சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01

சுவாமி ஸ்ரீ சங்கிலி பூதத்தாரின் வரலாறு* ஆதிகாலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காக திருப்பாற்கடலை கடையும்போது ஆலகால விஷத்தோடு பாரிஜாத மரம், காமதேனுப் பசு மற்றும் மேலும் பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வந்தன. அப்படி அமிர்தத்தோடு பலதரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்க விசித்திரமான, வீரியமான பலவிதமான பூதகணங்களும், அந்த பூதகணங்களுக்கு எல்லாம் ராஜாவான சுவாமி சங்கிலி பூதத்தார் கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச்சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு பார்த்தாலே பதற வைக்கும் பிரமாண்ட ஆங்கார,ஓங்கார உருவத்தோடும், ஆரவார சப்தத்தோடும் ஆக்ரோஷமாக, பாற்கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் மற்ற முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கி ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். சிவபெருமான் பூதகணங்களையும், பூதகணங்களுக்கெல்லாம் ராஜாவான சங்கிலி பூதத்தாரையும் அமைதிப்படுத்தி, தன்னோட பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு கைலாயத்தில் வைத்துக் கொண்டார். சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்து விட்டு ‘பூலோகப் பயணம் போய் வருகிறேன்’ என்று கூறிச் சென்றார்.அப்படி போன சிவன் திரும்பி வரவேயில்லை. நெடுங்காலமாக பொறுத்திருந்து பார்த்த பார்வதி அன்னை ஆனவர் பூதத்தாரை அழைத்து,‘அமிர்த பாலனே, பூமிக்கு போன உங்கள் தந்தையை வெகுநாட்களாக காணவில்லையே.விபரம் ஏதும் அறிவாயா…' என்று விசாரிக்க, 'இன்னும் சிறிது நாளில் வந்து விடுவார் அன்னையே’ என்று பூதத்தார் பதில் கூறினார். இப்படியாக பல நாள்கள் கழிந்தன. கேட்கும் போதெல்லாம் பூதத்தார் இதே பதிலை சொல்ல பார்வதி அன்னை ஒருநாள் கோபப்பட்டு, 'என்ன செய்வாய், ஏது செய்வாய், என்று நான் அறியேன். நீயே நேராக பூலோகம் சென்று உங்கள் தந்தையை கையோடு அழைத்து வா' என்று உத்திரவிட, மீறமுடியாத பூதத்தாரும் தந்தையைத் தேடி பூலோகம் கிளம்பினார். அப்படி அவர் தேடி வரும்போது தூரத்தில் சிவனும் கைலாயத்துக்கு திரும்பி வருவதை பூதத்தார் பார்த்து விட்டார். ஆனால் பூதத்தார் வருவதை சிவபெருமான் கவனிக்கவில்லை. 'ஆஹா.., நாம் கைலாயம் விட்டு கீழிறங்கி வருவதை அப்பா பார்த்தால் கொடுத்த கைலாயப் பொறுப்பை கவனிக்காமல், ஊர் சுற்றுவதாக தவறாக நினைத்து, கோபப்பட்டு, சத்தம் போடுவாரே.., ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டால் பார்வதி அன்னை ஆணை இட்ட விபரம் சொல்ல வேண்டி வருமே…, நாம் சாபம் வாங்கினாலும் பரவாயில்லை, நம்மால் அன்னை பார்வதி ஏச்சும், பேச்சும் வாங்கக்கூடாது, குடும்பத்தில் குழப்பம் வந்து விடக்கூடாது’ என்றெல்லாம் பலவாறு எண்ணிய பூதத்தார், பாதை ஓரத்தில் கிடந்த பாம்புச்சட்டையில் புகுந்து சிவபெருமான் கண்ணில் படாமல் மறைந்து கொண்டார். ‘தாய் அறியாத சூல் உண்டோ’, ‘தந்தை அறியாத பிள்ளை உண்டோ’ சங்கிலி பூதத்தார் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக பாம்புச்சட்டையில் புகுந்ததை அறிந்த சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை அழைத்து, ‘மகனே, சட்டநாதா கைலாயத்தில் சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். உனக்கு ஆக்கும் வரம், காக்கும் வரம், அழிக்கும் வரமும் தந்தோம். நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென்கைலாயமாம் பொதிகை மலை வந்து எம்மை அடைவாய்.’ என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். Content Writer , Voice Artist & Channel Admin : Sabarikannan.K [email protected] +91 9786711781 ▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time . ▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email ([email protected] ) or leave us a personal message here and we will remove your material right away... Related Searches : l #kuladeivam_histories #kuladeivam_worship #kuladeivavazhipadu #originofkuladeivam #tamilkuladeivangal #historyofkuladeivangal #tamilgod_histories #kuladeiva_varalaru #familydeity_histories

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 02
▶︎

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 02

அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி
▶︎

அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி

61 மாடன்கள் பெயர்? 61 மாடன்கள் உருவான கதை
▶︎

61 மாடன்கள் பெயர்? 61 மாடன்கள் உருவான கதை

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் பொன் பொருளை மீட்டெடுத்த பொற்படியான் காவல் வந்து நின்ற கதை
▶︎

