மடப்புரம் காளிஅம்மன் கோயிலில் காசு வெட்டினால் எதிரி காலி..! Madapuram kaliyamman story l Mk tamil
Join to paid membership & Get More Benefits / @mktamil மடப்புரம் காளிஅம்மன் கோயிலில் காசு வெட்டினால் எதிரி காலி..! !Madapuram kaliyamman story l Mk tamil மதுரையிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள திருப்பூவணம் என்ற சிற்றூரிலிருந்து ஓன்றரை கிமீ தூரத்தில் மடப்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயர் “அடைக்கலம் காத்த அய்யனார் – பத்ரகாளியம்மன் திருக்கோயில்.” பில்லி,சூனிய,ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை வரம், திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர். மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே கொடியவர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பிரம்மன், விஷ்ணு, சிவனுடன் கௌரி அம்மனும் ஒரு காட்டுபகுதியில் வேட்டையாட வந்தார்கள். அது அடர்ந்த காட்டு பகுதி. இனி காட்டுக்குள் செல்ல செல்ல சூரிய வெளிச்சம் கூட இல்லாமல் இருக்கும். ஆகவே நீ இங்கேயே இரு என்று சிவபெருமான் கௌரியம்மனை கேட்டுக்கொண்டார். அம்மனின் காவலுக்கு அய்யனாரை அங்கு நிறுத்தினார் சிவன். தேவியும் சிவனின் உத்தரவுக்கேற்ப அந்த மடப்புரம் என்கிற அந்த இடத்திலேயே தங்கினார். அந்த இடம் அம்மனுக்கு மிகவும் பிடித்து இடமாக மாறியது. பல வருடங்கள் கழித்து அந்த பகுதியில் அம்மன், சிலை வடிவில் இருப்பதாக ஊரில் செய்தி பரவியது. ஆனால் அடர்ந்த காட்டு பகுதியாக இருந்ததால் யாரும் அந்த அம்மனை பார்க்க செல்லவில்லை. ஆனால் ஒரு நபர் துணிச்சலுடன் அந்த காட்டு பகுதிக்குள் சென்று, அங்கு இருந்த அம்மனை தரிசித்தார். தன்னை தைரியமாக வந்து பார்த்ததை கண்டு மகிழ்ந்து, அந்த பக்தனுக்கு காட்சி தந்தாள் அம்மன். அம்மனை நேரில் கண்ட பக்தன், “தாயே நீங்கள் இந்த காட்டு பகுதியில் தனியாக இருக்கிறீர்களே.. உங்களுக்கு பாதுகாப்பாக நான் இங்கேயே இருக்கிறேனே.” என்றார். “நான் காளிதேவி. எனக்கு நீ காவலா? வேண்டாம்.” என்று மறுத்தாள் அன்னை. ஆனால் அந்த பக்தர் கேட்பதாக இல்லை. பிறகு அந்த பக்தரின் மனதிருப்திக்காக காளிதேவி, அந்த பக்தன் தன் இடத்திற்கு காவலுக்கு இருக்க சம்மதித்தாள். எனக்கு வருங்காலத்தில் இந்த இடத்தில் கோயில் கட்டுவார்கள். ஆனால் என் கருவரையில் மேற்குறை இல்லாமல் இருக்கும். அதனால் நீ குதிரை வாகனத்தில் இருந்து, எனக்கு நிழல் தா.” என்று ஆசி வழங்கி, அந்த பக்தனை குதிரையாக மாற்றினாள் அம்மன். அந்த பக்தர்தான், சிவபெருமான் அம்மனின் காவலுக்கு நியமித்த அய்யனார். அதனால்தான் அடைக்கலம் காத்த அய்யனார் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. மருது சகோதரர்கள் கி.பி பதினெட்டாம் நூற்றாண்டியில் சிவகங்கையை ஆண்டு வந்த வேலு நாச்சியாரும், அவருக்கு பாதுகாவலராக இருந்த மருது, சின்ன மருது சகோதரர்களும் போருக்கு செல்வதற்கு முன்னதாக மாலை வேளையில் மடப்புரம் காளி அம்மனையும், அய்யனாரையும் வணங்கிவிட்டுதான் செல்வது வழக்கம். ஒருநாள் ஆங்கிலேயர், மருது சகோதரர்களை கொல்ல பல இடங்களில் ஆள் அனுப்பி தேடினார்கள். ஆங்கிலேயரின் பார்வையில் இருந்து எங்கு மறைந்திருப்பது என்ற தெரியாமல் திணறினார்கள் மருது சகோதரர்கள். அந்த நேரத்தில் அவர்களை காப்பாற்ற அய்யனார் நேரிலேயே வந்து, மருது சகோதரர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார் என்றும் அதனாலும் இந்த அய்யனாருக்கு அடைக்கலம் காத்த அய்யனார் என்று பெயர் வந்ததாகவும் வரலாறு சொல்கிறது. எதிரிகளை அளிக்க காளிஅம்மன் முன் காசு வெட்டி podugiraargal ஒருநாள் திருப்பூவணம் புதூரைச் சேர்ந்த கெட்ட குணம் கொண்ட ஒரு நில சுவான்தாரர், ஊர் மக்களுக்கு மிக தொல்லை கொடுத்து வந்தார். அவரின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத இந்த கோயில் பூசாரி, அம்மன் முன் கண்ணீர் விட்டு அழுது, “அவனுக்கு ஒரு முடிவு கட்டு தாயே” என்று கூறி காசை வெட்டி போட்டார். யாராலும் அடக்க முடியாமல் துள்ளி திரிந்த காளையாக இருந்த நில சுவான்தாரருக்கு பல இன்னல்கள் ஏற்பட்டது. அவர் வீடு இடிந்து விழுந்தது. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. வாரிசு இல்லாமல் அந்த நிலச் சுவான்தாரர் செத்தார். #Mktamil #madapuram @MkTamil இதன் பிறகுதான் தங்களால் அழிக்க முடியாத விராதிகளை அழிக்க அம்மன் முன் காசை வெட்டி போடும் வழக்கம் உண்டானது ➤ Copyright Notice ☛ This video and our youtube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine under section 107 of the U.S. Copyright Act. If you have any concerns about this video or our position on the fair use defense, please write to us at [email protected] so we can discuss amicably. Thank you

நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method

மடப்புரம் பத்திரகாளி #maduraisakthikarthick #madapuram #kummi #ytstudio #ytshorts #ytvideoes #tamil

இந்த கோவிலுக்கு வந்தாலே வெற்றி தான் | Varahi Siddhar | Parigaram | Seivinai

பாண்டி கிட்ட எது கேட்டாலும் தருவாரு ஆனா | pandi kovil history | pandi muni | பாண்டி முனி

Madapuram Bathirakaliamman AADI SIRAPPU POOJA-28.07.2023

திருப்பதி மலையில் உயிர்ப்பு, மர்மத்தை பார்த்த விஞ்ஞானிகள் ஓடிவிட்டனர்| Tirupati Mount Mystery

எதிரி தொல்லையா?? || சின்ன துண்டு பெருங்காயம் போதும்.. @Sadhguru_saicreations1111

காசு வெட்டி போட்டால் 8 நாளில் தண்டனை உறுதி ! காணாமல் போனது கிடைக்கும் அதிசயம் ! kollangudi kaali,

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இந்த மாதிரி செய்யுங்க அருமையான பரிகாரம் | seivinai pariharam

அண்ணாமலையுடன் இணையும் லாரன்ஸ் | Annamalai new political party updated |

காசு வெட்டி போடுதல் தீமைகள் அதன் தீர்வுகள் | KaasuVetti Poduthal Theemaigal Adhan Theervugal

பிரளய காலத்தில் தோன்றிய மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் அற்புதங்கள் | Madurai Madapuram Kaali

மதுரை பாண்டி முனீஸ்வரர் வரலாறு | Madurai Pandi Muneeswarar History | Pandi Muni story in Tamil

சகலவிதமான கட்டுகளையும் உடைக்க சக்தி வாய்ந்த மந்திரம்.. #youtube #viral @Sadhguru_saicreations1111

பெற்ற வயிறு பற்றி எறியும் போது வெட்டுடையார் காளி கிட்ட காசு வெட்டி போடுங்க | Sri Maha Yohini Beedam

தமிழகம் முழுவதும் தவெகவினர் காமத்தொல்லை | Vijay | TVK | Damodharan Prakash

ஸ்ரீ மடப்புரம் பத்ரகாளி அம்மன் அழைப்பு பாடல். #santhakumarabiramam

மெய்சிலிர்க்க வைக்கும் சிங்கம்மாள் வரலாறு! சாமி ஆடிய பெண் சொன்ன உண்மை | Temple Mystery

இப்படி செய்தால் நொடியில் நினைத்தது நடக்கும்.#kalimanthirigam #attraction #facts

