சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் ஐயா ஜீவசமாதி
சிங்கம்புணரி முத்துவடுகநாதர் சித்தர் ஜீவசமாதி மூலவர்: முத்துவடுகநாதர் (வாத்தியார் ஐயா) ஊர்: சிங்கம்புணரி மாவட்டம் : சிவகங்கை ஸ்ரீ முத்து வடுகநாதர் சித்தர் ஜீவசமாதி சிங்கம்புணரி சித்தர் வரலாறு சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் சித்தர் ஆலயம் சித்தர் முத்துவடுகேசதேவர் இல்லற நிலையில் நின்று ஆன்மீக பணிபுரிந்த இச்சித்தர் சேதுபதி சீமையின் செம்பிநாடு முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெண் வாரிசு வழி வந்த மறவர் பூவலத்தேவனுக்கும் குமராயி நாச்சியாருக்கும் 1737ல் பிறந்தவர் முத்துவடுகேசதேவர் பூவலத்தேவனின் திடீர் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றவர்கள் அடுத்த வாரிசான முத்துவடுகேசதேவருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர். இதை அறிந்த தாயார் இரவோடு இரவாக குழந்தையுடன் வெளியேறி பாலமேட்டில் குடியேறினார். அங்கு ஜெகநாதன் என்பவரின் பண்ணை வீட்டிலிருந்த போது ஜெகநாதனுக்கு முதுகில் ராஜபிளவை நோய் ஏற்பட்டது. அந்நோயை குணப்படுத்த பல வைத்தியர்கள் வந்தாலும் குணமாகவில்லை. இதையடுத்து பண்ணை வீட்டிலிருந்த முத்துவடுகேசதேவர் தன் கையால் மருந்து இட ராஜபிளவை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதையடுத்து அச்சிறுவனின் புகழ் பரவ குவிந்தது கூட்டம். பிறப்பிலேயே இறையருள் பெற்ற முத்துவடுகேசதேவர் அழகர்கோவில் சென்று பாலையா சுவாமிகளிடம் அருள் உபதேசம் பெற்றார் முத்துவடுகேசசதேவர் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறி ஆசிரியர் ஆனார். இதனால் பட்டூர் வாத்தியார் என்றே அழைக்கப்பட்டார். தான் வசித்த பட்டூர் அருகே உள்ள சிங்கம்புணரியில் சூனியங்கள் செய்யும் கூட்டத்தினர் மக்களை அச்சுறுத்தி பொருள்களை கொள்ளை கொண்டனர். மந்திர தந்திரங்களால் மக்களை ஆட்டிப் படைத்த அவர்களை அப்புறப்படுத்த சிங்கம்புணரிக்கு இச்சித்தர் அழைக்கப்பட்டார். எல்லோருக்கும் சவாலாக இருந்த அப்பீதாம்பர கூட்டத்தினரை ஊரை விட்டு ஓடச் செய்தார். இதையடுத்து சிங்கம்புணரி மக்களின் வேண்டுதலை ஏற்று அங்கேயே தங்கிய முத்துவடுகேசதேவர் சிங்கம்புணரியை ஒட்டிய வனத்தின் அருகே உள்ள கத்தாழை காட்டுக்குள் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். அவர் செல்லும் வழியில் சிற்பி ஒருவர் சிலை செதுக்கும் வேலை செய்து வந்தார். தினம் ஒருவர் கம்பீரத் தோற்றத்துடனும் சித்தருக்குரிய பொலிவுடனும் அந்த அடந்த காட்டுக்குள் போவது வருவதுமாக இருந்ததைப் பார்த்து அவரிடம் சென்று தனக்கு வாரிசு இல்லாததை சொல்லி அழுதார். அதனால் மனமிறங்கிய அவர் சிலை செதுக்க ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வரும்படி கூறினார். தான் அந்த வனத்திற்குள் தவத்தில் ஈடுபடும் பொழுது அதை அப்படியே சிலையாக செதுக்கும்படி சிற்பியிடம் கூறினார் சித்தர். சிற்பம் உருவாக அதை தழுவி தனது தவ வலிமையை அச்சிற்பத்திற்கு ஏற்றினார். தான் ஜீவசமாதி அடையும் பொழுது இச்சிலையை அந்த பீடத்தின் மீது நிறுவி வழிபட கூறி அச்சிற்பிக்கும் குழந்தை வரம் அளித்தார். அதன் பின் சிவந்திலிங்கம் பண்டாரம் அவர்களின் வாரிசுதான் தனக்கு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். அப்போது சிவந்திலிங்கம் வாரிசுகள் நாங்கள் ஒரு ஏழை தங்களால் உங்களுக்கு பூஜைகள் செய்ய இயலும் என கூறினார்கள். அதற்கு சித்தர் சிங்கம்புணரி வணிகர்களிடம் சென்று எனக்கு பூஜை செய்வதற்கு என்று கேள் அவர்கள் கொடுப்பதை வாங்கி வந்து பூஜைகளை செய்தால் போதும் என சித்தர் கூறினார். அந்த முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு கடையாக சென்று வணிகர்கள் கொடுக்கும் பொருள் அல்லது பணத்தை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். ஒருமுறை புலவர் ஒருவர் சித்தரின் இறைசக்தியை பரிசோதிக்க சித்தரிடம் தாங்கள் சாப்பிட விரால் மீன் சமைத்து வந்துள்ளேன் என்று சாப்பிட கொடுத்தார். உண்மையில் அவை கருநாகத்துண்டுகள். அதை சுவைத்து சாப்பிட்ட சித்தர் பின்னர் உமிழ்ந்த போது கருநாகம் உயிர் பெற்று ஓடியது. பின்னர் அந்த புலவர் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இப்படி பல அதிசயங்கள் நிகழ்த்திய முத்துவடுகேசதேவர் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து 18.08.1833 அன்று ஜீவசமாதி அடைந்தார். அதன்பின் சித்தர் அன்று கூறியபடி அச்சிற்பி செதுக்கிய சிலைக்குதான் தற்போது முத்துவடுகேசதேவர் ஜீவசமாதி ஆலயத்தில் பரம்புமலை நோக்கி சிலையை நிறுவி அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. பின்பு அவரின் அருளால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி திருக்கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி, அமாவாசை வழிபாடுகள் நடத்துகின்றனர். பெளர்ணமி நள்ளிரவில் அபிஷேகமும், அன்னதானமும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவும் நடைபெறுகின்றனர். மனிதராக பிறந்து மனிதனோடு மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஜீவசமாதியான இந்த அருள் சித்தரின் அருள் தரிசனம் காண வெளி நாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆண்டு தோறும் சித்ரா பெளர்ணமியன்று திருத்தேரில் சித்தரின் திருவுருவச் சிலை நகர் வலம் கொண்டுவரப்படும். ஆண்டு தோறும் ஆடி மாதம் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறும். கோயிலின் Google Map Link https://maps.app.goo.gl/A8dPemon4nvB3... ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 7639508028 +91 9345977416 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்

