கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில் | பூராடம் நட்சத்திர தலம் | Kaduveli Aagashapureeshwarar Temple
பூராடம் நட்சத்திர தலம் அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் - பூராடம் நட்சத்திரம் மூலவர்: ஆகாசபுரீஸ்வரர் அம்மன்: மங்களாம்பிகை ஊர்: கடுவெளி மாவட்டம்: தஞ்சாவூர் தல வரலாறு: கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான். பூராடம் நட்சத்திர தலம்: சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர். பிராத்தனை தடை நீங்க வழிபட வேண்டிய தலம். தொழில் அபிவிருத்தி ஏற்பட வாஸ்து தோஷம் நீங்க வழிபட வேண்டிய தலம். தலசிறப்பு பூராடம் நட்சத்திர நாளில் இந்த தலத்தில் அனைத்து தேவைதகள் நட்சத்திரம் மற்றும் வாஸ்து பகவான் வழிபடுவதால் பூராடம் நட்சத்திர நாளில் இந்த கோயிலை தரிசனம் செய்ய வாஸ்து தோஷம் நிவர்த்தி ஆகும். வீடு கட்டுவதில் உள்ள சிக்கல் அனைத்தும் நீங்கும். இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (12 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. கோயில் Google map link https://maps.google.com/?cid=37489049... திறக்கும் நேரம்: காலை 8 - 12 மணி, மாலை 5 - 7.30 மணி. பூராடம் நாட்களில் காலை 8 - 1 மணி வரை. ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 8883982714 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 சித்தர் பாடல் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்கு உரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான். தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டும் உடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி. ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர். if you want to support us via UPI id 9655896987@ibl Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்

😲😱இந்த கதவுக்குள் நுழைந்தால் மறு ஜென்மம் கிடையாது | அடுத்த ஜென்மம் கிடையாதா? | கும்பகோணம் 😲

1 நாளில் 9 நவகிரக கோயில்கள்! | 🚌 TNSTC Navagraha Yatra | Special Darshan at All Temples

திரௌபதியின் மர்மமான கேள்வி - பகவான் கிருஷ்ணரின் அற்புதமான பதில் | Mahabharata Secrets

பழனி சொத்தில்...சாட்சி கையெழுத்திட்ட சக்ரபாணி | கோவில் பணத்தில் கட்டிய பிரம்மாண்ட காலேஜ் | Devapriya

மக்களுக்கே இனாமாக கொடுக்கப்பட்ட ஊர்

MUDAKKU | POORADAM | பூராடம் நட்சத்திரம் முடக்கு தோஷம் உங்கள் ஜாதகத்தில் முடக்கு ராசி இதுதான்

பெண்கள் தனியாக யார் வீட்டிற்கும் செல்வதற்கு முன் இதை பார்க்கவும் | True Crime Story In Tamil

'வேம்பில் செய்த அமிர்தம்...' பூரி கோயில் மீது பறவைகள் பறப்பது இல்லை ஏன் தெரியுமா? | APN Swami

மர்மம் நீடிக்கிறது! பொலீஸ்மா அதிபருக்கு துப்பாக்கி எங்கிருந்து வந்தது? விசாரணையில் அதிர்ச்சி!

உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery

சுவிஸ் 🇨🇭குடும்பம் தீவில் கட்டிய வித்தியாசமான வீடு! உள்ளே எப்படி- சுற்றிப் பார்க்கலாமா? யாழ்ப்பாணம்

கடுவெளி சித்தர் வணங்கிய ஆகாசபுரீஸ்வரர் | பூராடம் நட்சத்திர கோவில் | Kaduveli Siddhar Temple

கர்ணனின் கடைசி ரகசியம் | அனுமனிடம் அவன் ஏன் சென்றான்? | Mahabharata Untold Story

பழனி கோவில் நிலம் மீட்பு! | ₹100 Cr Scam — 12 Days, Land Back | CM Vijay's CB-CID Raids | SKA

Sunday Special Surya Bhagavan Bhakti Songs | Surya Suprabatham Tamil 🙏 | Powerful Surya Songs Tamil

பிஜேபியோடு கரம் கோர்க்கும் திமுக. மாறும் அரசியல் களம் | Savukku Shankar

கேரளாவை அழ வைத்த Thusara Case | உங்களுக்கு பெண் பிள்ளை இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய Case

Exploring Kumbakonam & Surroundings| Temple #kumbakonam #tamil #tamilnadu

#பூராடம் ஆக்டிவேஷன் டெக்னிக்ஸ்#pooradam star activation techniques

கடுவெளி சித்தர் பாடல் மூலம் கூறும் அறிவுரைகள்... | Guruve Saranam | JayaTv

DMK - BJP ரகசிய கூட்டணி? மாட்டிக்கொண்ட Puthiya Thalaimurai Vijayan? அதிரடி உண்மைகள்!| TVK Vijay Govt

பூராடம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் வெற்றி பெற இரகசிய வழிபாட்டு முறை #பூராடம் #pooradam #தனுசு

😲😱🙏📿வந்தவாசியில் பல வருடங்கள் மண்ணுக்குள் இருந்த சிவன் ஆலயம் மீட்கும் பணி முழு காணொளி ...

Siddhargal Thiruvadi | Epi .0927 | Kaduveli Siddhar | Kaduveli Siththar Peedam | 18 Siddhar | Part-2

கோவிலுக்கு பூமி பூஜை எப்படி செய்யலாம்......

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு | Thirukattupalli Agneeswarar Temple History

விருச்சிகம் ராசியில் கிரகம் இருந்தால் வெற்றி உறுதி - kovilpatti thangapandian | Birth Time Astrology

