KOLARU PATHIGAM THEVARAM | கோளறு பதிகம் | தேவாரம் - 6 | Thevaram
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்: 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! 3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே. 4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. 11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. #கோளறுபதிகம் #திருஞானசம்பந்தர் Free Motion Graphics Video used: • 4k Golden Dust Animation Background video ... YouTube Channel: / mg1010 A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram: / __keerthana_vengatesan Follow us on Facebook Page: / keerthanavengatesan1

If you need calm, you'll feel this on your skin (comfort for restless minds)

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் !

தோடுடைய செவியன் | தேவாரம் - 4 | Thodudaiya Seviyan Thevaram | திருஞான சம்பந்தர் | Sambandar

பொன்னார் மேனியனே | தேவாரம் -5 | Ponnar Meniyane | சுந்தரர் | Thevaram| Sundarar

41 நாட்கள்கோளறு பதிகம் வாசித்தால் இத்தனை பலன்கள் கிடைக்கும்Powerful Kolaru Pathigam Navagraha Mantra

தீரவே தீராது என்று நினைத்த பிரச்சினை, கஷ்டம் கூட தீர கட்டாயம் 1 முறை கேளுங்கள்

4.1 - கூற்றாயினவாறு - திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்

ஆத்மாவை அழிக்கும் காமத்தின் வலை! திருவாசகம் மறைத்த ரகசியம் | Thiruvasagam Tamil

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

மந்திரமாவது நீறு | Manthiramavathu neeru | Thevaram | திருஞானசம்பந்தர்

மீளா அடிமை | Meela Adimai | சுந்தரர் தேவாரம் | Sundarar Thevaram | Cures Eye Problems.

KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

பொன்செய்த மேனியினீர் | சுந்தரமூர்த்தி தேவாரம் | ஏழாம்-திருமுறை | Pon Seidha Meniyinir | Thevaram

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் | தேவாரம் -18 | Thiruvum Meiporulum | சுந்தரர் | Thevaram

கோளறு மகிமை | வாசுகி மனோகரன் | மதுரை தமிழ்ச்சங்கம் |

மாதர்ப் பிறைக்கண்ணி யானை | Madar Pirai Kanni Yanai | தேவாரம் -9| Thevaram song in Tamil

Sri Venkateswara Suprabhatam | M.S. Subbulakshmi | Original Archival Remaster | Rigveda Media

Sivapuranam | சிவபுராணம் #spbalasubramaniyam sivansong #spbsivapuranam #namasivaya vazhga #sivan

🔴வெள்ளிக்கிழமை கேட்டாலே செல்வம் பெருகும் கந்த குரு கவசம் கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த முருகன்

