திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் | கடன் தீர்க்கும் விநாயகர் சபை | பெருமாள் வினை தீர்த்த சிவபெருமான்
வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர் _________________________________________ தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பதினாறாவது தலமாகப் போற்றப் படுகிறது. இறைவன்: வாசீஸ்வரர், பாசூர் நாதர். இறைவி: தங்காதலி அம்மன். தல விருட்சம்: மூங்கில். தல தீர்த்தம்: புஷ்கரணி. தேவாரம் பாடியவர்கள்: திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர். சுந்தரர். இருப்பிடம்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஏழு கி.மி. தொலைவிலும், திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் மூன்று கி.மி. தொலைவிலும் இந்த இத்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூர் திருத்தணி சாலையில் கடம்பத்தூர் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இக்கோவில் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் ஐம்பது கி.மி. தொலைவில் இருக்கிறது. அஞ்சல் முகவரி: அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோவில், திருப்பாசூர் கிராமம், கடம்பத்தூர் அஞ்சல், வழி திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், PIN - 631 203 ஆலயப் பூஜை காலம்: தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கிறது. தங்காதலி அம்பாள்: தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவபெருமான். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள், சிவனை வேண்டி தவம் செய்தார். தவத்தில் மகிழ்ந்து மனம் இரங்கிய சிவன், அம்பாளை "தன்காதலியே!" என்று சொல்லி அன்போடு அழைத்து அன்னையை மன்னித்து அருளினாராம். விநாயகர் சபை: விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த பதினாறு செல்வங்களில் பதினோரு செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் பதினோரு விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாகத்தான் இத்திருக்கோயிலில் பதினோரு விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, "விநாயகர் சபை'' என்கின்றனர். திரிபுராந்தகர்களை அழிக்கச் சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் செல்லவே அவரது தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம், தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என கேட்டு விசாரணை செய்ததாகவும் விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறையும் கூறுகின்றனர். . லிங்கத்தில் உள்ள சிறப்புகள் கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் மற்றும் சுயம்பு என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அபிஷேகம் கிடையாது. பூக்கள் மற்றும் வில்வம் கொண்ட அழங்காரம் மட்டுமே செய்விக்கப்படுகிறது. அதுவும் பெரிய மிகவும் கனமான மாலைகள் அணிவிப்பது என்றும் இல்லை. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +919840195478 கோயில் Google map link https://maps.app.goo.gl/KbNLfemjcnPGb... if you want to support us via UPI id 9655896987@ybl Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்

குன்றத்தூர் முருகர் கோவிலின் அற்புதங்கள் AND தல வரலாறு | MURUGAN TEMPLE | #Kundrathur #குன்றத்தூர்

Variyar Swami | சிவாஜி மகராஜ் கொடுத்த செல்வத்தை துக்காராம் மறுத்தது ஏன்? | கர்மாவை மாற்ற முடியுமா?

கர்நாடக மலைக்கோட்டை தமிழர்கள்! Karnataka hill fort Tamils | 900 ஆண்டு அதிசயம்

கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் | சுயம்பு பஞ்சலோக நடராஜர் | Konerirajapuram Nataraja Temple History

ராகுகேது பரிகாரத்தலம்

பாக்யராஜ் மரணத்தின் உண்மைகளை உடைத்த குடும்ப மருத்துவர் : Dr Chockalingam About K. Bhagyaraj

🚫10 இடங்களுக்கு ஒருபோதும் செல்லாதீர் ⛔️ | Vivekanada Niti: Rules for Success

“பிறப்பால் சீனர்கள் ஆனால் தமிழ்தான் எங்கள் அடையாளம்!“❤️Singapore's Tamil-Speaking Chinese | Gobinath

CM Vijay எடுத்த அஸ்திரம்! CM Vijay Masterstroke | Arun IPS Appointed DVAC Chief | TVK vs DMK | SKA

சாமியின் உத்தரவு எப்படி கிடைக்கிறது ?? | Vilakkukadai | RLHandicrafts

முடக்கு தோஷத்தை போக்கும் பாதாள சிவன் கோவில் | Astrologer Subam MariMuthu | #பரிகாரம் #spirituality

Krupananda Variyar | அப்பர் 'எந்நாளும் இன்பமே' என்று பாடியதன் பொருள் இதுதான் | Vaadhavooran Ayya

திருப்புறம்பியம் சாட்சி நாதர் கோயில் தேன் உறிஞ்சும் விநாயகர் திக்குவாய் நீக்கும் அம்மன் அபிஷேக தேன்

சிறையில் நோயால் அவதிப்படும் ராஜபக்சவின் மகன்! | விளையாட்டில் நாமல் கெட்டிக்காரர் | Naattu Nadappu

ராஜராஜ சோழனே பார்த்து மிரண்ட கோவில் | கைலாசநாதர் | Kanchi Kailasanathar Temple | Tamil Navigation

விடைபெற்றார் பாக்யராஜ் | உச்சக்கட்ட அதிர்ச்சி | திடீர் உடல்நலக்குறைவு ஏன்? | Director Bhagyaraj RIP

1000 விதமான பிரச்சினையை, கஷ்டத்தை நீக்கும் நரசிம்ம மந்திர ஸ்துதி

Thirupachur Shivan Temple | Sri Vaaseeswarar | திருப்பாச்சூர் வாசீஸ்வரர் ஆலயம் | Vinayagar sabai

🙏🏻திருவாலங்காடு தரிசனம்🙏🏻 இரகசியங்கள் | வரலாறு | Route Guide| Thiruvalangadu Temple History in Tamil

