கொட்டிக் கொடுக்கும் திட்டை குரு பகவான்| THITTAI GURU TEMPLE|அதிசயம் நிகழ்த்தும் சிவபெருமான்|MIRACLE

Today we are going to visit a temple dedicated to Guru Bhagwan. It's called thenkudi Arulmiku vashishteshwarar temple near Thanjavur. Indus Temple miracle happens every 24 minutes. What's the full video about the miracle தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திட்டை திருத்தலம் குரு பகவானுக்கு உகந்த தலமாகும். குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுள் திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும். இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். வசிஷ்ட முனிவர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து தவம் இருந்து இறைவனை வழிபட்டுள்ளார். ஆதலால் இந்த தலம் வசிஷ்டாஸ்ரமம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை தென்குடித்திட்டை என்றும் அழைப்பர்.பஞ்சலிங்க தலம் : திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. மங்களம் தரும் மங்களாம்பிகை : மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். பவுர்ணமி தினத்தன்று எமன் மங்களாவின், கணவனின் உயிரை பறிக்க நெருங்கினான். இதனை அறிந்து அலறித் துடித்த மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக’ என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். எமன் மறைந்தான். பின்னர் மங்களா நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இறைவி, இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்மன் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.குரு பகவான் : நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. Editor Udhaya :   / udhayakumar_ponnusamy   #tamil #astrology #hindudeity #hindugod #sivan #lordshiva #hindushrine #amman #thittai #guru #gurubhagavan #navagraham #navgraha #navagrahatemple #kumbakonam #thanjavur #temples #templesofindia

🔴விசேஷ பலன் தரும் பிரசாதம் | திட்டை ராஜகுரு பூஜை  | Astrologer Shelvi | THITTAI GURU BHAGAVAN TEMPLE
▶︎

🔴விசேஷ பலன் தரும் பிரசாதம் | திட்டை ராஜகுரு பூஜை | Astrologer Shelvi | THITTAI GURU BHAGAVAN TEMPLE

தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் - தஞ்சாவூர் ஓர் அருமையான குருபகவான் ஸ்தலம்!  #temple #thanjavur
▶︎

தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் - தஞ்சாவூர் ஓர் அருமையான குருபகவான் ஸ்தலம்! #temple #thanjavur

You can't fully understand Agathiyar without knowing this story 🔥 Agathiyar Full Story in Tamil 🔥🔥🔥
▶︎

You can't fully understand Agathiyar without knowing this story 🔥 Agathiyar Full Story in Tamil 🔥🔥🔥

Ancient Baneshwar Shiva Temple Darshan
▶︎

Ancient Baneshwar Shiva Temple Darshan

குரு பகவான் என்று நினைத்து நாம் வணங்கும் குரு யார்? Who is Guru Bagavan? & Who is Dakshinamurthy?
▶︎

குரு பகவான் என்று நினைத்து நாம் வணங்கும் குரு யார்? Who is Guru Bagavan? & Who is Dakshinamurthy?

திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் (Sivalokanathar Temple)
▶︎

திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் (Sivalokanathar Temple)

தஞ்சாவூர் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலம் ஒரு பார்வை | Thittai Guru Temple Vlog | Abhishek Vlogs
▶︎

தஞ்சாவூர் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலம் ஒரு பார்வை | Thittai Guru Temple Vlog | Abhishek Vlogs

கடகம் மறைக்கப்பட்ட கடகத்தின் உண்மை ! | Rasipalan | Kadagam | Kadagarasi | Bakthi | Jothilingam |
▶︎

கடகம் மறைக்கப்பட்ட கடகத்தின் உண்மை ! | Rasipalan | Kadagam | Kadagarasi | Bakthi | Jothilingam |

தஞ்சை கோவில்-தமிழனின் பெருமையா, சாபமா?" | Big temple thanjavur in tamil  #dithoughtstamil
▶︎

தஞ்சை கோவில்-தமிழனின் பெருமையா, சாபமா?" | Big temple thanjavur in tamil #dithoughtstamil

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது திருக்குறள் சொல்லும் உண்மை Ilangai Jayaraj Latest Speech  Sri Lanka
▶︎

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது திருக்குறள் சொல்லும் உண்மை Ilangai Jayaraj Latest Speech Sri Lanka

ஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் தொடரும் அட்டூழியம்!!
▶︎

ஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் தொடரும் அட்டூழியம்!!

Ilayaraja Interview Part 3 |  “இரண்டே 2 கேள்வி தான்... கன்னத்துல பளார் ! | Ramana Maharshi | N18P
▶︎

Ilayaraja Interview Part 3 | “இரண்டே 2 கேள்வி தான்... கன்னத்துல பளார் ! | Ramana Maharshi | N18P

இழந்த செல்வத்தை மீண்டும் பெற | திருக்கொள்ளிக்காடு | பொங்கு சனீஸ்வரர் |  #Pongusani #temple
▶︎

இழந்த செல்வத்தை மீண்டும் பெற | திருக்கொள்ளிக்காடு | பொங்கு சனீஸ்வரர் | #Pongusani #temple

Do you know the difference between Guru Bhagavan and Dakshinamoorthy? Guru Bhagavan and Dakshinam...
▶︎

Do you know the difference between Guru Bhagavan and Dakshinamoorthy? Guru Bhagavan and Dakshinam...

இந்த 2 கோயில்கள் மட்டும் போனால் போதும் – தஞ்சாவூரின் அதிசய சக்தி ஸ்தலங்கள் ஜோதிடர் ஷெல்வி#ramyacms
▶︎

இந்த 2 கோயில்கள் மட்டும் போனால் போதும் – தஞ்சாவூரின் அதிசய சக்தி ஸ்தலங்கள் ஜோதிடர் ஷெல்வி#ramyacms

பெரிய கோவில் சிற்பங்கள் - மறக்கப்பட்ட கதைகள்!😲 Thanjai Periya Kovil Statues | Shiva Stories in Tamil
▶︎

பெரிய கோவில் சிற்பங்கள் - மறக்கப்பட்ட கதைகள்!😲 Thanjai Periya Kovil Statues | Shiva Stories in Tamil

Where is the Sri Vaishnava movement going?
▶︎

Where is the Sri Vaishnava movement going?

உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery
▶︎

உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery

6 TEMPLES IN TAMILNADU EQUAL TO KASHI | Vishwanathar
▶︎

6 TEMPLES IN TAMILNADU EQUAL TO KASHI | Vishwanathar

எல்லா தோஷங்களும் நீங்க ஒரே கோவில் | Jothidar Shelvi | dosha nivarthi temple | Aadhi Thiruvarangam
▶︎

எல்லா தோஷங்களும் நீங்க ஒரே கோவில் | Jothidar Shelvi | dosha nivarthi temple | Aadhi Thiruvarangam