திருப்புள்ளிருக்குவேளூர் பதிகம் | வைத்தீஸ்வரன் கோவில் | பா.உமாநந்தினி | #உமாநந்தினி
இரண்டாம் திருமுறை. 43 பதிகம் திருபுள்ளிருக்குவேளூர் பதிகம் கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. தையலா ளொருபாகஞ் சடைமேலா ளவளோடும் ஐயந்தேர்ந் துழல்வாரோ ரந்தணனா ருறையுமிடம் மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப் பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ ஈசனெம் பெருமானார் இனிதாக வுறையுமிடம் யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே. மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம் ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண் போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம் மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப் புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப் பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம் பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம் எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப் புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச் சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம் ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும் போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம் விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப் புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக் கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல் மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே திருச்சிற்றம்பலம் . . . . . . . . பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு / %e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae... தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு • தமிழினி அருள்ராஜ் செல்வி. சபரி ஸ்ரீ சக்திவேல் • திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா | ஆறாம் ... . . . . . #உமாநந்தினி #உமாநந்தினிதேவாரம் #கௌமாரமடாலயம் #ஆரூர்அடிகள் #தேவாரம் #திருஞானசம்பந்தர் #சுந்தரர் #மாணிக்கவாசகர் #திருநாவுக்கரசர் #umaakanna #umanandhinidevaram #umaanandini #gowmaramadalayam #aaruradigal

Kallaarntha Poonkondrai - Thirupullirukku Velur

திருநாவுக்கரசர் வரலாறு - பகுதி 01- உமா நந்தினி

Wedding ceremony | Neeruvari Aadaravod | Thiruvedikudi ceremony | #Umanandini

Paranjothi Mahan ll ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ll பேரா.இரா.முரளி

கொங்கு நாட்டு திருத்தலங்கள் | 01 அவிநாசி | சுந்தரர் தேவாரம் | #உமாநந்தினி

வைத்தீஸ்வரன் கோவில் வரலாறு | Vaitheeswaran Temple History in Tamil | Ukran Velan

Pancha Puranam Padal Lyrics in Tamil

திருநீலகண்டத் திருப்பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பா.உமா நந்தினி | #உமாநந்தினி

Krupananda Variyar | அப்பர் 'எந்நாளும் இன்பமே' என்று பாடியதன் பொருள் இதுதான் | Vaadhavooran Ayya

Mangala Thirupadhikam | May we live well on the earth | Thirukazhumalat Thirupadhikam | #Umanandini

146.நீறுவரி ஆடரவொ டாமைமன |திருவேதிகுடி | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

திருஞான சம்பந்தர் தேவாரம் பகுதி 1 | முதல் திருமுறை - முதல் பதிகம் | மந்திரம் 1 - 5 | விளக்கம்

தீராத நோயை தீர்க்கும் அற்புத கோவில் | #வைத்தீஸ்வரன் வைத்தியநாதசுவாமி | JothiTv | jothitvlive

Natarajar Pathu | Siva Tamil Devotional Songs

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

24.ஆண்டானை அடியேனை |திருப்புள்ளிருக்குவேளூர் | திருநாவுக்கரசர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

முதல் திருமுறை 🏵️ பதிகம் 01 🏵️ "தோடுடைய செவியன்" - குருகுல இசைவாணி உமா நந்தினி

Pa. Sargurunathan - Kallaarntha Poonkondrai - Thirupullirukku Velur

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

