மணிமேகலை/விழா வறை காதை/இந்திர விழா
இந்திர விழா நாவலந் தீவிலுள்ள மாந்தர் எல்லாம் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார். விழா வரலாறு பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது புகார் நகரமாகும். ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய மக்கள் பலரும் அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த நகரின் புகழ் மேலும் சிறப்புற வேண்டும் என்று அருந்தவ முனிவர் அகத்தியர் நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது புகார் நகரில் இருந்து ஆட்சி செய்த மன்னன் தூங்கு எயில்கள் எனப்படும் தொங்கும் கோட்டைகளை அழித்தவனாகிய தொடித்தோட் செம்பியன் ஆவான். அவனிடம் இக்கருத்தைத் தெரிவிக்க, உடனே இசைவு அளித்து, விழா சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான். செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும் புகார் நகரத்திலே வந்து தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள் இத்தகு உயர்வு மிக்க இந்த இந்திர விழாவினைக் கொண்டாடுதலை ஒரு போதும் தவறவிட மாட்டார்கள். காவிரிப் பூம்பட்டினத்திற்குப் பூம்புகார் என்ற மற்றொரு பெயரும் உண்டு. புகார் நகரம் இன்று பூம்புகார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. விழாவறை காதைப் பகுதியால் இந்திர விழா தொடங்கிய முறையையும், சோழ மன்னனின் அருஞ் செயலும் ஆற்றலும் வியந்து போற்றப்படும் செய்தியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்திர விழாவினை இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இப்பகுதியால் மக்கள், வீதிகள், பொது இடங்கள், கோயில்கள் முதலான இடங்களில் அழகுபடுத்திய விதம் பற்றிய செய்தியினை அறிந்து கொள்ள முடிகிறது. இப்பகுதி இந்திரனுக்கு விழா எடுக்கும் நாட்களில், அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்கம் மரபாய் இருந்தமையை உணர்த்துகின்றது. பட்டி மண்டபம் ஏறுமின் குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும், புண்ணிய நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்; பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு அகன்று செல்லுங்கள்; வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்; இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் இருபத்தெட்டு நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள். இவ்வாறு செய்தி வள்ளுவன் முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தான். ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்; (60-63) இப்பகுதியில், விழா நாட்களில் செய்ய வேண்டியன இவை, செய்ய வேண்டாதன இவை என்று வகைப்படுத்திச் சாத்தனார் கூறியுள்ளார். வாழ்த்துக் கூறுதல் பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் வாழ்த்தினான். இவ்வாறெல்லாம் புகார் நகரில் உள்ள பட்டினப் பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய செய்தியினை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தான். பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க!என வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்(70-72) இப்பகுதியின் வாயிலாக, முரசறையும் செய்தி வள்ளுவன், தொடக்கத்திலும் முடிவிலும் நாடு, அரசன், மக்கள் முதலியோரை வாழ்த்துதல் மரபு என்ற செய்தியினை அறிய முடிகிறது. #PGTRBSYLLABUS#மணிமேகலை#இந்திரவிழாவறை காதை

துயிலெழுப்பிய காதை, மணிமேகலை

மணிமேகலை//மலர்வனம் புக்க காதை/மணிமேகலை பூப்பறிக்கச் சென்ற

மறைந்திருக்கும் ஜோதிட ரகசியம்! | Astro Arun Ji | One 2 One Bakthi #arunji #vedicastrology

சிக்னஸ் இண்டஸ்ட்ரி-2 | மக்களை ஏமாற்றும் மருத்துவர்கள் | Dr B M HEGDE Speech | DIABETES controlled

வில்லிபாரதம் Part - I

மணிமேகலை - அறவணர் தொழுத காதை #ug third Tamil

பரிதாப நிலையில் வாழும் நிலக்கோட்டை ஜமினி 27 ஆம் வாரிசு

சனி மகா பிரதோஷ பாடல் || இடரினும் தளரினும் கடன் நீக்கும் பாடல் || sani Maha Pradosha Songs

முதல்வரானதும் அந்த 3 நடிகைகளையும் சுவாரஸ்யமாக பழிவாங்கிய எம்ஜிஆர்| CINEMA FOOD

உக்ரைனின் ஆயுத கிடங்குகள் அனல் மின் நிலையங்களை 5 மாகாணங்களில் அழித்த ரஷ்யா | Russia Strikes Back.

திருத்தொண்டர் புராணம் | பகுதி - 01 | பெரியபுராணம் | சேக்கிழார் | So So Meenakshi Sundaram Speech |

Defeat Against Ecuador: Reif’s Reckoning with the DFB Stars | Reif ist Live

சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை

பிரதோஷம் இன்று கேட்க வேண்டிய கைலை நாதனே ஈஸ்வரனே சிவன் பாடல் | Sivan Song Tamil | Arbudhaa Bakthi

மணிமேகலை கதைச் சுருக்கம்| காதை 1 - 15 | Manimegalai short story | ✍️🔥

சீதை பூமிக்குள் சென்ற இடம் | லவ குசா பிறந்த இடம் | Avani Betta | Indian Traveller CJ.

வில்லிபாரதம்/கிருஷ்ணன் தூதுச் சருக்கம்/krishnan thoothu/tamilganesh@தமிழ்கணேஷ்

ஒன்பதாம் வகுப்பு மணிமேகலை விழாவறை காதை

பூம்புகார் கடலில் மூழ்கியது ஏன்? | இந்திர விழா வரலாறு | Indira Vizha History in Tamil

