வாராஹி அம்மன் 8 சனிக்கிழமை பிரார்த்தனை|என்ன கேட்டாலும் கிடைக்கும்!!#panchami #varahi #vara#panjami

வாராகி மாலை 1. அன்னை வடிவம் இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே... பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது. செவிகள் -குழை, திருவடிகள் புஷ்பராகம்,  இரண்டு கண்கள் நீலகல், கரங்கள் -கோமேதகம், நகம் -வைரம், சிரிப்பு -முத்து பவளம் போன்ற இதழ். திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும். பயன்படுத்தும் முறை : அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல். 2. அருள்காட்சி வடிவம் தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால் வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி ‘வாலை’ திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு ‘அட்டமா சித்திகளை’ வழங்குவாள் என்று பொருள். பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும். 3. பக்தியின் உச்சம் : மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே. பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி. அதுவும் தூயவர்களை -அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள். அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார். அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான். பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள். எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது. பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும். 4. சக்தியின் வெளிப்பாடு படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில் நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே... பொருள்: தவறிழைக்காத வாராகி பக்தர்கள், இன்னலுக்கு உட்பட்டால் அதற்கு காரணமானவர் பெறும்  தண்டனை கடுமையானது. தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து தும்சம் செய்யும். பக்தரை காக்கும் பேரரணாக தேவி வெளிப்படுவாள் என்று உணர வேண்டும். பயன்பாடு: வீண்பழி நாம் பெறும்போது இப்பாடலை பாடி, நன்மை பெறலாம். 5 வெற்றி பெற செய்யும் விதம்:- “நடுங்காவகை அன்பர் நெஞ்சினில் புக்கவர் நண்ணவளரக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திடும் பாரக் காங்கையின் மீதே ரத்த திலகமிடும் தொடும் கார் மனோன்மணி, வாராகி நீலி தொழிலிதுவே... பொருள்: ஸ்ரீ வாராகி, தாந்த்ரீக பூஜையில் இடம் பெறுபவர்களுக்காக ஸ்ரீ மனோன் மணியையும், காளியையும் அனுப்பி, தன் பக்தனின் மனதில் ஏற்படும் பயத்தை விலக்கி, பகைவர்களை வீழ்த்தி ரத்தத் திலகம் இடுமாறு செய்கிறாள். “வாராகி” நீலி என்றால் பகை முடிப்பது என்று பொருள். பயன்பாடு: மனதில் பயம் ஏற்படும் போது இப்பாடலை பாடி நன்மை பெறலாம். 6. பயம் போக்க: “நாசபாடுவர் நடுங்கப்படுவவர் நமன்கயிற்றால் வீசபடுவர் விளையும்படுவர் இம்மேதினியோர் ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே வாசப் புதுமலர்த் தேனாள் வாராகியை வாழ்த்திலரே. பொருள்: இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று அடுத்தடுத்து பலரும் துன்பப்பட்டு நடுங்குகிறார்கள், என்ன காரணம்? புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் இப்படிப்பட்ட துன்பங்கள் ஏற்படுகின்றது. பயன்பாடு: துன்பம் படும் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். 7. வாராகியை வழிபடுவோர் யார்? “வாலை புவனை திரபுரை மூன்றும் இவ்வகையத்தில் காலையும் மாலையும் ச்சியும் ஆக எக்காலத்துமே ஆலயம் எய்தி வாராகி தன் பாதத்தை அன்பில் உள்ளி மாயைன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே... அணிமா, மகிமா, லகிமா உள்ளிட்ட எட்டு சித்தகளையும் அளிப்பவள், வாலை எனப்படும் பாலா, சகல சவுபாக்கியங்களையும் தருபவள் ஸ்ரீ வாராகி : பகைவர்களை அழித்து வெற்றி அருள்பவள் திரிவுர பைரவி, இந்த மூலவராகவும் காலை, மாலை உச்சிப் பொழுதுகளில் திகழ்கிநாள் ஸ்ரீ வாராகி, அதனால் திருத்தாள்களை திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள். பயன்:- இதை பாடினால் மும்மூர்த்தி அருள் கிடைக்கும். (1) இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடக்கும். அதுவரை என் அன்னை வாராகி உங்களை காக்கட்டும். ஓம் வாராகியே போற்றி....! போற்றி....!

Vaarahi Moola Manthra || வாராஹி மூல மந்திரம் ( 108 times ) - Saradha Raaghav
▶︎

Vaarahi Moola Manthra || வாராஹி மூல மந்திரம் ( 108 times ) - Saradha Raaghav

வராஹி அம்மன் 1008 போற்றி | Varahi Amman 1008 Potri | Listen Daily #VarahiAmman
▶︎

வராஹி அம்மன் 1008 போற்றி | Varahi Amman 1008 Potri | Listen Daily #VarahiAmman

வாராஹி மாலை|Sri Varahi Malai|32 Verses Bass Boosted|Powerful Tamil Devotional Song|WITH FULL LYRICS
▶︎

வாராஹி மாலை|Sri Varahi Malai|32 Verses Bass Boosted|Powerful Tamil Devotional Song|WITH FULL LYRICS

