Thiruvum | Vadathirumullaivoil | திருவும் | வடதிருமுல்லைவாயில் | Thevaram | தேவாரம்
Thiruvum | Vadathirumullaivoil | திருவும் | வடதிருமுல்லைவாயில் | Thevaram | தேவாரம் Thevaram - Thondai Naattu Thiruthalangal | தேவாரம் - தொண்டை நாட்டு திருத்தலங்கள் | திருத்தணி N.சுவாமிநாதன் | Sruthilaya | ஸ்ருதிலயா தலம் : திருமுல்லைவாயில் (சென்னை) இறைவன் பெயர் : பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர். இறைவி பெயர் : கொடையிடைநாயகி, கொடியிடையம்மை. தல விருட்சம் : முல்லை. தீர்த்தம் : கல்யாண தீர்த்தம். ஆகமம் / பூஜை : சிவாகமம் அ௫ளியவர்கள் : சுந்தரர் திருமுறை : ஏழாம் திருமுறை பண் : தக்கேசி நாடு : தொண்டைநாடு வழிபட்டோர்: சுந்தரர் சிறப்பு: தொண்டைமான் கட்டிய திருக்கோயில்; சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. நந்தி கிழக்கு நோக்கியுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தளங்களில் 22 வது தலமாகும் பாடல்: திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள்என் றெண்ணி ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 1 கூடிய இலயஞ் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றாய் என்று தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 2 விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய் செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் மரசே தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 3 பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல் செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய் பாசுப தாபரஞ் சுடரே. 4 சந்தன வேருங் காரகிற் குறடும் தண்மயிற் பீலியுங் கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி வந்திழி பாலி வடகரை முல்லை வயிலாய் மாசிலா மணியே பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 5 மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கையால் மிகைபல செய்தேன் செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 6 மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல் அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல் அறாத திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற் செல்வனே எல்லியும் பகலும் பணியது செய்வேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 7 நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் தன்னையாட் கொண்ட சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில் தேடியான் திரிதர்வேன் கண்ட பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 8 மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் மாணிதன் மேல்மதி யாதே கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் செல்வனே செழுமறை பகர்ந்த பட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 9 சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட் டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும் நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீ பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. 10 விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத் திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவலா ரூரன் உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும் உள்குளிர்ந் தேத்த வல்லார்கள் நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க் கரசே. 11 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் | தேவாரம் -18 | Thiruvum Meiporulum | சுந்தரர் | Thevaram

Kallaarntha Poonkondrai - Thirupullirukku Velur

திருவாசகம் தொகுப்பு, பொன் சுந்தரலிங்கம், Thiruvasagam, pon Sundaralingam

Thiruvum Meiporulum- Sundarar Thevaram | திருவும் மெய்ப்பொருளும் | Vadathirumullaivayil | Bakthi TV

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

Karai Ani | Thiruvakkarai | கறை அணி | திருவக்கரை | Thevaram | தேவாரம்

திருநாவுக்கரசு தேவாரம் | Thirunavukkarasar Thevaram Vol1 | Dharmapuram P Swaminathan - Devaram Song

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

Erithavan | எரித்தவன் | Thiruvallam (Thiruvalam) | திருவல்லம் (திருவலம்) | Thevaram | தேவாரம்

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

அவ்வினைக்கு | திருநீலகண்ட பதிகம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | Avvinaiku

"பற்றற்றார் சேர்" சிவனை வணங்கும் முறைபற்றி அப்பர் அருளியது நன்றி குரலிசை வயலூர் பாலசந்தர் ஓதுவார்

Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

Pootherndhu | Thiruvothur | பூத்தேர்ந் தாயன | திருஓத்தூர் | Thevaram | தேவாரம்

Thaan Enai Mun padaithan - Sundarar Thevaram | தான் எனை முன்படைத்தான் | Sivalogam | Bakthi TV

பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - திருவும் மெய்ப்பொருளும் (திருமுல்லைவாயில்)

"கண்டு கொள்ளரி" நீண்ட ஆயுள் பெறலாம் அப்பர் தேவாரம் நன்றி பாடிய ஓதுவார் மூர்த்திகளுக்கு

திருமூலர் திருமந்திரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Thirumoolar Thirumantiram

