கீழையூர் காத்தாயி கவசம்! காக்க! காக்க! | பக்தி பாடல்கள் | #Kaathaayi #Kavasam #bhakthi #songs #Nagai
கீழையூர் காத்தாயி கவசம் ✒️ இயற்றியவர் முனைவர். தில்லை. சிவநேசன் அவர்கள் 📌துதிக்கும் கரங்கள் வைத்தாய் எமை போற்றி காக்க தும்பிக்கை யானை முகத்தோனை ஈன்றவளே எமைக் காக்க! காக்க! 📌மங்கள முகம் ஏந்தி மனதில் குடிகொண்ட வள்ளி மணாளனுக்கு உருகொடுத்தவளே எ(ம்)மை காக்க! காக்க! (1) 📌சூரிய சந்திரனாய் அண்டம் பிண்டமானாய் வான்மீகிக் காற்றாய் வளம் கொழிக்கும் மழை நீராய் புறங்காக்கும் பூமியாய் வந்து எ(ம்)மை காக்க! காக்க! (2) 📌பிரம்ம முகூர்த்தம் பேரின்பம் தந்து வளம் செழிக்க வந்த கீழையூர் காத்தாயியே காக்கும் தெய்வமே இளந்தென்றலாய் வந்து வானவரும் தேவரும் வட்டமிடும் நிலவொளியாய் வந்து எ(ம்)மை காக்க! காக்க! (3) 📌வாக்கும் தந்து நல்ல வரமும் தந்து நோக்கும் பார்வையிலே நோன்பிருந்த கீழையூர் காத்தாயி தேவியே எ(ம்)மை காக்க! காக்க! (4) 📌இட்டது கட்டளை விட்டது துயரும் பட்டது உன் பாதம் சட்டென பிடித்தேன் சடுதியில் வந்து கருணையெனும் அன்பிட்டு காத்தாயி தேவியே எ(ம்)மை காக்க! காக்க! (5) 📌கோடி ஜீவன் உயிர் தந்து தந்த ஜீவனுக்கு உணவு தந்து மங்கள முகத்தில் மாங்கல்ய ரூபத்தில் மண்ணில் மறு உயிராய் வந்தவளே எ(ம்)மை காக்க! காக்க! (6) 📌வறண்ட பூமியும் புயல்காற்றும் பூகம்பமும் நாவறட்சியும் கொடுஞ்சொல் வாழ்வும் இப்புவியில் வாராமல் கீழையூர் காத்தாயி தேவியே எ(ம்)மை காக்க! காக்க! (7) 📌உச்சியினிலே உயர்ந்தவளே பிச்சைக்கு பெருமாட்டியே தஞ்சமென்று உன்பாதம் அடைந்திட்டேன் எ(ம்)மை காக்க! காக்க! (8) 📌அன்பெனும் நெஞ்சினில் அடைக்கலம் கேட்டிட்டேன் அல்லும் பகலும் உனை அண்டி வந்திட்டேன் தொல்லை இல்லா வாழ்வு தந்து காத்தாயி அம்மனே எ(ம்)மை காக்க! காக்க! (9) 📌முப்பிறவி பாவந்தனையும் முன்னோர் செய்து வைத்த நெடுந்துயர பாவத்தையும் கடுஞ்சொல் வார்த்தையும் காரிருள் வேள்வியில் கலைந்திட வேண்டியும் எ(ம்)மை காக்க! காக்க! (10) 📌நவக் கிரகங்களும் தீய சக்திகளும் ஆட்டிவைக்கும் ஆடற்பட்ட வாழ்க்கையில் இருந்து காத்தாயி அம்மனே கேடுகெட்ட சொற்களைக் கேளாமல் எ(ம்)மை காக்க! காக்க! (11) 📌மாயவாழ்க்கையில் மனமது அலைபாய ஆசை எனும் ஐம்புலன்களை அடக்கி இல்வாழ்க்கையை எளிதாக்கி தந்து காத்தாயியே எ(ம்)மை காக்க! காக்க! (12) 📌உடல்பிணி ஊழ்வினை அகன்று ஒளிந்துகொண்ட கடமையை இழந்த மதியினை சூழ விதியென கதி நின்றோம் எ(ம்)மை காக்க! காக்க! (13) 📌அண்ட சரா சரங்கள் பித்ரு தோஷங்கள் பெருந்துயர் பாவங்கள் ஆயுளை வளர்த்து அன்பைப் பெருக்கி கீழையூர் காத்தாயியே எ(ம்)மை காக்க! காக்க! (14) 📌நெஞ்சகமும் நெடுந்துன்ப கல்வியும் நேராமற் துயரமும் நெஞ்சகத்து வைத்தவளே கீழையூர் தன்னில் வாழும் காத்தாயி அம்மனே எ(ம்)மை காக்க! காக்க! (15) 📌பில்லி சூனியம் பெரும்பகை அகற்றி பிள்ளைப் பேறு பெருந்துயரம் கொள்ளா வினை வராமல் எ(ம்)மை காக்க! காக்க! (16) 📌மண்டையில் பித்தநீர் மடிசூழ்வாழ மகிமை கொள் காத்தாயியே மானிட வெண்முடி குஷ்டம் தீராப்பிணி வராமல் எ(ம்)மை காக்க! காக்க! (17) 📌கண்களை காத்தாயி காக்க கடன்சொல் வராமல் காக்க தீராத துயரம் நீங்கிட நெஞ்சகத்துள் வந்த காத்தாயி அம்மையே நின் பாதம் பணிந்தோம் எ(ம்)மை காக்க! காக்க! (18) 📌இளம் மார்பு செங்குருதி மேல்கூட்டு விலா எலும்பு தோல் கொண்டு மறைக்கும் மேனியை துயரம் வராமல் காத்தாயி அம்மனே எ(ம்)மை காக்க! காக்க! (19) 📌கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் நெஞ்சில் குடிகொண்ட வீரமும் தன்னகத்தே தாங்கி நிற்கும் காத்தாயியே எ(ம்)மை காக்க! காக்க! (20) 📌தொப்புள் கொடி சூழ மந்தவினை மடிய வேண்டி வினையகற்ற விந்துவாக வேண்டும் வரம் அருள் தந்து காத்தாயி அம்மனே எ(ம்)மை காக்க! காக்க! (21) 📌பிறவி தோஷம் பில்லி தோஷம் வராமல் நவாம்சம் நவதானியம் நற்பொருள் நழுவாமல் அருள் தந்து அன்னை காத்தாயியே எ(ம்)மை காக்க! காக்க! (22) 📌மங்களத்தின் ஜோதியாய் மந்திரத்தின் ஒளியாய் சங்கு தீர்த்தமாய் சடுதியில் வந்து காத்தாயியே துயரம் விரட்டி எ(ம்)மை காக்க! காக்க! (23) 📌அன்பும் கருணையும் அகலாத நெஞ்சமும் போற்றுகின்ற நல் உள்ளமும் கைகொடுத்த மங்கையும் கற்பினில் ஈன்ற கருவும் சடுதியில் நிற்கும் நட்பும் விடாமல் கீழையூர் தன்னில் அமர்ந்து அருள்பாலிக்கும் காத்தாயி அம்மனே எ(ம்)மை காக்க! காக்க! (24) 📌நெஞ்சில் அகலாத் துயரமும் நெடுந்துயரப் பசியும் காணாத காட்சியும் சேராத தீவினையும் வராமல் காத்தாயி தேவியே எ(ம்)மை காக்க! காக்க! (25) 📌கானப் பறவைகளும் கண்டெழுந்த உயிரினங்களும் விண்ணைப் பிளக்கும் கஜகோஷமும் மயில் அழகும் மலர் சொரியும் கானமும் மங்களமாய் பொங்க காத்தாயி அம்மனே எ(ம்)மை காக்க! காக்க! (26) 📌பஞ்சபூதத்தை அடக்கியாளும் காத்தாயி அம்மனே பாரினில் நாகை மாவட்டந்தன்னில் கீழையூர் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வமே கருணைக் கடலே காத்தாயி அம்மனே காக்கும் தெய்வமே கனிவோடு உன்னை பணிவோர்க்கு சர்வ அம்சமும் சர்வ ஐஸ்வர்யமும் தந்தருளி எ(ம்)மை காக்க! காக்க! (27)