இந்த இடத்தில் தான் அறைந்து வைத்திருக்கிறார்கள்/#devotional #varahi
▶︎

இந்த இடத்தில் தான் அறைந்து வைத்திருக்கிறார்கள்/#devotional #varahi

வைத்த நகை, கொடுத்த பணம் 3 சனிக்கிழமைகளுக்குள் வீடு தேடி வரும்.. | Astrologer Vidhya Karthik
▶︎

வைத்த நகை, கொடுத்த பணம் 3 சனிக்கிழமைகளுக்குள் வீடு தேடி வரும்.. | Astrologer Vidhya Karthik

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ருண நிவாரண கவசம்||    வாழ்க்கையில் உள்ள தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்க உதவும்.
▶︎

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ருண நிவாரண கவசம்|| வாழ்க்கையில் உள்ள தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்க உதவும்.

வராஹிக்கு வைக்கும் ரகசிய பொருள்/1 நாள் வைத்தால் போதும் செம ரிசல்ட்/VarahiAmmanMiracles/VarahiAmman
▶︎

வராஹிக்கு வைக்கும் ரகசிய பொருள்/1 நாள் வைத்தால் போதும் செம ரிசல்ட்/VarahiAmmanMiracles/VarahiAmman

வாராஹி விக்ரஹம் வைத்திருப்பவர்கள் கவனத்துர்க்கு!!|வாராஹி அன்னைக்கு அபிஷேகம் செய்வதற்கான முறையான வழி
▶︎

வாராஹி விக்ரஹம் வைத்திருப்பவர்கள் கவனத்துர்க்கு!!|வாராஹி அன்னைக்கு அபிஷேகம் செய்வதற்கான முறையான வழி

இது உனக்கு கண்டிப்பாக நடக்கும் உடனே தெரிந்து கொள்/#வாராகிஅம்மன் #வாராஹி #varahiblessing
▶︎

இது உனக்கு கண்டிப்பாக நடக்கும் உடனே தெரிந்து கொள்/#வாராகிஅம்மன் #வாராஹி #varahiblessing

Bhakthi Vendum / Devotional Speech
▶︎

Bhakthi Vendum / Devotional Speech

🔴LIVE| ஞாயிறு இன்று கேட்க வேண்டிய ஒளியாய் அருள்தரும் தேவனே சூரியபகவான் பாடல் | Easwaraa Bakthi
▶︎

🔴LIVE| ஞாயிறு இன்று கேட்க வேண்டிய ஒளியாய் அருள்தரும் தேவனே சூரியபகவான் பாடல் | Easwaraa Bakthi

1008 ஸ்ரீ ராமா ஜெயம்  வீட்டில் ஒலித்தால் நன்மைகள் உண்டாகும்| ஸ்ரீராமஜெயம்
▶︎

1008 ஸ்ரீ ராமா ஜெயம் வீட்டில் ஒலித்தால் நன்மைகள் உண்டாகும்| ஸ்ரீராமஜெயம்

வாராஹி மூல மந்திரம் | 21 முறை |  Vaarahi Moola Manthiram | All in All JKS |
▶︎

வாராஹி மூல மந்திரம் | 21 முறை | Vaarahi Moola Manthiram | All in All JKS |

ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் எதிரிகளிடம் இருந்து காக்கும் வாராஹி கவசம் | Varahi Kavacham
▶︎

ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் எதிரிகளிடம் இருந்து காக்கும் வாராஹி கவசம் | Varahi Kavacham

இந்த மாற்றம் உன் வீட்டில் நடந்தே தீரும் 💯/#devotional#varahi
▶︎

இந்த மாற்றம் உன் வீட்டில் நடந்தே தீரும் 💯/#devotional#varahi

அசுர வளர்ச்சி பெற வராஹி அம்மனின் இப்பாடலை தினமும் கேளுங்கள் | varahi amman songs in tamil
▶︎

அசுர வளர்ச்சி பெற வராஹி அம்மனின் இப்பாடலை தினமும் கேளுங்கள் | varahi amman songs in tamil

வாராஹியின் வரலாறு யாருக்கும் தெரியவில்லை..! | Varahi Amman Sirappugal | Vellore Varahi Temple
▶︎

வாராஹியின் வரலாறு யாருக்கும் தெரியவில்லை..! | Varahi Amman Sirappugal | Vellore Varahi Temple

பல தலைமுறை சாபம் நீக்கும் சக்திவாய்ந்த குலதெய்வ காயத்ரி மந்திரம்! Kula Deivatha Gayatri Mantra 108
▶︎

பல தலைமுறை சாபம் நீக்கும் சக்திவாய்ந்த குலதெய்வ காயத்ரி மந்திரம்! Kula Deivatha Gayatri Mantra 108

To Get Back Lost Money and Jewelry | Lakshmi Narasimhar Kubera Devotional Songs Tamil
▶︎

To Get Back Lost Money and Jewelry | Lakshmi Narasimhar Kubera Devotional Songs Tamil

Sri Maha Varahi Moola Mantra 21 Chants By Krishna
▶︎

Sri Maha Varahi Moola Mantra 21 Chants By Krishna