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் பொன் பொருளை மீட்டெடுத்த பொற்படியான் காவல் வந்து நின்ற கதை

Trichy Rettamalai ONDI KARUPPU Story || திருச்சி ரெட்டமலை ஒண்டிக்கருப்பன் கதை
▶︎

Trichy Rettamalai ONDI KARUPPU Story || திருச்சி ரெட்டமலை ஒண்டிக்கருப்பன் கதை

பிரம்மசக்தி சுடலைமாடன் கைலாய பிறப்பு
▶︎

பிரம்மசக்தி சுடலைமாடன் கைலாய பிறப்பு

திருச்செந்தூர் கொடிமரத்தின் காவலுக்கு மாயாண்டி சுடலை மாடன் வந்த கதை
▶︎

திருச்செந்தூர் கொடிமரத்தின் காவலுக்கு மாயாண்டி சுடலை மாடன் வந்த கதை

சங்கிலி பூதத்தார் கதை  | Sangili Boothathar Kathai | Dr.M.சுபா மணி | Dr.M.Subha Mani |
▶︎

சங்கிலி பூதத்தார் கதை | Sangili Boothathar Kathai | Dr.M.சுபா மணி | Dr.M.Subha Mani |

கருப்பனால் உயிர் தப்பிய குடும்பம் 😱🔥| இதாண்டா TWIST-U 🔥☠️| Devils Kitchen | Mr Prabhakaran
▶︎

கருப்பனால் உயிர் தப்பிய குடும்பம் 😱🔥| இதாண்டா TWIST-U 🔥☠️| Devils Kitchen | Mr Prabhakaran

Sooriya Kavasam Tamil ☀️ | Surya Bhagavan Songs Tamil | Sunday Special Bhakti Songs
▶︎

Sooriya Kavasam Tamil ☀️ | Surya Bhagavan Songs Tamil | Sunday Special Bhakti Songs

You can't fully understand Agathiyar without knowing this story 🔥 Agathiyar Full Story in Tamil 🔥🔥🔥
▶︎

You can't fully understand Agathiyar without knowing this story 🔥 Agathiyar Full Story in Tamil 🔥🔥🔥

திருநெல்வேலி மாவட்டம் || ஊர்காடு ஜமீன் || மாயாண்டி சுடலை மாடன் || காவல் வந்த கதை
▶︎

திருநெல்வேலி மாவட்டம் || ஊர்காடு ஜமீன் || மாயாண்டி சுடலை மாடன் || காவல் வந்த கதை

தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 02
▶︎

தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 02

21 வாதைகள் சிவனிடம் வரம் வாங்கிய வரலாறு | ஏழு பிறவிகள் எடுத்து பழி தீர்க்க வந்த ஆங்காரமான குலசாமிகள்
▶︎

21 வாதைகள் சிவனிடம் வரம் வாங்கிய வரலாறு | ஏழு பிறவிகள் எடுத்து பழி தீர்க்க வந்த ஆங்காரமான குலசாமிகள்

சங்கிலி பூதத்தார் கதை மகுடம் Sangili Boothathar Story #trending #tamil #kodai #devotionalsongs #god
▶︎

சங்கிலி பூதத்தார் கதை மகுடம் Sangili Boothathar Story #trending #tamil #kodai #devotionalsongs #god

மருது பாண்டியர்கள்: சிவகங்கை சிங்கங்களின் முழு வரலாறு | Maruthu Pandiyar History | 100K Views
▶︎

மருது பாண்டியர்கள்: சிவகங்கை சிங்கங்களின் முழு வரலாறு | Maruthu Pandiyar History | 100K Views

😱மர்மங்கள் நிறைந்த பாபநாசம் "சொரிமுத்து அய்யனார் கோவில்!"🔥| Sorimuthu Ayyanar Temple - Papanasam
▶︎

😱மர்மங்கள் நிறைந்த பாபநாசம் "சொரிமுத்து அய்யனார் கோவில்!"🔥| Sorimuthu Ayyanar Temple - Papanasam

மஞ்சமலையாண்டி பூமியில் || அடங்காத குதிரை அடக்கி எல்லை அளந்த கதை
▶︎

மஞ்சமலையாண்டி பூமியில் || அடங்காத குதிரை அடக்கி எல்லை அளந்த கதை

புண்ணியம் தரும் பாகவத சாரம் | Tamil Upanyasam |  Bhagavata Saram | Sri Dushyanth Sridhar
▶︎

புண்ணியம் தரும் பாகவத சாரம் | Tamil Upanyasam | Bhagavata Saram | Sri Dushyanth Sridhar

ஸ்ரீசங்கிலி பூதத்தார் வில்லுப்பாட்டு ||sri sangili poothathar villu fullstory  (Part-2)||ayikudi
▶︎

ஸ்ரீசங்கிலி பூதத்தார் வில்லுப்பாட்டு ||sri sangili poothathar villu fullstory (Part-2)||ayikudi