காத்தாயி அம்மன் 108 போற்றி பாடல்கள் | Amman Devotional Songs Tamil | Bhakthi Paadalgal | Tamil Song

Andal Suprabatham | Margazhi Special Devotional Song | ஆண்டாள் சுப்ரபாதம் | Full Song

Shanmuga Kavasam | சண்முக கவசம்

காத்தாயிடம் கையேந்துங்கள்,அவள் “இல்லை” என்று சொல்லுவதில்லை

கேட்டவுடன் மனம் உருகும் துர்கா அம்மன் சுப்ரபாதம் | காலை வழிபாட்டின் அருள்

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

*'கன்னூஞ்சல் ஆடிடுவாள் காத்தாயி...'*| கீழையூர் காத்தாயி அம்மன் கோவில் | #ammantemple

கந்த சஷ்டி கவசம் | Skanda Sashti Kavasam | முருகப்பெருமானின் அருளையும் பாதுகாப்பாயும் தரும்.

🎼போகலாம் போகலாம் 🌺கீழையூர் போகலாம் 🌺பார்க்கலாம் பார்க்கலாம் கத்தாயியை சரணம்🎉🎼

Vel Maaral || வேல் மாறல் - Saradha Raaghav

சாந்த சொரூபி காத்தாயி | Kaathayi Amman Tamil Songs

காத்தாயி அம்மன் வருகிறாள் | 📯 டாக்டர் பிரீத்தி ஜீன் | Bhakthi songsArulmigu Kaathaayi Amman Temple

காத்தாயி அம்மன் அஷ்டகம் | Kaathaayi Amman Tamil Bhakthi songs | Devotional Songs | Amman ashtakam

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | Mahanadhi Shobana

எங்கள் அன்னை காத்தாயி

KAATHARULUM THAAYE KAATHAAYE AMMA | Lyrics - Music - Direction : THAMIZHSIRPI | MOON AUDIO |

செல்வம் தரும் மஹாலக்ஷ்மி பாடல் | Thiralum Selvam Tharum Mahalakshmi | Magizhan TV

காத்தாயி மனசு வெச்சா மலர்ச்சி வரும் | அம்மன் பக்தி பாடல் | 📝📓சு. கணேஷ்குமார் | இசைப்பாடகி ஸ்வேதா

kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)

