 7: 23) 05. படைத்தவனிடம் சரணடைந்திட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ ) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (அல்குர்ஆன் 6: 79) 06. விசாலமான உணவைப் பெற நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ ) “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு – எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” (அல்குர்ஆன் 5: 114) 07. குழந்தைப்பேறு பெற நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء ) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 3: 38) 08. இறைவனின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( نتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ ) “நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்.” ”இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (அல்குர்ஆன் 7: 155, 156) 09. சோதனையின்போது பொறுமை ஏற்பட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ ) “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (அல்குர்ஆன் 7: 126) 10. கவலைகள் தீர நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி.” (அல்குர்ஆன் 9: 129) 11. மாற்று சமயத்தவர்களுடன் நல்லுறவு ஏற்பட நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ ) “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்.” (அல்குர்ஆன் 7: 89) 12. சகோதரருக்கு துஆ நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبِّ اغْفِرْ لِي وَلأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ ) “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) – பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்.” (அல்குர்ஆன் 7: 151)

🔴LIVE JUMMAH Hajj, 9 important duas to seek blessings, things to remember! 18.7.25

சவுதி சிறையில் ஆபத்தில் அனோஜன்! | வெளிவராத அந்த திகில் நிமிடங்கள்! | seithikalukku appal

பிர்அவ்ன் உடலை அல்லாஹ் ஏன் பாதுகாத்தான்..?

குர்பானியின் சிறப்புகள் மற்றும் முக்கிய சட்டங்கள்| குர்பானி யாருக்கு கடமை| #உஸ்தாத்_ஹமீது #tamil

வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் எடுக்க முன் இஃஸ்திஹாரா! ஜும்ஆ பேருரை! Ash Sheik Mujahid Ibn Razeen

மக்தப் மதரஸாவின் அவசியம்

Bhagyaraj Sir மகனை நினைச்சு ரொம்ப கஷ்டப்பட்டாரு..💔பேசமுடியாமல் உடைந்து அழுத Parthiban

رقية البيت | سورة الفاتحة البقرة الكهف يس الواقعة الرحمن الملك الصافات الدخان الجن الزلزلة الاخلاص,

முஹர்ரம் முதல் வெள்ளிக்கிழமை காலை லுஹா தொழுகை தொழுது இந்த தஸ்பீஹ் ஓதுங்கள்

Morning Adhkar (أذكار الصباح) Daily Supplications for Barakah & Unlock Inner Peace | Muslim Daily

Quran recitation in a peaceful voice I Alfatiha, Yasin, AlWaqiah, Arrahman, -By Alaa Aqel

உஸ்மான் (ரலி) வாழ்க்கை வரலாறு

அல்லாஹ்வின் அடிமை | servant of Allah | Jummah Bayan

Quran recitation in a peaceful voice I Alfatiha, Ayat AlKursi, Yasin, AlWaqiah, Arrahman, Alaa Aqel

01 தடவை இந்த தஸ்பீஹ் ஓதினால், உங்கள் கவலைகள் நீங்கும்
![[PALACES IN JANNAH] சுவர்க்க மாளிகைகளை பெற 10 அமல்கள்](https://i.ytimg.com/vi/ouOj0o9pP5I/hqdefault.jpg?sqp=-oaymwEjCNACELwBSFryq4qpAxUIARUAAAAAGAElAADIQj0AgKJDeAE=&rs=AOn4CLAQaylt6t54-Ku-eQOu-qsbpxHzMQ)
[PALACES IN JANNAH] சுவர்க்க மாளிகைகளை பெற 10 அமல்கள்

رقية البيت | سورة الفاتحة البقرة الكهف يس الواقعة الرحمن الملك الصافات الدخان الجن الزلزلة الاخلاص,

காலையில் எழும்பியதும் முதலில் என்ன செய்ய வேண்டும் சூரதுல் கமர் தப்சீர் 14 #Tamil Hadees #Quran

ரமழான் பிறை 27| தமிழ் தவ்பா துவா, துஆ|கண்ணீர் வர வைக்கும் துஆ|உஸ்தாத் ஹமீது மஹ்லரி |#துஆ #dua

