மாணிக்கவாசகர் ஜீவசமாதி | ஆத்மநாத சுவாமி | Athmanatha swamy | Manickavasagar | பசவராஜ் 9443112098
சமயக்குரவர் நால்வரில் ஒருவர் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான். அவர் பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்துவிட்டு, இறுதியில் தில்லையம்பதிக்கு வந்தடைந்தார். ஸ்ரீ மாணிக்கவாசகர் தில்லையில் தங்கியிருந்த பர்ணசாலைக்கு அந்தணர் உருவில் எழுந்தருளினார் ஸ்ரீநடராஜப் பெருமான். ‘தாங்கள் பாடிய பாடல்கள் அந்தந்த தலங் களில்தான் பிரதி எடுக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, உங்களிடம் பிரதி எதுவும் இல்லை எனக் கேள்விப்பட்டேன். எனவே அந்தப் பாடல்களை எல்லாம் தாங்கள் மறுபடியும் பாடினால், அவற்றை நான் அழகாக ஓலைச்சுவடியில் எழுதிக் கொடுக்கிறேன்...’ என்றார் அந்தணர் உருவிலிருந்த இறைவன்! வந்திருப்பது இறையென்றறியாத ஸ்ரீ மாணிக்கவாசகர், தான் இயற்றிய திருவாசகப் பதிகங்களை ஒவ்வொன்றாகப் பாடப் பாட, அம்பலத்து அரசன் அவையனைத்தையும் ஓலைச்சுவடியில் படியெடுத்துத் தந் தருளினார். ஸ்ரீ மாணிக்கவாசகர் பாடிய பதிகங்கள் அனைத்தையும் தன் கைப்பட எழுதிய இறைவன், ‘மாணிக்கவாசகர் சொற்படி அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது...’ எனத் திருச்சாத்திட்டு (கையொப்பம்) தில்லை சிற்றம்பலத்தின் வாயிற்படியில் (பஞ்சாட்சரப் படி) வைத்தருளினார். வந்தவர் இறையென்பதை அறிந்த மாணிக்கவாசகர், இறைவன் திருவருளை எண்ணி எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ந்தார். தில்லை திருப்பெருந்துறை திருக்கோயில்! பொதுவாக சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். அதிலும் சில சிவத்தலங்கள், குறிப்பாக ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் போன்றவை மேற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால், தில்லை திருப்பெருந்துறை திருக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தல கருவறையில் ஆவுடையார் மட்டுமே திருக்காட்சி தருகிறது. சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத் திருமேனி மூன்று பகுதிகளாக அமைந்திருக்கும். மேலே பாணம் பகுதி, அதனடியில் சக்தி பீடம், அதன்கீழ் ஒரு பீடம் அமைந்திருக்கும். இத்தலத்தில் சக்தி பீடத்தில் இறைவன் அருவமாக வீற்றிருப்பதால், இத்தல இறைவன் ஸ்ரீஆத்மநாதர் எனவும், ஸ்ரீ ஆத்மநாத ஆவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ஸ்ரீயோகாம்பிகை. இத்தல இறைவி அரூபமாக விளங்குவதால், அம்பாள் கருவறையில் யோகபீடமும், அதன்மேல் அம்பாள் திருப்பாதங்களும் மட்டுமே உள்ளன. அப்பீடத் தின்மேல் ஸ்ரீ யோகாம்பிகை சிவயோகம் புரிந்து ஞானத்தை வழங்குகிறாள். பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆனி மகம் (ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை), மார்கழி திருவாதிரை, ஆவணி மூலம் போன்ற அனைத்து விசேஷ நாட்களும் திருக்கோயிலில் மிகவும் விமரிசையாகவும், பக்தியுடனும், சிறப்பாகவும் கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் வேண்டுவதை உடனடியாக நிறைவேற்றித் தரும் பெருமான்! நம் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய திருத்தலம் தில்லை திருப்பெருந்துறை திருத்தலம்! குறிப்பு : சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு வடக்கே, தில்லை ஸ்ரீ காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் வேங்கான் தெருவில் அமைந்துள்ளது தில்லை திரு ப்பெருந்துறை திருக்கோயில். விவரங்களுக்கு : திரு. வை. பசவராஜ், 9443112098

திருவாதவூரர் (மாணிக்கவாசகர்) வரலாறு | பிறந்த வீடு | சொ.சொ.மீ சுந்தரம் | தென்னாடு

"திருகொள்ளிக்காடு மகிமை! ஜோதிட சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன் பரிகார திருத்தலங்கள் சிறப்புரை"

தாம்பரம் அருகில் ராணுவ மரியாதையுடன் ஜீவசமாதி அடைந்த சித்தர் | நிகழ்ந்த அற்புதங்கள்! | PART 1

கிண்ணி மங்கலம் ஸ்ரீ ஏகநாதர் ஸ்ரீ ஆனந்தவள்ளி தாயார் 81 சித்தர் ஜீவசமாதி#worldolaichuvadi.

ஆவுடையார்கோவில் ஆனி திருமஞ்சனம் 2026 நாள் 7

உங்கள் வாழ்க்கை மாற இந்த குருவே போதும்! Sri Seshadri Swamigal

சிதம்பரம் கோயில் தெற்கு வாசல் ரகசியம் 😲 Chidambaram Temple -South Gate | Nandanar History in Tamil

பற்றி எரியும் அமெரிக்க அரபு நிலைகள் I இஸ்ரேலை இறுதியாக எச்சரித்தது ஈரான் இனி. I Ravikumar Somu

முருகர் பற்றிய இதுவரை வெளி வராத உண்மை வரலாறு? ஆரியர்களின் அட்டூழியம்? -அறிஞர் Dr. Ramachandran

சிவன் மீண்டும் வெளிப்படுவாரா? 63 நாயன்மார்களில் ஸ்ரீமத் தேசிகர் பிடித்த நாயன்மார்கள் யார்?

உள்ளே போனவர்கள் திரும்பி வர முடியாது ஆச்சரியமூட்டும் சித்தர் குகை

மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இடமும், சில உண்மைகளும்

மாணிக்கவாசகர் - வாழ்வும் வாக்கும்

பழனி சொத்தில்...சாட்சி கையெழுத்திட்ட சக்ரபாணி | கோவில் பணத்தில் கட்டிய பிரம்மாண்ட காலேஜ் | Devapriya

Guru namachivayar | குரு நமச்சிவாயர் | jeeva samadhi | barnasalai | பசவராஜ் 9443112098 chidambaram

மாணிக்கவாசகரின் உண்மை கதை | மாணிக்கவாசகர் குருபூஜை | Who is Manikkavasagar | Sivapuranam, Lord Shiva

"Silence Is The Biggest Answer." | Simran on Healing, Letting Go, Forgiveness & Moving On | Gobinath

Vasi Yogam | Chidambara Secret | Kundaliyagam | Vasi Yogam Secret | Vasi Yogam full | kundaliyogam

திருவண்ணாமலையின் மறைந்த அதிசயம்: அறியாத புகழ் | Hidden Place in Thiruvannamalai

