Yamama Nee - யாமாமாநீ யாமாமா - திருஞான சம்பந்தர் பாடல்
#thevaram #தேவாரம் #devaram #thevaram #yamamanee #yamamaneeyamama -------------------------------------- யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா 1 யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. 2 தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. 3 நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 11 ----------------------------------------- பண் :கௌசிகம் பாடல் எண் : 1 யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. பொழிப்புரை : ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!. குறிப்புரை : யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால். ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும். (ஏகான்மாவாதிகளை மறுத்தது.) மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. (\\\\\\\"எம்மிறை நல்வீணை வாசிக்குமே\\\\\\\" என்பது அப்பர் திருவிருத்தம்) காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே. காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட. நாகா - பாம்புகளை யுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.) சினைவினை முதன்மேல் நின்றது. காழீயா - சீகாழிப்பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) \\\\\\\"நாரணன்காண் நான்முகன்காண்\\\\\\\" என்பது திருத்தாண்டகம். மா - கரியதாகிய. மாயா - மாயைமுதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை \\\\\\\"ஒருபொருளுங் காட்டாது இருளுருவம் காட்டும், இரு பொருளும் காட்டாதிது\\\\\\\" என்னும் திருவருட்பயனாலறிக. (இருண்மலநிலை. 3) மாயா - வடசொல், உபலட்சணம். பண் :கௌசிகம் பாடல் எண் : 2 யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. பொழிப்புரை : வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக. குறிப்புரை : யாகா - யாகசொரூபியே. யாழீ - யாழ்வாசிப்பவனே. காயா - அடியாருக்கு அருள வருகையில் உருவத்திருமேனி கொள்பவனே. காதா - சங்காரகருத்தாவே. காதுதல் - கொல்லுதல். வடசொல். யார் ஆர் - எவரெவருக்கும். ஆ - (பெற்றவள்) ஆகும். தாய் ஆயாய் - தாயானவனே. (ஆ + தாய் = வினைத்தொகை) ஆயா - ஆராய முடியாத. தார் - மாலை. ஆர் ஆயா - ஆத்திப்பூவாகக் கொண்டவனே. (சிவனுக்குரிய மாலைகளில் திருவாத்தியும் ஒன்று) தாக ஆயா - காதல் கொண்ட முனிபத்தினிகளாகிய மகளிர்கூட்டத்தை யுடையவனே (தாக ஆயன் குளாம்பல், மராடி என்பது போற்கொள்க) காழீயா ! யா - துன்பங்கள் எவற்றினின்றும் கா - எம்மைக் காப்பாயாக. பண் :கௌசிகம் பாடல் எண் : 3 தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. பொழிப்புரை : அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே! பண் :கௌசிகம் பாடல் எண் : 4 நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. sundarar thevaram,thevaaram,சம்பந்தர் தேவாரம்,thevaram songs,thevaram songs in tamil,tevaram,yamama nee yamama,#devaram,sivan thevaram song,vayanai manathanai thevaram,திருநாவுக்கரசர் தேவாரம்,sambanthar devaram,sampanthar devaram,thevaram : thiramkonda adiyaar,yamama nee yamama songs,devaram padal,devaram songs,yamamani yamama,gananasambandar nattramizh thevaram vol 2,thevaram : nelakalanitha

திருநாவுக்கரசு தேவாரம் | Thirunavukkarasar Thevaram Vol1 | Dharmapuram P Swaminathan - Devaram Song

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

சிக்னஸ் இண்டஸ்ட்ரி-2 | மக்களை ஏமாற்றும் மருத்துவர்கள் | Dr B M HEGDE Speech | DIABETES controlled

கட்டுநாயக்காவில் சிக்கிய முக்கிய பாதாள உறுப்பினர் 😳 பட்டப்பகலில் நீதிமன்றுக்குள் புகுந்து தாக்குதல்!

Sri Dakshinamurthim | Thodi Ragam | Udaiyalur Kalyanaraman Bhagavathar Bhajan

“பிறப்பால் சீனர்கள் ஆனால் தமிழ்தான் எங்கள் அடையாளம்!“❤️Singapore's Tamil-Speaking Chinese | Gobinath

"Yamama Nee" தலம் சீர்காழி பலன்கள் கல்வி அறிவு இசை சம்பந்தர் அருளியது குரலிசை சற்குணநாதர் ஓதுவார்

துன்பம் நேர்கையில் (Tunbam Nergaiyil - Desh) Sanjay Subrahmanyan

புண்ணியம் இருந்தால்தான் இந்த வீடியோ உங்கள் கண்களில் படும்! | Miracles of Sivan Sar | TT Harish |

ஈழத்துக் கலைஞர்களின் அருமையான வாசிப்பு

Ilangai Jeyaraj speech | இறைவனே என் தலைவிதியில் தலையிடுவதில்லை..! | @muthamilmandram

"SURARULAHU NARARKAL"("சுரருலகு நரர்கள்")~SAMBANDHAR DHEVARAM~SUNG BY MAYILAI SRI Pa.SAGURUNATHAN.

Thiruvasagam | A Classical Cross-Over | Isaignani Ilaiyaraaja | Manikkavacakar

🔴 CM விஜய் சொன்ன வார்த்தை 😱 கடுப்பாகி கத்திய உதயநிதி

Thiruvarutpa | திருவருட்பா இன்னிசை | மழையூர் சதாசிவம்

#ஓருருவாயினை#Oruruvaayinai #Thirugyanasambandhar #திருஞானசம்பந்தர் #திருமுறை#Solar Sai #THIRUMURAI

பிரதோஷம் இன்று கேட்க வேண்டிய கைலை நாதனே ஈஸ்வரனே சிவன் பாடல் | Sivan Song Tamil | Arbudhaa Bakthi

DK Pattammal | AIR Relay from Thiruvaiyyaru, 1959 | #TyagarajaAradhana

Jaishankar’s Brutal Introduction to Western Media: Arrogance Destroyed.

