உனைத் தினம் | திருப்புகழ் | திருப்பரங்குன்றம் | Sooryanarayanan
An Official Youtube Channel Of "Soorya Narayanan" Click To Subscribe / @sooryanarayanan Song: #உனைத்தினம் #திருப்புகழ் Composer:#Arunagirinathar#அருணகிரிநாதர் உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. சொல் விளக்கம் உனைத்தி னந்தொழு திலன் ... யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உனதியல்பினை உரைத்திலன் ... உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கொடுன் அடியிணை ... பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை உறப்ப ணிந்திலன் ... பொருந்தப் பணியவில்லை. ஒருதவ மிலன் ... ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உனதருள்மாறா உளத்து ளன்பினர் ... உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் உறைவிடம் அறிகிலன் ... இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் ... ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. உவப்பொடுன்புகழ் துதிசெய ... மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விழைகிலன் ... விரும்புவதும் இல்லை. மலைபோலே கனைத்தெ ழும்பகடது ... மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் பிடர் மிசைவரு ... கழுத்தின் மீது வருகின்ற, கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் ... கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் கதித்த டர்ந்தெறி கயிறு ... என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், அடுகதைகொடு பொருபோதே ... துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, கலக்கு றுஞ்செயல் ... மனம் கலங்கும் செயலும், ஒழிவற அழிவுறு கருத்து ... ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்து அல முறுபொழுது ... நைந்துபோய் யான் துன்புறும்போது அளவைகொள் கணத்தில் ... ஒரு கண அளவில் என்பய மற ... என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயில் முதுகினில் வருவாயே ... மயிலின் முதுகினில் நீ வருவாயாக. வினைத்தலந்தனில் ... போர்க்களத்தில் அலகைகள் குதிகொள ... பேய்கள் கூத்தாடுவதால் விழுக்கு டைந்துமெய் உகுதசை ... ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுண ... கழுகுகள் உண்ணவும், விரித்த குஞ்சியர் எனும் ... விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அவுணரை அமர்புரிவேலா ... அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, மிகுத்த பண்பயில் குயில்மொழி ... நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகிய கொடிச்சி ... அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்கும முலைமுகடு ... குங்குமம் அணிந்த மார்பில் உழுநறை விரைத்த சந்தன ம்ருகமத ... அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த புயவரை உடையோனே ... மலை போன்ற தோள்களை உடையவனே, தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு ... தினந்தோறும், நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி, புனற்சொரிந்து அலர் பொதிய ... நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, விணவரொடு ... தேவர்களும் சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ... கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, மகிழ்வோனே ... அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என ... தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் வரி யளிநறை தெவிட்ட ... இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு அன்பொடு பருகு ... ஆசையுடன் குடிக்கும் உயர் பொழில்திகழ் ... உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப் பரங்கிரி தனிலுறை ... திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண பெருமாளே. ... சரவண மூர்த்தியே. unaiththi nanthozhu dhilanuna dhiyalbinai uraiththi lanpala malarkodun adiyiNai uRappa Nindhilan oruthava milanuna ...... dharuLmARA uLaththu Lanbinar uRaividam aRigilan viruppo dunsika ramumvalam varugilan uvappo dunpugazh thudhiseya vizhaigilan ...... malaipOlE kanaiththe zhumpaga dathupidar misaivaru kaRuththa venchina maRalithan uzhaiyinar kadhiththa darndheRi kayiRadu gadhaikodu ...... porupOdhE kalakku Runseyal ozhivaRa azhivuRu kaRuththu naindhala muRupozhy dhaLavaikoL kaNaththil enbayam aRamayil mudhuginil ...... varuvAyE vinaiththa lanthanil alagaigaL kudhikoLa vizhukku daindhumey ugudhasai kazhuguNa viriththa kunjiyar enumavu Naraiamar ...... purivElA miguththa paNpayil kuyilmozhi azhagiya kodichchi kungkuma mulaimuga duzhunaRai viraiththa chandhana mrugamadha buyavarai ...... udaiyOnE dhinaththi namchathur maRaimuni muRaikodu punaRcho rinthalar podhiyavi Navarodu chinaththai nindhanai seyumuni vararthozha ...... magizhvOnE thenaththe nanthana enavari aLinaRai thevitta anbodu paruguyar pozhilthigazh thiruppa rangiri thaniluRai saravaNa ...... perumALE.

அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

கூற்றாயின வாறு பதிகம்

திருப்புகழ் | உனைத் தினம் | அருணகிரிநாதர் | Poorna #murugan #tamildevotionalsongs #devotionalhits

பகவன் நாமா சொல்றவாளுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவும் கிடையாது! | சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத் | உபன்யாசம்

திருச்செந்தூர் திருப்புகழ் முற்றோதல் இசை விழா

தொந்தி சரிய|thondhi sariya|திருப்புகழ்|Thiruppugazh

Maadu Meikkum Kanne | Vande Guru Paramparaam | Paavani Cotah & Sooryanarayanan

வேல் வகுப்பு - அருணகிரிநாதர் அருளியது

உனைத் தினம் தொழுதிலன் திருப்புகழ் பாடல் விளக்கம் discourse by Smt Srividhya

Vizhi Kidaikuma | MahaPeriyava | விழிகிடைக்குமா | Sooryanarayanan

உடல் சக்கரங்கள் தானாக Activate ஆகும் | Kailaya Vathiyam | Maha Shivratri | Sivan Music | IBC Bakthi

Bhajan by Sivasri skandaprasad at Skanray Technologies

சரண கமலாலயத்தை | திருப்புகழ் | சுவாமிமலை | Sooryanarayanan

தண்டையணி|Sooryanarayanan|திருப்புகழ் |Thandayani

இந்த திருப்புகழை மனமுருகி 21 முறை பாடினால் வெற்றி நிச்சயம் | திருப்புகழ் விளக்கம் |Thirupugazh

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra Thaai Thanai Maga Maranthalum | நடராஜர் அபிஷேகம் | Shiva Song

Tondhi Sariya | Sivasri Skandaprasad | Tiruppugazh | Muruga | Devotional | High energy

சைவ சித்தாந்தம்-உண்மை விளக்கம் (பாடல் 01 முதல் 06வரை)

Vizhi Kidaikkuma Abhaya Karam Kidaikkuma | Soulful Devotional Song | Prayer for Divine Grace