நாடி ஜோதிடரின் துல்லிய கணிப்பு! | Vazhum Siddhar Muthukumarasamy | Nadi Astrology | MGR | CM Vijay

முருகன் பொதிகையில் பிறந்தார்! ஆரியர் உருவாக்கிய கட்டுக்கதை உடைந்ததா? LordMurugan | GemTV

கல் சிலையா? உயிரோடு இருக்கும் மருத்துவரா? | ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர்!

🚨விஜய் ஆட்சி Februaryகுள் கவிழுமா-Naadi Jothidar Babu Q&A l முருகர் சிலை மீட்கப்படுமா,Roja tamil tv

ஊட்டத்தூர் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோவில் | Ootathur Sri Suddha Rathneshwarar Temple Vlog |DiraDinesh

ஸ்ரீ முத்து வடுகநாதர் சித்தர் || sri muthuvaduga nathar || jeevasamathi || singampunari || sidhar

என்ன வேண்டினாலும் உடனே பலிக்கும் அப்பண சுவாமி ஜீவசமாதி ஆலயம் #jeevasamadhi #wayofyogis

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் சரித்திரம் பாகம் :1

salem rukmani speech | சட்டங்கள் அனைத்தும் தர்மங்கள் அல்ல | அற்புதமான ஆன்மீக உரை | Iriz Vision

😲😱🙏📿வந்தவாசியில் பல வருடங்கள் மண்ணுக்குள் இருந்த சிவன் ஆலயம் மீட்கும் பணி முழு காணொளி ...

இதை செய்தால் வாராகி அருள் பூரணமாக கிடைக்கும் | Ashada Navaratri Special | Nithilan ft Krishna Swami

100% பலன் தரும் குலதெய்வ வழிபாட்டு 3 பொருட்கள்! | Rishabanandhar | Kuladeivam Vazhipadu Benefits |

மௌன ஞானி நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் வரலாறு | Miracle of Sadasiva Brahmendra Siddhar Nerur

முசுலிம்கள் தான் OG பறையர் | Prof. Ramachandran X Sufiyan | Muslim History

ஆதிதவ மகா யோகி கௌடபாதர் சித்தர் | ஜீவ சமாதி

நொடிப்பொழுதில் வினைகளைத் தீர்க்கும் விபூதி சித்தர்! | Pollachi Viboothi Siddhar| Nalla Neram Nagaraj

உடுவில் இராணுவ முகாமில் வதைமுகாமில் நூலிழையில் தப்பிய பெண்ணின் திடுக்கிடும் தகவல்கள் | Udaruppu

கிண்ணிமங்கலம் ஸ்ரீ ஏகநாதர் சுவாமி கோவில் 82 சித்தர்கள் ஜீவசமாதி தல வரலாறு I திருக்கோவில் தரிசனம்

புலம்பெயர்ந்தவரா ? இலங்கை குடியுரிமை அற்றவரா ?? | Thedal | Jaffnavlogs #jaffnayoutubers

