மூன்றாம் திருமுறை | 04 | திருவாவடுதுறை பதிகம் | செல்வம் பெற ஓத வேண்டிய பதிகம் | #உமாநந்தினி
திருஞானசம்பந்தர் தேவாரம், மூன்றாம் திருமுறை,பதிகம் 04 திருவாவடுதுறை பதிகம் ராகம்: கேதாரகௌளை பண்: காந்தார பஞ்சமம் தாளம்: ஆதி இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 1 வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 2 நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 3 தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதில் எரிஎழ முனிந்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 4 கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 6 வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 7 பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 8 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 10 அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே 11 திருச்சிற்றம்பலம்.....🙏 Pictures courtesy: திருவாவடுதுறை, மாசிலாமணி ஈஸ்வரர் கோயில்.🙏🙏 பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு / %e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae... தயா சிம்சுபாவின் வலையொளி தளத்தின் தொடர்பு / kaveritamilcreations தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு • தமிழினி அருள்ராஜ்

மாசில் வீணையும் மாலை மதியம் | தனித்திருக்குறுந்தொகை | திருநாவுக்கரசர் தேவாரம் | #உமாநந்தினி

💥 CM Vijay speech | Action mode at the Tamil Nadu Assembly

Pinhole Glasses: The Vision Improvement Miracle? | Improve Eyesight? | Review!! | Healer Baskar

கேன்சர் மிரண்டு ஓடணுமா? இந்த பழம் சாப்பிடுங்க | Health Cafe

பா.உமா நந்தினி💥எட்டாம் திருமுறை 💥01 💥 🌸சிவபுராணம் 🌸#உமாநந்தினி

பகவன் நாமா சொல்றவாளுக்கு வெட்கம், சூடு, சொரணை எதுவும் கிடையாது! | சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத் | உபன்யாசம்

Alexander Babu speech | Karu Palaniappan's Cooker | 'Kudhupi' Book Launch event

ஞானசம்பந்தரின் மதுரை விஜயம் | சம்பந்தர் அடிச்சுவட்டில் | Thirugnana Sambandar | Part 13

மகளுக்கு வாழ்த்து சொன்ன உன்னிகிருஷ்ணன் - Uthara Unnikrishnan | IBC Bakthi Awards 2025 🏆

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra Thaai Thanai Maga Maranthalum | நடராஜர் அபிஷேகம் | Shiva Song

விடந்தீர்த்த திருப்பதிகம் | திருநாவுக்கரசர் | ஒன்றுகொலாம் | #உமாநந்தினி

🔥CM Vijay Fiery Speech🔥| TVK CM Vijay Full Speech | ஆரம்பமே எரிமலையாய் வெடித்த CM விஜய் | Goosebumps

திருவாசகத்தில் ஒரு வாசகம் - 01 | Thiruvasagathil Oru Vasagam | வாதவூரடிகள் | Bakthi TV | Tamil

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் | உமா நந்தினி பாலகிருஷ்ணன் | இசைச்சொற்பொழிவு-காணொலி-1

பாகிஸ்தானை நொறுக்கி எடுத்த ஆப்கானிஸ்தான் - Major Madhan Kumar

🔴 CM விஜய் சொன்ன ஒரு வார்த்தை..😱 கடுப்பாகி கத்திய உதயநிதி ஸ்டாலின்

Madurai Meenakshi Temple | 1956 Documentary

Books that feed my divine thirst | ஆன்மீக அறிவூட்டும் புத்தகங்கள் #aanmeegam #panniruthirumuraigal

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

