அழகு நிலா வானத்திலே - Alagu Nila Vaanathile - Sri Lankan Tamil Song of 70s - 80s
#எம்மவர்இசைமழை 70- 80களில் எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - அழகு நிலா வானத்திலே NO COPYRIGHT INFRINGEMENT INTENDED - THIS IS PURELY FOR ENTERTAINMENT & DOCUMENTING PURPOSES பாடல் - அழகு நிலா வானத்திலே - 1973ம் ஆண்டு பாடியவர் - S விவேகானந்தன் இசையமைப்பு - R முத்துசாமி அல்வாயூர் S. விவேகானந்தன் கவிஞர் , பாடகர், நடிகர், நெறியாளர் என பல்முகங்கள் கொண்ட ஒரு கலைஞர் மு. செ. விவேகானத்தன். யாழ்ப்பாணம், அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா அவர்களின் மூத்த புதல்வன். இவர் கலைவாழ்வு தன் பத்தாவது வயதில் நாடகமேடையுடன் ஆரம்பித்தது. இளம் வயதிலேயே தந்தையார் இயற்றிய பாடல்களை மெட்டுகட்டி பாடிவந்தார். தென்னிந்திய அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு மாணவராக இசைக்கற்றுக் கொண்டு இருந்தபோது அன்புத்தந்தையார் இவ்வுலகை விட்டு நீங்க, கல்வியை தொடரமுடியாமல் நாடுதிரும்பினார். அண்ணாமலைக் கழகம் தந்திருக்கவேண்டிய இன்னொரு சிறந்த “சங்கீத வித்துவானை” இலங்கை மண் இழந்துபோனதை இப்பாடலைக் கேட்கும்போது நாம் உணர்கிறோம். இலங்கை திரும்பியவர் கூத்து மற்றும் நாடகக்கலைகளில் தடம் பதித்தார். தந்தையார் நினைவாக “அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம்” எனும் பெயரில் நாடகமன்றம் ஆரம்பித்து நாடகங்களை மேடையேற்றினார். இவர் நாடகமேடை பங்களிப்புகளை இவ்விடத்தில் பதிவது பொருத்தமற்றது. இது தனியாக இக்கலை வல்லுனர்களால் ஆராய்ந்து எழுதப்படவேண்டிய ஒரு விடயம். எனினும் இவர் நடிகமணி வைரமுத்துவுடன் கூத்து மேடையில் பங்கேற்றதை இங்கு குறிப்பிடவேண்டும். தொடர்ந்து மேடை நாடகம், இசைக்கச்சேரி என்று கலைப்பணி செய்தார். இ.ஒ.கூ வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருமுறைப்பாடல்கள், பாமாலை, நாட்டுப் பாடல்கள், நாடகமேடைப்பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். “ஈழத்துப் பாடல்கள்” நிகழ்ச்சியில் மெல்லிசப் பாடகராக களமிறங்கினார். ஆர். முத்துசாமியின் இசையில் “அழகுநிலா வானத்திலே பவனிவரும் நேரத்திலே” என்ற மெல்லிசைப் பாடலைப் பாடினார். கேட்ட முதல் முறையே சில பாடல்கள் மனதை சுண்டி இழுக்கும். இப்பாடல் அவ்வரிசையில் விவேகானந்தனை ஒரு சிறப்பான மெல்லிசைப் பாடகராக இனங்காட்டியது. இவர் நடித்து நெறியாண்ட காத்தவராயன் சிந்துநடைக் கூத்து இ.ஓ.கூ லும் ரூபவாஹினியிலும் ஒலி ஒளி நிகழ்வுகளாக 1987ல் பிரபலமானது. இப்பாடல் இயற்றியவர் யார் என்ற தகவல் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவர்கள் பகிர்ந்தால் நன்றியுடைவராவோம். அழகு நிலா வானத்திலே பவனி வரும் நேரத்திலே உலவி வரும் உன் நினவு வாடும் எந்தன் இதயத்திலே பழகி வந்த உறவிலே பிரிவு தந்த துயரிலே அழுது வடியும் எனது விழிகள் நாளும் பொழுதும் தன்னிலே நாளும் நாளும் வாழ்விலே வேறு வேறு கோலங்கள் காலை மலரும் செம்மலர் மாலை மலரும் மல்லிகை பருவம் போன பாதையில் பயணம் சென்ற இருவரில் ஒருவன் மட்டும் தனித்துவிட்டான் காதல் தந்த தோல்வியில் இதயம் என்ற ஏட்டிலே எழுதி வைத்த பாட்டிலே இழந்து போன எந்தன் வாழ்வை சொல்லி வைத்தேன் முடிவினிலே

வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே - VaadaikKaatru Veesuginra KaalathileSri Lankan Tamil Film Song

''200ரூபாவுக்காக சிவகுமாரனை அலயவிட்டவங்கள்,பிரபாகரனும் எங்களோட உண்மை இதுதான்''|@jaffnagallery|17.06

சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் - Sollathaan Naanum - Sri Lankan Tamil Song of 70s - 90s

kungumam piranthathu marathila

Tribute to TULF leaders Mr V Dharmalingam & Mr M Alalasundaram in Chennai 1985.

🥰Jayaram Speech Crazy Mohan Book Launch

கண்ணதாசன் என்றாலே வியப்பு தான் 💛 Kavignar Yugabharathi decodes Kannadasan songs

கருணாவால் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்ட பெண் தளபதிகள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் | Karuna

Thendralukku Endrum Vayathu Pathinare Andro

Sivaji, Padmini love song | அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல பாடல் | Azhagu Dheivam mela song .

இன்பம் பொங்கும் பொங்கல் - Inbam Pongum Pongal - Sri Lankan Tamil Songs of 70 - 80s

வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே

ரெலோ தலைவர் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டாரா ? புலிகளின் தலைவரும் அவ்வாறே கொல்லப்பட்டாரா ?

Mudhalvan _ Movie Scenes _ Interview Scene

Sri lankan Tamil Film Song | Ilavenile | V Muththalage | Sujatha | Komaligal |Sruthiy Prabha

Ilamai Nattiya Salai Song TMS, S.ஜானகி பாடிய இளமை நாட்டிய சாலை.. தெம்மாங்கு பாடல்

Unnidam Mayangugiren | உன்னிடம் மயங்குகிறேன்| Sindhu Bhairavi Songs | K.J.yesudas | Ilaiyaraja Songs

TAMIL OLD SONG--Ullathil nooru ninaithen--MAPPILLAI AZHAIPPU (1972)

M.P.Paramesh Unakku Theriuma உனக்கு தெரியுமா Eelathu Mellissai Mannar, 1st. tamil record of srilanka

